சாகித்ய அகாதமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாகித்ய அகாதமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 மார்ச், 2015

சிவராம காரந்தின் அழிந்த பிறகு

சிவராம காரந்தின் அழிந்த பிறகு
சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன் எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில் ஒன்று இது.
ரயிலில் நட்பு கொண்ட நண்பர் யசவந்த ராயர் மரணத்துக்குப் பிறகு அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஆசிரியர் சிவராம காரந்த். இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் நண்பரின் உறவினர்கள் மூலமாக யசவந்தரின் வாழ்க்கை குறித்தும், அவரது மேன்மையான பண்பு நலன்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். மட்டுமன்றி நற்பண்புகள் நிறைந்த ஒருவனைச் சுற்றி வாழும் சுயநலம் மிகுந்த உறவுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். நண்பர் உயிரோடிருந்தால் தன்னை நம்பியிருந்த, தன் நலனையே பெரிதென மதித்த உயிர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பாரோ அவற்றைத் தன் கடமையாகவே எண்ணி செய்து முடிக்கிறார் ஆசிரியர். யசவந்த ராயரின் உறவுகளினூடாக ஆசிரியர் நிகழ்த்தும் பயணமே நாவலின் கதை.
       யசவந்த ராயர் இறப்பதற்கு முன் அவர் இறுதிக்காலத்தில் வரைந்த ஓவியங்களையும், நாட்குறிப்புகளையும், தன்னிடமிருந்த பதினைந்தாயிரம் ரூபாய் பணத்தையும் சிவராமகாரந்திடம் விட்டுச் செல்கிறார். அந்நாட்குறிப்புகளையும், அவரது ஓவியங்களையும் கொண்டு, தான் சிறிது காலமே பழகியிருந்த நண்பரின் குணச்சித்திரம் பற்றிய கற்பனையை உருவாக்கிக் கொள்கிறார் ஆசிரியர். நான்கு பேருக்கு தன் பெயரில் மாதாமாதம் பணம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருப்பார் யசவந்தர். அந்த நான்கு பேரையும் சந்தித்து நண்பரின் ஆளுமையைப் பற்றி அறிய விழைகிறார் காரந்த். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் யசவந்தரின் உறவினர்களும், ஊர் மக்களும் அவரைப் பற்றிச் சொல்லும் கதைகளும், நிகழ்ச்சிகளும் அவர் பற்றித் தான் மனத்தில் வரைந்து வைத்திருந்த சித்திரம் சரியே என்பதை காரந்துக்கு உறுதிப் படுத்துகின்றன. யசவந்தரைச் சுற்றியிருந்த உறவுகளில் யார் அவர் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்கள் என்பதையும், யார் அவர் செல்வத்தின் மீது மட்டும் குறியாயிருப்பவர்கள் என்பதையும் அவரது பயணம் அவருக்கு உணர்த்துகிறது. அவர் மீது அன்பு கொண்டவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாகவும், வாழ்க்கைக்கு உதவும் வண்ணமும் அவர் தன்னிடம் அளித்துச் சென்ற பணத்தைச் செலவிடுகிறார். தன் நண்பரின் கடமையைத் தானிருந்து செய்து முடித்து விட்ட திருப்தியில் மனம் நிறைகிறார்.
       நாவலில் கன்னட நிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சித்திரங்களாக அறிமுகப்படுத்துகிறார் காரந்த். அவருக்கு ஓவியத்தில் இருக்கும் ஆர்வம் யசவந்த ராயர் இறுதியாக விட்டுச் சென்ற ஓவியங்களை அவர் விவரிப்பதிலிருந்து தெரிகிறது. கதை முழுக்க ஒரு பெயராகவே வரும் யசவந்தர் தன் உயர்ந்த பண்பு நலன்களாலும், உறுதியான கொள்கைகளாலும் நம் மனதில் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு இருக்கும் சில ஒவ்வாத பலவீனங்கள் கூட அவரது ஆளுமையின் பிரம்மாண்டத்தின் முன் மறைந்து விடுகின்றன.

       வேகமாகச் செல்லும் நாவல். வாசிக்கச் சுகமாகவும், ஸ்வாரஸ்யமாகவும் உள்ள நாவல். சித்தலிங்கையாவின் மொழிபெயர்ப்பு அருமையானது; எளிமையான சொற்களும், சிக்கலில்லாத வாக்கியங்களும் கொண்டது. தேசிய புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நாவலை www.openreadingroom.com என்ற தளத்தில் வாசிக்கலாம். தரவிறக்கிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. மேலும் பல முக்கியமான இந்திய நாவல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அழியாச் சுடர்கள், உலக இலக்கியம் தளங்கள் போன்று இத்தளமும் பரவலாக இலக்கிய வாசகர்களிடத்துச் சென்றடைய வேண்டும்.  

