தமிழில் வெளியான என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான பொற்குகை ரகசியம் குறித்து ஒரு கலந்துரையாடலை அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ளது. விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை 50 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எலியட்டின் பெயரால் நடக்கும் இலக்கிய அரங்கொன்றில் சூம் செயலி வழியாக நிகழ்ச்சியை நம் விஷ்ணுபுரம் குழுமம் நடத்துகின்றது. இது நம் நண்பர்களுடன், நண்பர்களுக்காக, நண்பர்களால் நடத்தப்படும் நிகழ்வு. மே மாதம் நடக்கும் நிகழ்வில் சவுத் கரோலினாவில் இருக்கும் ஜெகதீஷ் குமாரின் பொற்குகை ரகசியம் புத்தகம் பற்றி கலிபோர்னியாவின் விஜய் ரெங்கராஜனும், டெக்சாசின் ப்ரதீப்பும் பேச உள்ளார்கள்.
மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை டி.எஸ். எலியட் மாதாந்திர இலக்கிய கூடல்
மே மாதம் முதல் ஞாயிறு 04-மே மாதம்-2025 அன்று டெக்ஸாசை சேர்ந்த நண்பர் ப்ரதீப்பும், கலிபோர்னியாவை சேர்ந்த விஜய் ரெங்கராஜனும் நமது ஜெகதீஷ் குமார் அவர்களின் சிறுகதை தொகுப்பு பொற்குகை ரகசியம் பற்றி உரை நிகழ்த்துவார்கள். கனடாவில் உள்ள நண்பர் விபி நிகழ்வினை தொகுத்து வழங்குவார்.
ஜெகதீஷ்குமார் கேள்வி , பதில் நிகழ்வில் பங்கு பெற்று நம்முடன் அவரது படைப்பு பற்றி உரையாடுவார்.
நேரம் காலை: 7 மணி PST/9 மணி CST/10 மணி EST/
இந்திய நேரம்: மாலை 7.30 மணி
ப்ரதீப் உரை - 10 நிமிடம்
விஜய் ரெங்கராஜன் உரை -10 நிமிடம்
ஜெகதீஷ் கேள்வி பதில் - 30 நிமிடம்
சூம் செயலி இணைப்பு https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09
அமேசானில் பொற்குகை ரகசியம் கிண்டில் பதிப்பு கிடைக்கிறது.
பொற்குகை ரகசியம் கிண்டில் பதிப்பு