Posts

நீலத்தழல் - சிறுகதை - அரூ அறிபுனைகதைப் போட்டியில்

Image
ஒரு கதை வைத்திருந்தேன். அதில் கொஞ்சம் அறிவியல் இருந்தது. நண்பர் விஸ்வனாதன் மகாலிங்கம் அரூ இதழுக்கு அறிபுனை கதைப் போட்டிக்குக் கதை அனுப்பும்படி அறிவுறுத்தினார். இது அறிவியல் புனைகதை என்ற வகைமைக்குள் வருமா என்ற ஐயத்தோடுதான் அனுப்பினேன். அவர்களும் அவ்வாறே நினைத்திருக்கிறார்கள். சிறப்பாகக் குறிப்பிட்ட இருகதைகளில் ஒன்றாக இக்கதையை ஒரு குறிப்புடன் வெளியிட்டிருக்கிறார்கள்.  கீழே வருவது அவர்கள் தந்த குறிப்பு. ‘நீலத்தழல்’ நேர்த்தியாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள கதை. ஆனால், இக்கதையில் நிதர்சனமான அறிவியல் இருக்கின்றதே தவிர, அறிவியல் ஊகம் இல்லை, புதிய அறிவியல் கற்பனை இல்லை. ஆகவே அறிவியல் புனைவு என்கிற வகைமைக்குள் வராது. ஆனாலும் இக்கதையை குறிப்பிடத்தகுந்த கதையாக வெளியிடுவதற்குக் காரணம் அறிவியலை வெறும் கோட்பாடுகளாகவும் கருதுகோள்களாகவும் பட்டியலிடாமல், ஒரு வாழ்வனுபவமாக சித்தரித்துள்ளார் ஜெகதீஷ் குமார். உயிரொளி உமிழ்வு (bioluminescence) எனும் அறிவியல் கருதுகோளை ஒரு கட்டுரையாகப் படிக்கலாம், ஆவணப்படமாகப் பார்க்கலாம். ஆனால் இப்படி ஒரு புனைவாகப் படிக்கும்போது அது நமது உடலுக்குள் இறங்கிச்சென்று, ஏதோ ஒரு

பேராசிரியரின் கிளி - சிறுகதை

Image
பேராசிரியரின் கிளி சிறுகதை நன்றி: சொல்வனம் - அக்டோபர் 23, 2022 ஆர்தர் ரேவனல் ஜூனியர் பாலத்தைத் தாண்டியபிறகு, 21ம் எக்ஸிட் எடுத்து டிராஃபிக் சிக்னலில் நின்றபோது இடது பக்கம் திரும்ப வேண்டுமா அல்லது வலது பக்கமா என்று ஸ்ருதிக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஸ்ருதி தன் காரை கோல்மன் புலவார்டுக்குள் திருப்பிய மறுகணமே திசைகாட்டும் கருவியின் பெண்குரல் அமைதியடைந்து, அவளது அலைபேசியின் தொடுதிரை கடைசியாகக் காட்டிய வரைபடத்துடன் உறைந்து விட்டது. கூகுள் வரைபடத்தில் கூட அவளது பேராசிரியரின் வீடு பட்டியலிட்டிருக்கப்படவில்லை! அனிச்சைச் செயலாக, விஷியஸ் பிஸ்கட் தாண்டி இருந்த லான்சிங்க் டிரைவில் திரும்பினாள். அந்தச் சாலையில் இருந்த பாம்  வீதியின் வடக்கு முனையில்தான் டாக்டர் ராமச்சந்திரனின் வீடு இருப்பதாக லெய்ச்சி சொல்லியிருந்தான். அவனுக்கு கூகுள் வரைபடம் போன்ற புதிய தொழில் நுட்பங்களில் பெரிய நம்பிக்கையில்லை. என்னதான் அறிவியல் வளர்ச்சி  பெற்றிருந்தாலும் நமது மூளைத்திறன்தான் கடைசியில் கைகொடுக்கும் என்பான். தனது உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் கூட அவன் இதே போன்று மிக மெதுவாக நகரும், மரபார்ந்த வழிமுறைகளைத்தான் பின்ப

கல்லளை - சிறுகதை

Image
கல்லளை சிறுகதை நன்றி: சொல்வனம் - செப்டம்பர் 25, 2022 1 “என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது. கங்காமூலாவெங்கும் மலைக்காடுகளில் பரவி வாழ்ந்த ஒவ்வொரு மலைச்சாதிக் குடியானவனுக்கும், குடியானத்திக்கும் கடந்த ஆறுமாதங்களாக இதே கேள்விதான். இதே கவலைதான்.  ஐந்துகுடிப் பெரியவர்களும் குலமுன்னோர் வழிபாட்டு நினைவிடமான ஹிரயிரிக்குச் சென்று தொழுது வணங்கிவிட்டு, அருகிலிருந்த தோதகத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இருட்டு சாரைப்பாம்புக் கூட்டத்தைப் போல சரசரவென்று எங்கும் பரவிக் கொண்டிருந்தது. விரைந்து இறங்கும் கடுங்குளிரை விரட்ட எதிரில் சவுக்குக்கட்டைகளைக் கும்பாரமாகக் குவித்து நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. குடிக்கு எட்டுப் பேராக நாற்பது பேர் பெரியவர்கள் முன்ன

கர்மா - சிறுகதை

Image
கர்மா சிறுகதை நன்றி: சொல்வனம் - ஆகஸ்ட் 28, 2022 தன் புல்வெட்டியில் ஏதோ தவறு இருந்தமாதிரிப் பட்டது பீட்டருக்கு. ஐந்தடிக்கு ஒருமுறை திக்கித் திணறிக் கொண்டிருந்தது. இயந்திரத்தை நிறுத்தி விட்டு, தலைகீழாகத் திருப்பிப் பார்த்தார். வெட்டுப்பட்டிருந்த புற்கள் ஒட்டியிருந்தது தவிர வேறெதுவும் பழுதாகத் தெரியவில்லை. அப்புற்களின்றும் வெளிவரும் பச்சை மணத்துக்காகவே பீட்டர் புல்வெட்டுவதென்றால் உற்சாகமாகத் தயாராகி விடுவார். எந்திரத்தில் கேசோலினும் அளவுக்கதிகமாகவே இருந்தது. மூன்று முறை நிறுத்தி, நிறுத்திப் பரிசோதித்து விட்டார். அவரால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. சலித்துப் போய், இயந்திரத்தைக் கொண்டு போய் கராஜில் நிறுத்தினார். உடனே வீட்டுக்குள் போகவிரும்பவில்லை. வீட்டின் முன்னாள் உரிமையாளர்கள் வந்திருக்கிறார்கள். இவர் உள்ளே போனால் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாட வேண்டியிருக்கும். பீட்டருக்கு தனது ஆங்கிலப் புலமை மீது பெருமிதம் இருந்தாலும், அமெரிக்கர்களுடன் பேச முற்படுகையில் மட்டும் அத்திறமை அவரைப் பரிதாபமாகக் கைவிட்டு விடுகிறது. சிறிது நேரம் தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் நேரம்