Posts

Showing posts from July, 2021

ஜெ எழுதிய பேசாதவர்கள் சிறுகதை குறித்து

Image
 புகைப்படம்: அனுஷா ஜெகதீஷ்குமார். அன்புள்ள ஜெ, பேசாதவர்கள் வாசித்தேன். சுயராஜ்யம் கிடைத்தபின், இருட்டறைகளுக்குள் சென்றுவிட்ட திருவிதாங்கூரின் ஆயிரமாண்டுகால வரலாற்றை அவற்றில் புதைந்து கிடக்கும் புராதனப் பொருட்களிலிருந்து கோத்து எடுத்துக் கொண்டு, அவற்றைக் கலையாக்குவதன் மூலம் மெல்ல மெல்ல ஒரு இணை வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்ல விழைகிறேன். உப பாண்டவத்தின் முன்னுரையில் எஸ்.ரா குறிப்பிட்டிருப்பார். அஸ்தினாபுரத்துக் குழிகளில் கிடைத்த குதிரைகளின் எலும்புகளிலிருந்து, அதன் வரலாற்றை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று. இந்த வல்லமை கலைஞனுக்கு மட்டுமே சாத்தியம். உங்களது இன்னொரு சிறுகதையான கணக்கு -ல் வரும் மரப்பலாக்காயையும், பணப்பலகையையும் நினைத்துக் கொள்கிறேன். இக்கதையில் தூக்குப் பூட்டு. ஒரு சின்ன பொருள். அது தூண்டும் நினைவுகள். அவற்றிலிருந்து விரியும் கலை. காணும் ஒவ்வொரு பொருளும் இப்படித்தான் எழுத்தாளனைக் கலைக்குத் தூண்டிக் கொண்டே இருக்குமா? ஜெயிலின் ஸ்டோர் அறைக்குள் சென்று மீளும்போது கனவுக்குள் சென்று திரும்பி வந்ததைப் போலிருக்கும் என்கிறார் தாத்தா. நீங்களும் அந்த ஸ்டோர் அறைக்க

ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் நித்தியம் சிறுகதையை முன்வைத்து.

Image
  பொதுவாக வரலாறு என்பது ஆண்டவர்களின் வாழ்க்கை குறிப்புகள், அவர்களின் போர் வெற்றிகள், தோல்விகள், அவர்கள் செய்த சீர்திருத்தங்கள் இவைகளின் தொகுப்புகளாகத்தான் நம்மை வந்தடைகின்றது. வரலாற்றுக்காலங்களில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாடப் போராட்டம் குறித்தோ, அரசர்களைச் சுற்றி வாழ்ந்து அவருக்குப் பணியாற்றி, அவர் பொருட்டு வாழ்ந்து, சுவடின்றி மறையும் எளிய ஆத்மாக்களைப் பற்றி அறியவோ கலையே நமக்கு உதவுகிறது. வரலாற்றைக் களமாகக் கொண்ட நாவல்களும், சிறுகதைகளும் எனக்கு எப்போதுமே உவப்பானவை. கல்கி, சாண்டில்யன் போல, வீர சாகசங்களை, கேளிக்கை அம்சங்களையும் விவரித்து நம் புலன்களைச் சாமரம் வீசுகிற படைப்புகளன்று. குர் அதுல் ஹைதரின் அக்னி நதி போன்று வரலாற்றினூடாகத் தத்துவ விசாரம் மேற்கொள்ளும் படைப்புகள், சிக்கவீர ராஜேந்திரன் போன்று அலகிலா அதிகாரம் கொண்ட அரசபதவியின் அபத்தங்களை விவரித்து அகங்காரத்தின் அர்த்தமற்ற தன்மையை நிறுவும் படைப்புகள் போன்றவையே என் வாசிப்பு மனதுக்கு அணுக்கமானவை. அண்மையில் ஜெயமோகன் தந்த படைப்புகளான யட்சன், கந்தர்வன் மற்றும் குமரித்துறைவி போன்ற படைப்புகள் வரலாற்றின் பக்கங்களிலிருந்து ஒரு சிறு நிகழ்வை