மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி ஐந்து முதல் மழை
பகுதி ஐந்து முதல் மழை காந்தார அரண்மனையின் மங்கல் அறையில் வசுமதி காத்திருந்தாள். ஏழு நாட்கள் மணச்சடங்குகள் முடிந்திருந்தன. லாஷ்கர முறையிலும், வைதிக முறையிலும் மணம் நிகழ்ந்திருந்தது. மூன்று சூதப்பெண்கள் வந்து மங்கல நாளுக்கான தேவனை எழுப்ப வந்திருப்பதாக சொன்னனர். பனிரெண்டாவது ஆதித்யனான பகனின் கதையைச் சொன்னார்கள். விண்ணோர் கடைந்த அமுதை பகன் முதலில் உண்டான். தேவர்கள் முறையிட ருத்ரன் அவன் கண்களை எரித்தான். விழியிழந்த பகன் தன் மனைவி ஸித்தி துணையோடு விண்ணெங்கும் அலைந்தான்.அவள் காதலின் ஒளியாலேயே கண்ணொளி பெற்றான். அவள் காதலின் வல்லமை கண்டு அகம் மகிழ்ந்த ருத்ரன் அவன் விழிகளைத் திருப்பி அளித்தான் என்றனர். அவர்கள் சென்றதும் திருதராஷ்டிரன் உள்ளே வந்தான். அவளிடம் வராமல் தயங்கி நின்றான். கண்தெரியாமையால் அவன் உடலில் ஏற்படும் குறிகள் அவளுக்குள் மெல்ல விருப்பமூடுபவையாக மாறுவதைக் கண்டாள். மெல்ல அவனை நெருங்க, அவன் இவளை வருட, பின் அணைத்துக் கொள்கிறார்கள். அவன் அவள் வாசனையை அறிந்ததைப் பற்றிச் சொல்கிறான். பின் இசை பற்றிப் பேசுகிறான். அவள் அவன் இசையைத் தன்னாலும் கேட்க முடியும் என்றாள். பின் அணைத்த போது அவன்