Posts

Showing posts from May, 2021

முதற்கனல் - வாசிப்பு

முதற்கனல் - வாசிப்பு ஜெ தளத்தில் அன்புள்ள ஜெ, நீண்ட ஆண்டுகளுக்குப் பின் கடிதம். பீமனின் குறுக்காக விழுந்த வாலைப்போல் வெண்முரசு விழுந்து கிடந்தது. தினமும் உங்கள் தளத்தில் மேய்ந்தாலும் கட்டுரைகளை மட்டுமே (இலக்கிய, ஆன்மிக) வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.வெண்முரசை வாசிக்காமல் உங்களுக்கு கடிதம் எழுத எனக்குத் தகுதியில்லை என்று எண்ணியிருந்தேன். அதை வாசிக்காததனாலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா பற்றி தங்கள் தளத்தில் கடிதம் கண்டும் சேரலாமா என்ற தயக்கம் இருந்தது. தயக்கத்தை மீறி சௌந்தர் அண்ணாவுக்கு மின்னஞ்சல் அனுப்பி வட்டத்தில் இணைந்தவுடன் புரிந்தது. இதில் சேர்வதன் மூலமே வெண்முரசை என்னால் வாசித்து முடிக்கக் கூடிய ஊக்கத்தைப் பெற இயலும் என்று.வசந்த காலத்தைத் தாண்டும் துடிப்பே அதை வசந்தமாக்கி விடும் என்று நீங்கள் சொல்வதைப் போல. சேர்ந்து விட்டேன். இம்மாதம் 20ம் தேதி முதற்கனல் கலந்துரையாடல் இருந்தது. ஐந்து நாட்களில் முதற்கனலை இரண்டாம் முறையாக வாசித்து (ஏற்கனவே நீலம் வரை வாசித்து விட்டிருந்தேன்.) அதற்கு அத்தியாயக் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். இக்குறிப்புகள் வாசித்தபின் என் மனைவி அனு

ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் மோட்சம் சிறுகதை குறித்து

மோட்சம் - கடிதம் ஜெ தளத்தில்   அன்புள்ள   ஜெ , தாங்கள் பகிர்ந்த ஜி . எஸ் . எஸ் . வி . நவீனின் மோட்சம் சிறுகதையை வல்லினத்தில் வாசித்தேன் . மிகவும் காத்திரமான , வாசிப்பில் வலியின்பம் தரும் கதை . பொதிகைமலை விளிம்புகளில் குடிகள் அமைந்த நிலமென்பதே நானறியாத வெளி . அதன் சேரிகள் , மனிதர்கள் , தெய்வங்கள் ( சொற்கேளா வீரன் , குருந்துடையார் அய்யனார் , சூட்சமுடையார் சாஸ்தா ) அனைத்துமே ஒரு கனவுத்தன்மையைக் கூட்டின . உயிர் காக்கும் மருத்துவரையும் காறி உமிழ்ந்து கடந்து செல்லும் மனிதர்கள் நம் மத்தியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பன போன்ற சாதிய அடக்குமுறை சார்ந்த கொடுமைகளின் ஆலாபனையுடன் கதைக்குள் நுழைந்தேன் . இது கழுவேற்றம் பற்றிய கதை என்று ஆசிரியர் இரண்டாவது வரியிலேயே உறுதி அளித்து விடுகிறார் .  கழுவேற்றத்துக்கான அத்தனைத் தயாரிப்புகளையும் , கழுவேற்ற நிகழ்வையும் கூடத் துல்லியமாகவும் , பீபத்ஸ சுவையுடனும் விவரித்து கிலி ஏற்படுத்துகிறார் . கதைகளின் வழியே மட்டும் கேட்டிருந்த கழு நிஜத்தில் நிகழ்கையில் அது அங்கிருந்தவர்களிடம் ஒரு க