வாசிப்பிற்கான புத்தகங்கள்
இந்த ஆண்டு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது நிறைய நாவல்கள் வாங்க வேண்டுமென்ற முடிவோடு சென்றிருந்தேன். போனபிறகு புத்தி மாறிவிட்டது. தத்துவம் பக்கம் மனம் சாய்ந்து விட்டது. இருப்பினும் ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டுதான் வந்தேன். சில புத்தகங்களை வாங்குவதற்கு நண்பன் ஜெயச்சந்திரன் உதவினான். வேதாந்தம் மற்றும் ஆன்மீகப் புத்தகங்களை வாங்குவதற்கு அவன்தான் எனக்கு வழிகாட்டி. நான் வாங்கிய புத்தகங்கள் 1. பகவத் கீதா – சாதக சஞ்சீவினி இரு பாகங்கள் – ஸ்வாமி ராம்சுகதாஸ் அவர்களின் விளக்கவுரை. 2. உத்தவ கீதா – பொழிப்புரை 3. ஸ்ரீமத் பாகவதம் – பத்தாவது ஸ்கந்தம் ( மேற்கண்ட மூன்றும் கீதா பிரஸ் வெளியீடு. இதோடு சுசீலா ஓர் இலட்சியப் பெண்மணி போன்ற நல்லறிவு கொடுக்கும் குட்டிப் புத்தகங்களையும் வாங்கினேன்). 4. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா பதிப்பகம். 5. யயாதி இரு பாகங்கள் – வி. எஸ். காண்டேகர் – அல்லயன்ஸ் பதிப்பகம். 6. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து. 7. இராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்)– இராஜாஜி – வானதி பதிப்பகம் 8. மஹாபாரதம் (வியாசர் விருந்து) – இராஜாஜி – வானதி பதிப்பகம் 9. தர்மத்தின் மதிப்புதான் என்ன? – ஸ்வாமி தயானந்