5 ஆகஸ்ட், 2011

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்


நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி
2 பாணபட்ட தன்வரலாறு . ]பாணபட்ட ஆத்மகதா ]. இந்தி .கஸாரி பிரசாத் திவிவைதி தமிழாக்கம் சங்கர் ராஜு நாயிடு
3 பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி
3 செம்மீன் [செம்மீன்] மலையாளம் தகழிசிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சுந்தர ராமசாமி
4 சேரி [மாலப்பள்ளி ] தெலுங்கு உன்னாவால் லட்சுமிநாராயணா தமிழாக்கம் எம்.ஜி ஜகன்னாத ராஜா
5 எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது [ ன்றுப்பாப்பாக்கு ஒரானெயுண்டார்ந்நு ]மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் கெ.சி சங்கரநாராயணன்
6 இரண்டுபடி [ரண்டிடங்கழி] மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் டி ராமலிங்கம் பிள்ளை
7 காட்டின் உரிமை [ஆரண்யார் அதிகார் ] வங்காளி மகாஸ்வேதா தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
8 காலம் [காலம்] மலையாளம் . எம்.டி வாசுதேவன் நாயர் தமிழாக்கம் மணவை முஸ்த·பா
9 காணி நிலம் [சமான் அதா குந்தா] ஒரியா . ,பக்கீர் மோஹன் சேனாபதி தமிழாக்கம் எச்.துரைசாமி
10 மக்கள் குரல் [ஐயனுரிங்கம் ] அசாமி . பீரேந்திரகுமார் பட்டாச்சாரியா தமிழாக்கம் சரோஜினி பாக்கியமுத்து
11 மலைநாட்டு மங்கை அசாமீஸ் ரஜனிகாந்த் பரடோலி தமிழாக்கம் கெ அப்பாதுரை
12 மௌன ஓலம் [வைசாக] கன்னடம். சதுரங்கா தமிழாக்கம் டிகெ வெஜ்க்கடாசலம்
13 மண் பொம்மை [மதிர் மனுஷ்ய] ஒரியா . காளிசரண் பாணிகிராகி தமிழாக்கம் ரா வீழிநாதன்
14 மண்ணும் மனிதரும் [ மரலி மண்ணிகெ] கன்னடம் டாக்டர் சிவராம காரந்த் தமிழாக்கம் டிபி சித்தலிங்கையா
15 நாராயணராவ் [நாராயணராவ்] தெலுங்கு . அடைவி பாபுராஜு தமிழாக்கம் எம்.எஸ் கமலா
16 நிழல்கோடுகள் [ ஷேடோ லைன்ஸ் ] ஆங்கிலம் அமிதவ் கோஷ் தமிழாக்கம் திலகவதி
17 பண்டித பரமேஸ்வர சாஸ்திரி உயில் [ பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வீலுனாம . ] தெலுங்கு கோபிசந்த் தமிழாக்கம் டி சௌரி ராஜன்
18 பருவம் தப்பிய வசந்தம் [ ] அசாமி . கிமல் கார் தமிழாக்கம் டி பானுமதி
19 பொலிவு இழந்த போர்வை . [ஏக் சாதார் மைலி] உருது. ராஜேந்திரசிங் பேதி .தமிழாக்கம் டி ராஜன்
20 பேராசிரியர் [ புரபசர் ] ம¨லாளம் . ஜோச·ப் முண்டசேரி தமிழாக்கம் டி வெட்ங்கடசாமி
22 ருத்ரமா தேவி [ருத்ரமா தேவி ] தெலுங்கு . துலுக்ய் நோரி நரசிம்ம சாஸ்திரி தமிழாக்கம் வி தட்சிணாமூர்த்தி
23 சரஸ்வதி சந்திரன் [சரஸ்வதி சந்திரன்] குஜராத்தி. கோவிந்தராம் திரிபாதி . உபேந்திர பாண்டியா தமிழாக்கம் டிகெ ஜெயராமன்
24 சாந்தலா [சாந்தலா] கன்னடம் . கெ.வி அய்யர்தமிழாக்கம் எச் கெ சீதாதேவி
25 சுந்தரிகளும் சுந்தரன்மார்களும் [சுந்தரிகளும் சுந்தரன்மாரும்] மலையாளம் பி.சி.குட்டிகிருஷ்ணன் அல்லது உரூப் தமிழாக்கம்ஆர் சௌரிராஜன்
26 சாம்பன் . [ சாம்ப ] வங்காளி . சமரேஷ் பாசு தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
27 வனவாசி [ஆரண்யக்] வங்காளி .பிபூதிபூஷன் தமிழாக்கம் த நா சேனாபதி
28 வழிகாட்டி [ கைட்] இந்தி . சமன் நகால் தமிழாக்கம் பிரேமா நந்தகுமார்
29 வினோதினி [சொக்கர் பாலி ] வங்காளி. ரபீந்திரநாத் தாகூர் தமிழாக்கம் த நா குமாரசாமி
30 ஒரு புதிய கதை [ பா முலகிச ஹோஷியார்] பஞ்சாபி .நரேந்திரபால் சிங் தமிழாக்கம் கெ பாலசந்திரன்
31 நீல நிலா [நீலா சாந்த்] இந்தி . சிவ் பிரசாத் சிங் . தமிழாக்கம் எம் சேஷன்
32. தட்டகம் . மலையாளம் . கோவிலன். தமிழாக்கம் நிர்மால்யா
33 இரண்டாமிடம் [ரண்டாமூழம்] எம்.டி.வாசுதேவன் நாயர் .தமிழாக்கம் குறிஞ்சிவேலன்
34 கொல்லப்படுவதில்லை . [நா ஹன்யதே] வங்காளம். மைத்ரேயி தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
35 சதுரங்கக் குதிரைகள் [தாய் கர்] இந்தி கிரிராஜ் கிஷோர் தமிழாக்கம் மு ஞானம்
36 கயிறு [கயர்] தகழி சிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சி ஏ பாலன்
37 பருவம் [பர்வ] கன்னடம் . எஸ்.எல்.பைரப்பா தமிழாக்கம் பாவண்ணன்
38 இனி நான் உறங்கலாமா? [இனி ஞான் உறங்கட்டே? ] மலையாளம். பி.கெ.பாலகிருஷ்ணன் தமிழாக்கம் ஆ.மாதவன்
39 ஒரு கிராமத்தின் கதை .[ஒரு தேசத்தின்றெ கத] மலையாளம். எஸ்.கெ.பொற்றேக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்

மேலும் வாசிக்க