அத்வைதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அத்வைதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஜனவரி, 2026

நுண்பொருள் காண்பது அறிவு


நுண்பொருள் காண்பது அறிவு

அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் நான் எழுதி வரும் வேதாந்தம் குறித்த தொடரின் மூன்றாவது பகுதி சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. எந்த ஒரு அறிவையும் ஓர் அறிவைக் கொடுக்கும் கருவியால் மட்டுமே அறிய இயலும். அறிபவனாகவே இருக்கும் என்னை எந்தக் கருவியால் அறிந்து கொள்ள இயலும்? இப்பகுதியில் அறிவைக் கொடுக்கும் கருவிகளான பிரமாணங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. பிரமாணங்கள் ஆறுவகை. அத்தனைப் பிரமாணங்களையும் பகுதி மூன்று மற்றும் நான்கில் விளக்கப்படும்.

6 ஜனவரி, 2026

செயற்பாலது ஓரும் அறன்

 அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில் சொல்வனம் இதழில் நான் எழுதி வரும் வேதாந்தக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதி வெளியாகியுள்ளது. எதற்காக ஒருவர் அத்வைத தத்துவத்தைக் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான விடையாக இந்தப் பகுதி அமைந்துள்ளது.




15 டிசம்பர், 2025

“உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”



1.  “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்”

சொல்வனம் இணைய இதழில் என்னுடைய புதிய கட்டுரைத்தொடர் துவங்கியிருக்கிறது. அத்வைதம்: அகவிடுதலைக்கான பயணம் என்ற தலைப்பில். அதனது முதல் அத்தியாயம்  “உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” அத்வைத வேதாந்தம் பற்றிய சிறு விளக்கத்தையும், அதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்தும் பேசுகிறது. இருவாரங்களுக்கொரு முறை இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் வெளியாகும். அத்வைத வேதாந்தம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கும், ஏற்கனவே அத்தத்துவத்தைக் கற்றுக் கொண்டவர்களுக்கு வாசித்து அனுபவிப்பதற்காகவும் பயனுள்ள தொடராக இருக்கும் இது.

19 ஜனவரி, 2018

அதுதான் நீ

என்னைத் தவிர யாரால் இயலும்?
இவ்வாழியில் நீந்திக் களிக்க
கற்பனைகளால் என்னைப் புனைந்து கொள்ள
எல்லாவற்றிற்கும் மேலெழும்ப முயன்றபடி இருக்க
அறியா நிலங்களைத் தொடும் துணிச்சல் கொண்டிருக்க
இம்முயற்சியில் என்னையே கிழித்துக் கொள்ள
யாரால் இயலும் என்னைத் தவிர?

நானே ஆழியென்று அறிவார்ந்த அலையொன்று 
இயம்பும் வரைக்கும்.

மேலும் வாசிக்க