மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி ஐந்து முதல் மழை

 பகுதி ஐந்து முதல் மழை 

  1. காந்தார அரண்மனையின் மங்கல் அறையில் வசுமதி காத்திருந்தாள். ஏழு நாட்கள் மணச்சடங்குகள் முடிந்திருந்தன. லாஷ்கர முறையிலும், வைதிக முறையிலும் மணம் நிகழ்ந்திருந்தது. மூன்று சூதப்பெண்கள் வந்து மங்கல நாளுக்கான தேவனை எழுப்ப வந்திருப்பதாக சொன்னனர். பனிரெண்டாவது ஆதித்யனான பகனின் கதையைச் சொன்னார்கள். விண்ணோர் கடைந்த அமுதை பகன் முதலில் உண்டான். தேவர்கள் முறையிட ருத்ரன் அவன் கண்களை எரித்தான். விழியிழந்த பகன் தன் மனைவி ஸித்தி துணையோடு விண்ணெங்கும் அலைந்தான்.அவள் காதலின் ஒளியாலேயே கண்ணொளி பெற்றான். அவள் காதலின் வல்லமை கண்டு அகம் மகிழ்ந்த ருத்ரன் அவன் விழிகளைத் திருப்பி அளித்தான் என்றனர். அவர்கள் சென்றதும் திருதராஷ்டிரன் உள்ளே வந்தான். அவளிடம் வராமல் தயங்கி நின்றான். கண்தெரியாமையால் அவன் உடலில் ஏற்படும் குறிகள் அவளுக்குள் மெல்ல விருப்பமூடுபவையாக மாறுவதைக் கண்டாள். மெல்ல அவனை நெருங்க, அவன் இவளை வருட, பின் அணைத்துக் கொள்கிறார்கள். அவன் அவள் வாசனையை அறிந்ததைப் பற்றிச் சொல்கிறான். பின் இசை பற்றிப் பேசுகிறான். அவள் அவன் இசையைத் தன்னாலும் கேட்க முடியும் என்றாள். பின் அணைத்த போது அவன் நெஞ்சில் கேட்ட இசையைச் சொன்னாள். மீண்டும் அணைத்த போது அந்த இசையைக் கேட்க முடியவில்லை. அன்னைக்கும் விதுரனுக்கு அடுத்து அவளுக்குத் தன் நெஞ்சில் எப்போதும் இருக்கும் என்று சொன்னது அவனை அணைத்த போதுதான் அவள் அந்த இசையைக் கேட்டாள். பின் அவள் நினைவுகள் எங்கெங்கோ செல்ல, சக்ஷுஷ் தேவதையிடம் உரையாடுகிறாள். அவனுடன் அவன் உலகில் வாழ ஒரே வழி அவனைபோல விழியின்றி வாழ்வதுதான் என்றபடி தன் கண்களைக் கட்டிக் கொள்கிறாள்.

  2. அரசியர் அஸ்தினாபுரி செல்கிறார்கள். பாலை நிலப்பயணம். சகுனி சில நாட்களிலேயே அஸ்தினாபுரி வருவதாகச் சொல்லியிருந்தான். சோதரிகள் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் செல்கின்றனர். மதியம் ஓய்வெடுத்துப் பின் பயணம் தொடர்ந்தனர். சூதப்பெண்கள் கதைசொல்ல வண்டிக்குள் நுழைந்தனர். அத்ரி அனசூயை கதை. இந்திரன் பூமி மீது சினம் கொண்டு மழைமுகில்கலை ஒளித்து வைத்தான். தானென்றறிந்த புழு பொறாமையை வென்றது. என் குலம் தழைக்க வேண்டுமென்று அனசூயையை வேண்டியது. அவள் கருணையால் மழைபொழிந்து, விண்ணகத்தில் இருள் பரவ இந்திரன் வெளியே வந்தான். மழைமுகில்களை விடுவித்தான். நாரதர் இதை சிவனுக்குச் சொல்லி அவள் அன்னையின் கருணையை விதந்தோதினார். அவள் கருணையை சோதிக்க மும்மூர்த்தியர் வேதியர் வேடம் கொண்டு சென்றனர். ஆடையின்றி நீ எமக்கு அமுது படைக்க வேண்டுமென்றனர். அவள் தன் தவ வலிமையால் அவர்களைக் குழந்தையாக்கினாள். ஆடையின்றி வந்து முலையமுதூட்டினாள். மும்மூர்த்தியர் அன்னையின் அன்பை அறிந்தனர். அவளுக்குத் தத்தாத்ரேயன் என்ற ஒரே குழந்தையாகப் பிறந்தனர். பிரம்மதேவனிடம் வேதம் கற்கச் சென்ற அவரை நாலு வேதங்களும் அவர் அன்னையின் முலைப்பால் வாசனியறிந்து நாய்களாய் மாறிப் பின் தொடர்ந்தன. எல்லாரும் உறங்கிவிட அவள் தன் கனவில், பாலையில் ஒரு பீலிப்பனையைப் பார்த்தாள். அங்கிருந்த ஒருத்தி அதன் பூ ஒரு நுண்வடிவக்காடு என்றாள். காட்டைக் கருவிலேந்திய மரம் தனித்துதானே நிற்க முடியும் என்றாள்.

  3. ருத்ராணிருத்ரம் கதை- சனத் குமாரர்களைப் படைத்த பிரம்மன் அவர்கள் பல்கிப்பெருக மறுத்தபடியால் சினமடைந்தான். புருவ நடுவில் சினம் குழந்தையாகப் பிறந்தது. அவற்றை இரண்டாகப் பிரித்து இருதிசையில் போட்டான். ஒன்று பதினோரு ருத்ரர்களாகவும், மற்றொன்று பதினோரு ருத்ரைகளாகவும் மாறி ஆகாயத்தை நிரப்பிக் கிடந்தன. பாலையில் தவத்திலமரிந்த பிரகஸ்பதி தன்னுள் எழுப்பிய ஆகாயத்தில் அனைவரையும் பார்த்தார். ஆனால் அந்தத் தனலில் உடல் வெந்தார். அவரது சாம்பற்துளிகள் ருத்ராக்ஷ மரங்களாயின. சமநிலத்தில் காணும் அம்மரங்கள் கொண்ட இடம் ருத்ராணிருத்ரம் எனப்பட்டது. அங்கு தவம் செய்த அஷ்டவக்ர மகாமுனிவர் இட்ட சிவக்குறி அனைவராலும் வணங்கப்படுகிறது. அங்கு மணக்குழுவினர் பூசனைக்கு நின்றனர். மழையே இல்லா இவ்விடத்தில் இச்சுனைக்கு நீர் எங்கனம் வந்தது என்றான் விதுரன். இமயமலைப்பாறைகளில் உள்ள வெடிப்புகள் மூலம் இங்கு நீர் கசியலாம். மண்ணுக்குள்ளே கண்காணா நதிகள் ஓடுகின்றன.அவை இங்கு கசியலாம். ஆனால் அங்கு 8 ஆண்டுகளாக மழை இல்லை. பின் பூசனை நடக்கையில் குருதிப்பூசனை செய்யவேண்டாம் என்றனர். ஆனால் பீஷ்மர் வேல் பட்டு வீரனின் தோள் கிழிந்து குருதித் துளிகள் மண்ணில் சொட்டுகின்றன. அவற்றை எடுத்து படைக்கிறார் சூதர். மெல்ல மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கின்றன. அவை குருதி மழையாகக் கொட்டுகின்றனர். ருத்ரர்கள் அஸ்தினாபுரி நோக்கிச் செல்கிறார்கள். அங்கும் குருதி மழை கொட்டுகிறது. வீரர்கள் இது என்னவென்றறியாது குழம்புகிறார்கள்.

  4.  சத்யவதி அரண்மனையில் விழித்தபோது மழை துவங்கியிருந்தது. மணப்பெண் மழையோடு வருகிறாள் என்று பேசுகின்றனர். அமைச்சர்களுடன் பேச்சு. சூதர்கள் முதலில் காந்தாரியைப் பாடவில்லை என்றும், அவள் கண்களைக் கட்டிக்கொண்டதும், இப்போது குலதெய்வமாகவே ஆகிவிட்டாள் என்றும் பேசினர். மணநிறைவுச் செய்தியை முடிசூட்டு விழாச் செய்தியாக அனைத்து மன்னர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று சொன்னாள் சத்யவதி. மீண்டும் மழை வர்ணனை. அம்பாலிகை உடல் நலம் குன்றியிருப்பதாகக் கேள்விப்படுகிறாள். மதியம் ஓய்வெடுத்து பின் தயாராகிறாள். மழை ஓய்ந்திருக்கிறது. கோட்டை வாயிலில் சத்யவதியும் மக்களும் காத்திருக்கிறார்கள். மணப்பெண்கள் வரும்போது மழை வலுக்கிறது. சத்யவதி நின்றிருக்கும் பந்தல் பறக்கிறது. மழை பேயாட்டம் போட உள் நுழைகிறாள் வசுமதி தன் சோதரிகளோடு.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை