national Book Trust லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
national Book Trust லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மார்ச், 2015

சிவராம காரந்தின் அழிந்த பிறகு

சிவராம காரந்தின் அழிந்த பிறகு
சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன் எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில் ஒன்று இது.
ரயிலில் நட்பு கொண்ட நண்பர் யசவந்த ராயர் மரணத்துக்குப் பிறகு அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஆசிரியர் சிவராம காரந்த். இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் நண்பரின் உறவினர்கள் மூலமாக யசவந்தரின் வாழ்க்கை குறித்தும், அவரது மேன்மையான பண்பு நலன்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். மட்டுமன்றி நற்பண்புகள் நிறைந்த ஒருவனைச் சுற்றி வாழும் சுயநலம் மிகுந்த உறவுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். நண்பர் உயிரோடிருந்தால் தன்னை நம்பியிருந்த, தன் நலனையே பெரிதென மதித்த உயிர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பாரோ அவற்றைத் தன் கடமையாகவே எண்ணி செய்து முடிக்கிறார் ஆசிரியர். யசவந்த ராயரின் உறவுகளினூடாக ஆசிரியர் நிகழ்த்தும் பயணமே நாவலின் கதை.
       யசவந்த ராயர் இறப்பதற்கு முன் அவர் இறுதிக்காலத்தில் வரைந்த ஓவியங்களையும், நாட்குறிப்புகளையும், தன்னிடமிருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தையும் சிவராமகாரந்திடம் விட்டுச் செல்கிறார். அந்நாட்குறிப்புகளையும், அவரது ஓவியங்களையும் கொண்டு, தான் சிறிது காலமே பழகியிருந்த நண்பரின் குணச்சித்திரம் பற்றிய கற்பனையை உருவாக்கிக் கொள்கிறார் ஆசிரியர். நான்கு பேருக்கு தன் பெயரில் மாதாமாதம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார் யசவந்தர். அந்த நான்கு பேரையும் சந்தித்து நண்பரின் ஆளுமையைப் பற்றி அறிய விழைகிறார் காரந்த். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் யசவந்தரின் உறவினர்களும், ஊர் மக்களும் அவரைப் பற்றிச் சொல்லும் கதைகளும், நிகழ்ச்சிகளும் அவர் பற்றித் தான் மனத்தில் வரைந்து வைத்திருந்த சித்திரம் சரியே என்பதை காரந்துக்கு உறுதிப் படுத்துகின்றன. யசவந்தரைச் சுற்றியிருந்த உறவுகளில் யார் அவர் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்பதையும், யார் அவர் செல்வத்தின் மீது மட்டும் குறியாயிருப்பவர்கள் என்பதையும் அவரது பயணம் அவருக்கு உணர்த்துகிறது. அவர் மீது அன்பு கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், வாழ்க்கைக்கு உதவும் வண்ணமும் அவர் தன்னிடம் அளித்துச் சென்ற பணத்தைச் செலவிடுகிறார். தன் நண்பரின் கடமையைத் தானிருந்து செய்து முடித்து விட்ட திருப்தியில் மனம் நிறைகிறார்.
       நாவலில் கன்னட நிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சித்திரங்களாக அறிமுகப்படுத்துகிறார் காரந்த். அவருக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வம் யசவந்த ராயர் இறுதியாக விட்டுச் சென்ற ஓவியங்களை அவர் விவரிப்பதிலிருந்து தெரிகிறது. கதை முழுக்க ஒரு பெயராகவே வரும் யசவந்தர் தன் உயர்ந்த பண்பு நலன்களாலும், உறுதியான கொள்கைகளாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு இருக்கும் சில ஒவ்வாத பலவீனங்கள் கூட அவரது ஆளுமையின் பிரம்மாண்டத்தின் முன் மறைந்து விடுகின்றன.

       வேகமாகச் செல்லும் நாவல். வாசிக்கச் சுகமாகவும், ஸ்வாரஸ்யமாகவும் உள்ள நாவல். சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பு அருமையானது; எளிமையான சொற்களும், சிக்கலில்லாத வாக்கியங்களும் கொண்டது. தேசிய புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை www.openreadingroom.com என்ற தளத்தில் வாசிக்கலாம். தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் பல முக்கியமான இந்திய நாவல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அழியாச் சுடர்கள், உலக இலக்கியம் தளங்கள் போன்று இத்தளமும் பரவலாக இலக்கிய வாசகர்களிடத்துச் சென்றடைய வேண்டும்.  

6 ஆகஸ்ட், 2011

தேசிய புத்தக நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.


1 அக்னி நதி உருது. கு அதுல் ஐன் ஹைதர் .தமிழாக்கம் சௌரி
2 அரை நாழிகை நேரம். மலையாளம் .பாறப்புறத்து தமிழாக்கம். பெ நாராயணன்
3 அவன் காட்டை வென்றான் தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி .தமிழாக்கம் எதிராஜுலு
4 இதுதான் நம் வாழ்க்கை .பஞ்சாபி . தலீப் கௌர் டிவானா .தமிழாக்கம் தி சா ராஜு
5 இயந்திரம் மலையாளம் .மலையாற்றூர் ராமகிருஷ்ணன் .தமிழாக்கம் கெகெபிநாயர்
6 இலட்சிய இந்து ஓட்டல் . வங்காளி. பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் த ந சேனாபதி
7 உம்மாச்சு . மலையாளம் உரூப் தமிழாக்கம் இளம்பாரதி
8 உயிரற்ற நிலா . ஒரியா . ஆர் உபேந்திர கிஷோர் தாஸ் தமிழாக்கம் பானுபந்த்
9 ஏணிப்படிகள் . மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சி ஏ பாலன்
10 ஒரு குடும்பம் சிதைகிறது கன்னடம் எச் எல் பைரப்பா தமிழாக்கம் எச்.வி.சுப்ரமணியம்
11 கங்கவ்வா கங்காமாதா .கன்னடம். சங்கர் மொகாசி புனேகர் தமிழாக்கம் எம் வி வெங்கட் ராம்
12 கங்கைத்தாய் . இந்தி . பைரவப் பிரசாத் குப்தா தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்
13 கங்கைப்பருந்தின் சிறகுகள் . அசாமி . லக்ஷ்மீ நந்தன் போரா . தமிழாக்கம் துளசி ஜெயராமன்
14 கடைசியில் இதுதான் மிச்சம் .தெலுங்கு .ஆர் புச்சிபாபு தமிழாக்கம் பிவி சுப்ரமணியம்
15 கவிதாலயம் . உருது. ஜிலானி பானு . தமிழாக்கம் முக்தார்
16 கறுப்புமண் . தெலுங்கு. பாலகும்மி பத்மராஜு .தமிழாக்கம் பா பாலசுப்ரமணியம்
17 கறையான் .வங்காளி . சீர்ஷேந்து முக்கோபாத்யாய. சு.கிருஷ்ணமூர்த்தி
18 கிராமாயணம் . கன்னடம் . ராவ் பகதூர் . தமிழாக்கம் எஸ் கெ சீதாதேவி
19 சிக்க வீரராஜேந்திரன் . கன்னடம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார். தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்
20 சிப்பியின் வயிற்றில் முத்து . வங்காளி. போதிசத்வ மைத்ரேய தமிழாக்கம்சு.கிருஷ்ணமூர்த்தி
21 சூரியகாந்திப்பூவின் கனவு . அசாமி . சையத் அப்துல் மலிக் தமிழாக்கம் கரிச்சான் குஞ்சு
22 சோறு தண்ணீர் . ஒரியா. கோபிசந்து மகாந்தி . பானுபந்த்
23 சோரட் உனது பெருகும் வெள்ளம் . குஜராத்தி. ஜாவேர் சந்த் மோகாணி .சு.கிருஷ்ணமூர்த்தி
24 தர்பாரி ராகம். இந்தி. ஸ்ரீலால் சுக்ல. தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்
25 தன்வெளிப்பாடு . வங்காளி. சுனில் கங்கோபாத்யாய .தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி
26 திருமணமாகதவன் . வங்காளி .சரத் சந்திரர் தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி
27 துளியும் கடலும். இந்தி . அம்ரித்லால் நாகர் . தமிழாக்கம் துளசி ஜெயராமன்
28 நான் . மராட்டி . ஹரிநாராயண் ஆப்தே தமிழாக்கம் மாலதி புனதாம் பேகர்
29 நீலகண்டபறவையைதேடி . வங்காளி . அதீன் பந்த்யோபாத்யாய. தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி
30 பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துதோழியும் . மலையாளம். வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் சி எஸ் விஜயம்
31 மய்யழிகரையோரம் . மலையாளம். எம் முகுந்தன் தமிழாக்கம் இளம்பாரதி
32 மறைந்த காட்சிகள் . இந்தி .பகவதிசரண் வர்மா தமிழாக்கம் ந வீ ராஜ கோபாலன்
33 மித்ரா வந்தி . பஞ்சாபி. கிருஷ்ணா சோப்தி தமிழாக்கம் லட்சுமி விஸ்வநாதன்
34 முதலில்லாததும் முடிவில்லாததும் . கன்னடம். ஸ்ரீரங்க. தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்
35 யாகம் . தெலுங்கு. காலிபட்டினம் ராமராவு தமிழாக்கம் பா பாலசுப்ரமணியம்
36 ராதையுமில்லை ருக்மினியுமில்லை . பஞ்சாபி. அம்ரிதா பிரீதம் தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்
37 வாழ்க்கை ஒரு நாடகம் . குஜராத்தி. பன்னா லால் பட்டேல். தமிழாக்கம் துளசி ஜெயராமன்
38 வானம் முழுவதும். இந்தி. ஆர் ராஜேந்திர யாதவ் தமிழாக்கம் மு ஞானம்
39 விடியுமா ? . இந்தி. ஸதிநாத் பாதுரி தமிழாக்கம் என் எச் ஜெகன்னாதன்
40 விஷக்கன்னி மலையாளம். எஸ்.கெ. பொற்றெகாட் தமிழாக்கம் குறிஞ்சிவேலன்
41 வெண்குருதி . பஞ்சாபி. நானக் சிங் தமிழாக்கம் துளசி ஜெயராமன்
42 இந்துலேகா மலையாளம் ஓ சந்துமேனன் தமிழாக்கம் இளம்பாரதி
43 ஏமாற்றப்பட்ட தம்பி . தெலுங்கு. பலிவாடா காந்தாராவ் .தமிழாக்கம் பா பாலசுப்ரமணியன்
44 வினைவிதைத்தவன் வினையறுப்பான் . எம் எஸ் புட்டண்ண தமிழாக்கம் பாவண்னன்
45 காகித மாளிகை . தெலுங்கு. முப்பால ரங்கநாயகம்ம தமிழாக்கம் பா பலசுப்ரமணியன்
46 அழிந்த பிறகு கன்னடம் சிவராம காரந்த் . தமிழாக்கம் சித்தலிங்கய்யா

மேலும் வாசிக்க