மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி நான்கு: பீலித்தாளம்

 பகுதி நான்கு பீலித்தாளம்

  1. அமைச்சர் சத்ய்விரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் ஸ்வேதசிலை என்ற லாஷ்கர கிராமத்துக்குச் சென்றனர். அவர் அளித்த பரிசுகளைப் பெற்ற குலமூத்தோர் கான்டாரியை வாழ்த்தினர். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசிக்குத் தாலி சுருட்ட வேண்டும் என்பது விதி. லாஷ்கரப் பெண்கள் எல்லாத் திசைகளிலும் பல நாட்கள் பயணம் செய்து ஒருத்தி அதைக் கண்டுபிடித்தாள். தாலி சுருட்டும் நிகழ்வு மிகுந்த விமரிசையாக நடக்கிறது. அதை உப்பரியிகையிலிருந்து தன் பத்து சகோதரியருடன் பார்க்கிறாள் வசுமதி. அவள் சிறுதங்கை விளையாடிக் கொண்டிருக்கிறாள். வசுமதி தான் இந்த மண், இதன் உறவுகள் இவற்றை இழக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு சூதப்பெண் அவள் குருடனை மணக்கவிருப்பது பற்றி பகடியாகச் சொன்னது பற்றிக் கூறுகிறாள்.

  2. அஸ்தினாபுரியிலிருந்து திருதராஷ்டிரனும், மணமகன் வீட்டாரும் காந்தாரனகரி நோக்கிக் கிளம்புகின்றனர். தார்த்தன் மிகுந்த பதட்டத்துடன் இருக்கிறான். தன் நகைகள், ஆடைகள் குறித்து ஆர்வமுடன் இருக்கிறான். விதுரனை தன்னிடமே இருக்கச் சொல்கிறான். இசை பற்றிப் பேசுகிறான். விதுரன் தான் காவியத்தில் பலமுறை வாழ்வது பற்றிக் கூறுகிறான். தான் பேரழகியைத் திருமணம் செய்வதும், போகமும், அரசபதவியும் வேண்டுமென்பதும், அள்ளி அள்ளி உண்பதும் தன்னைப் படைத்த தெய்வங்களுக்குத் தான் அளிக்கும் பதில் என்றான் திருதராஷ்டிரன். நீங்கள் சொன்னது ஷாத்ரம் என்பதன் சரியான இலக்கணம். நீரே சரியான க்ஷத்ரியன் என்றான் விதுரன்.

  3. சகுனியும், விருஷகனும் வரவேற்கிறார்கள் - திருதராஷ்டிரன் நகர் வலம் - மக்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை - கோட்டைக்குள் நுழைகையில் லாஷ்கர மூதாதையர் அவன் குருடன் என்று அறிந்து அவனுக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். சகுனியும் காந்தார தேசமே லாஷ்கரர்களுக்குச் சொந்தமானது. அவர்களை மீற முடியாது என்றான். - லாஷ்கரர் மூன்று கூடு வண்டிகளில் அரசியரைத் தூக்கிச் செல்கின்றனர்.- திருதராஷ்டிரன் மதகரியென சினங்கொண்டு அவர்களை வீழ்த்தி, காந்தாரியைத் தன் தோளில் சுமந்து வருகிறான் - குல்மூத்தோர் மகிழ்ந்து குரல் எழுப்புகின்றனர்.

  4. காந்தாரியை திருதராஷ்டிரன் வெளியே விட்டதும், சேடியர் அவளை ஒரு திரைக்குப் பின் நிறுத்தினர். அங்கிருந்து அவள் மருத்துவம் பெறும் தார்த்தனை நோக்கினாள். கரிய உடல்! அவள் கனவு கண்டிருந்த இளைஞன் அவனல்ல. பின் அவன் விரல்கள் அசைவதைக் கவனித்தாள். அவன் இசையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனைச் சென்று அவன் கரம் பற்றி அவன் இசையைக் கேட்டுவிட முடியுமா என்று நினைத்தாள். கதவைப் பிளந்து தன்னைத் தூக்கிய தருணம் நினைவில் வந்தது. அவன் கரிய உடல், திண்மையான தசைகள் இவற்றைப் பார்த்தாள்.அவன் மனையாகி விட்டதை உணர்ந்தாள். குலமூத்தோர் நன்மணம் புரிந்து வைக்க, சுபலர் பத்து பெண்களையும் சேர்த்து அவனுக்குக் கொடுத்தார். பின் ஆரியகௌசிகை ஆற்றங்கரை சென்று குலதெய்வக் கோயிலை வழிபட்டனர். அப்போது மணற்புயல் வந்தது. அது மந்திரஸ்தாயியில் ஒலிப்பதாக திருதராஷ்டிரன் சொன்னான். அது குறித்த சாமவேதப் பாடலை விதுரனைப் பாடுமாறு பணித்தான். புயல் 101 கற்களை கோயில் முற்றத்தில் போட்டது. அரசியர் 101 பிள்ளைகள் பெறுவர் என்றனர் அவர்கள். பின் அனைவரும் சோலைக்குச் சென்றனர்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை