கவிதைகள் இணைய இதழில்



ஜூன் மாத கவிதைகள் இதழ் தேவதேவன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இதில் 1993-ல் தேவதேவனுடனான நேர்காணல் இடம்பெற்றுள்ளது. ”தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…” என்ற ஜெயமோகன் கட்டுரையுடன் தேவதேவனின் கவிதைகள் பற்றி கடலூர் சீனு, ஜெகதீஷ் குமார், பைலார்க்கஸ், மதார், தமிழ்மணி எழுதிய வாசிப்பு அனுபவங்களும் இடம்பெற்றுள்ளது.

இந்த இதழில் உள்ள வாசிப்பனுபவ கவிதைகள் “தேவதேவன் கவிதைகள்” முழுத் தொகுப்பாக சமீபத்தில் வெளிவந்த தன்னறம் மற்றும் வம்சி வெளியிட்ட நூல்களில் இடம்பெற்றுள்ள கவிதைகள் குறித்து எழுதப்பட்டவை. இவ்விதழில் உள்ள நேர்காணலைக் கொடுத்து உதவிய அழசி ஸ்ரீனிவாசனுக்கு எங்கள் அன்பு.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை