கெய்ஷாவின் நினைவுகள்
ஆர்தர் கோல்டன் எழுதிய கெய்ஷாவின் நினைவுகள் என்ற நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நாவல். ஆனால் திரில்லர் வகை நாவல் அல்ல. நாவலாசிரியர் ஜப்பானிலேயே நெடுங்காலம் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. ஒரு கெய்ஷா தன் வாழ்க்கை நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வதைப் போல் நாவல் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. என் பள்ளியில் என்னோடு பணிபுரியும் மால்தீவியன் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் அந்தப் படம் அடங்கிய குறுந்தகடு இருப்பதாகச் சொன்னார். நாவலை முடித்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். கெய்ஷா என்பது நம்ம ஊர் தேவதாசிகளைப் போல, ஜப்பானிய தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும், கலைஞர்களையும் மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இனம். இப்படி ஒரே வாக்கியத்தில் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடவும் முடியாது. வரலாற்றிலிருந்து தடயமின்றிப் போன ஒரு இனத்தின் வாழ்க்கை முறையும், அவர்கள் அனுபவித்த வலி, அவமானம் ஆகியவையும், துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. நம் கண்ணுக்குப் புலப்படாது இருந்து வந்த ஓர் உலகின் இருண்ட