Posts

Showing posts from July, 2022

ஊனுடல் - சிறுகதை - சொல்வனம் இதழில்

Image
 என் புதிய சிறுகதை ஊனுடல் சொல்வனம் 275 வது இதழில் வெளியாகியுள்ளது. ஆசிரியர்கள் மைத்ரேயன் மற்றும் பாஸ்டன் பாலா ஆகியோருக்கு நன்றி. கடல் மீது எழுந்து நின்றிருந்த நிலவின் மென்னொளியும், அதன் கரையில் அமைந்த குடிலின் கால்களில் செருகப்பட்டிருந்த  தீப்பந்தங்களின் ஒளியும் உணவுமேஜை மீது விழ,  ஒரு கணம் கண்ணிமைக்காமல் அதையே பார்த்து நின்றான் சங்கமேஸ்வரன். கிரில் செய்யப்பட்ட லோப்ஸ்டர், சோறும் கருதியாவும், வறுத்த டூனா துண்டங்கள், ரொட்டியும் மசூனியும், டெவில் செய்யப்பட்ட கோழிக்கறி, தொட்டுக் கொள்ள ரிஹாக்குரு, அப்பளம். குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மதுவகையின் பெயர் ப்ளாக்பெர்ரி சங்கிரியா என்று நினைவு வந்தபோது சங்கமேஸ்வரனுக்குத் தன்மேலேயே வியப்பாக இருந்தது. வந்து ஒரு வாரத்தில் நிறையத்தான் கற்றிருக்கிறோம். அது சரி, ஒரு மனிதனால் இத்தனையும் ஒருவேளையில் உண்டு முடித்து விட முடியுமா என்று அவன் சிந்திக்க முற்படுகையில் மேஜையின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மனிதர் அவனை அழைத்து சுய நினைவுக்குக் கொண்டு வந்தார். “ஹே, பாய், பிரிங் மி எ ஹைனிக்கன்!” கதையை மேலும் வாசிக்க - ஊனுடல்

பிறப்பொக்கும் - சிறுகதை - பதாகை இதழில்

Image
  பிறப்பொக்கும் சிறுகதை ஜெகதீஷ் குமார் பெருமாள் கோவில் வீதிக்குள் சாமி ஊர்வலம் நுழைந்ததும் அவரவர் வீட்டு வாயில்களில் நின்றிருந்த தெரு மக்கள் எல்லாரும் கைகூப்பி சாமியையே நோக்கிக் கொண்டிருந்தனர். செந்தில் மட்டும் ஏறிட்டு பாட்டியின் முகத்தைப் பார்த்தான். அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. தொங்கிப் போயிருந்த கன்னச் சதைகள் நடுங்க,  சுருங்கி வரி விழுந்த கண்களில் நீர் பெருகியிருந்தது. அவள் சாமியை நோக்கிக் கைகூப்பியிருக்கவில்லை. செந்தில் குழப்பமடைந்து, அவள் சேலை நுனியைப் பிடித்து மெல்ல இழுத்தான். பாட்டி இவனைக் கவனிக்காமல் தலைகுனிந்து அழுகையைத் தொடர்ந்தபடி இருந்தாள்.  அருகில் நின்றிருந்த லல்லி அம்மா அவள் தோள்களில் ஆறுதலாய்க் கை வைத்தாள். “ஏனுங்கம்மா, எதாச்சும் நெனச்சுகிட்டீங்களா?” மேலும் வாசிக்க

சு. வெங்கட்டின் தன்னறம் சிறுகதை குறித்து

Image
  சொல்வனம் இதழில் வெளிவந்த ' தன்னறம் ' சிறுகதையை ஒட்டி நண்பர் சு. வெங்கட்டுக்கு எழுதிய கடிதம். அன்புள்ள வெங்கட், தன்னறம் கதையை வாசித்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதைக்குள் முதல் வரியிலிருந்தே எந்த சிரமமுமில்லாமல் நுழைய முடிந்தது. சம்பவங்கள் அழகாக விரியும் விதமும், பின் கதைகளைப் பொருத்தமான இடத்தில் நீங்கள் வைத்திருந்த லாவகமும் உங்கள் எழுத்துத் திறமைக்குச் சான்று. முதல் பாராவில் வரும் உதவி என்றெழுதி அட்டையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் பெண்ணும், அவளருகில் புத்தகம் வாசிக்கும் சிறு பெண்ணும் வரும் சித்திரத்தின் முக்கியத்துவம் கதையின் முக்கால் பாகம் தாண்டியவுடன் உணர முடிந்தது. கதையின் மையத்தை, வேரை முதலிலேயே கோடி காட்டியிருக்கிறீர்கள்.  இக்கதையின் கரு தமிழ்க்கதைகளுக்குப் புதியதென்றே நினைக்கிறேன். ஒருவேளை அ.முத்துலிங்கம் இது போன்ற கதைகளை எழுதியிருக்கலாம். ஆனால் களமும், சொல்முறையும் புதிதாக இருக்கின்றன. முறையான விசா இல்லாமல் அமெரிக்காவில் குடியேறிப் பணிபுரியும் பல லட்சம்பேரின் வாழ்க்கை குறித்து அறிய இது ஒரு சாம்பிள். அமெரிக்கா என்றாலே கனவுதேசம் என்று நினைக்கும் பல தமிழருக

தேன்கூடுகளின் வீடு மொழியாக்கம் - சொல்வனம் இதழில்

Image
 இடாலோ கால்வினோவின் தேன்கூடுகளின் வீடு என்ற சிறுகதை என் மொழியாக்கத்தில் சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. நன்றி சொல்வனம். கதையை வாசிக்க தேன்கூடுகளின் வீடு Image Courtesy: Wikimedia Commons.