Posts

Showing posts from July, 2011

கெய்ஷாவின் நினைவுகள்

Image
ஆர்தர் கோல்டன் எழுதிய கெய்ஷாவின் நினைவுகள் என்ற நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நாவல். ஆனால் திரில்லர் வகை நாவல் அல்ல. நாவலாசிரியர் ஜப்பானிலேயே நெடுங்காலம் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. ஒரு கெய்ஷா தன் வாழ்க்கை நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வதைப் போல் நாவல் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. என் பள்ளியில் என்னோடு பணிபுரியும் மால்தீவியன் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் அந்தப் படம் அடங்கிய குறுந்தகடு இருப்பதாகச் சொன்னார். நாவலை முடித்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். கெய்ஷா என்பது நம்ம ஊர் தேவதாசிகளைப் போல, ஜப்பானிய தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும், கலைஞர்களையும் மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இனம். இப்படி ஒரே வாக்கியத்தில் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடவும் முடியாது. வரலாற்றிலிருந்து தடயமின்றிப் போன ஒரு இனத்தின் வாழ்க்கை முறையும், அவர்கள் அனுபவித்த வலி,  அவமானம் ஆகியவையும், துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. நம் கண்ணுக்குப் புலப்படாது இருந்து வந்த ஓர் உலகின் இருண்ட

மார்க்வெஸ்ஸின் மூன்று கதைகள்.

Image
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் மூன்று கதைகள். மார்க்வெஸ் மாய யதார்த்தக் கதைகளின் முன்னோடி என்று கருதப்படுகிறவர். அவரது ஒரு நூற்றாண்டுத் தனிமை என்கிற நாவல் பிரசித்தி பெற்றது. (ஆங்கிலத்தில் மின் புத்தகமாக வைத்திருக்கிறேன். இன்னும் படிக்கவில்லை). தமிழில் மாய யதார்த்தத்தின் அடிப்படையில் அமைந்த , யுவன் சந்திரசேகரின் குள்ளச் சித்தன் சரித்திரம் என்ற நாவலைப் படித்திருக்கிறேன். அது பற்றி ஏற்கனவே என் எண்ணங்களைப் பதிவு செய்திருக்கிறேன். இவ்வகைக் கதைகளில் நமது யதார்த்த உலகுக்குள் அதீதமான மாயச் சம்பவங்கள் பின்னிப் பிணைந்து கிடக்கும். எந்த நிகழ்வும்   எப்படியும் நடக்கும். யாரும் எங்கும் பிரசன்னமாவர்கள். இக்கதைகள் தரும் அனுபவம் அபூர்வமானது. இதைத்தான் இக்கதை சொல்ல வருகிறது என்று அறுதியிட்டுக் கூற இயலாது. இக்கதைகள்   வினோதமானதும் , புதிரானதுமான சூழ்நிலைகளுக்குள் நம்மை ஆழ்த்தி , நமது ஆதாரமான குணங்களையும் , உணர்வெழுச்சிகளையும் , தார்மீக சிந்தனைகளையும் கேள்விக்குள்ளாக்குகின்றன. ஏதோ ஒரு நாளில் என்ற கதையில் பட்டம் பெறாத பல் டாக்டர் ஒருவரை   பல் மருத்த

கதைப் பார்வை

Image
  யாரும் சிரிக்க மாட்டார்கள் - மிலன் குந்தேரா தன் நலனுக்காகவும் , தன் பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் பிறர் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் விளையாட தனக்கு அனுமதி உண்டு என்றெண்ணும் ஒரு பேராசிரியர் தன் செயல்களால் தானே அழிகிறார். தான் குப்பை என்று கருதும் கட்டுரை ஒன்றுக்கு முன்னுரை எழுதித் தருமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறார். எழுதித் தர விருப்பம் இல்லாமல் ,  அதை தவிர்ப்பதற்காக அவர் செய்யும் தகிடுதத்தங்கள் அவருக்கே குழி பறிக்கின்றன.   குந்தேரா பரபரப்பாக நிறையக் காட்சிகளை அடுக்குகிறார். வாசிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஓணான் கோடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் - பவா.செல்லத்துரை. கதையின் தலைப்பு சொல்வதைப் போல் இக்கதை நினைவுகளின் தொகுப்புதான். பாட்டியோடு மல்லாட்டை உரிக்கப் போகும் பேரனுக்கு , மல்லாட்டையிலிருந்து வெளிவரும் இளஞ்சிவப்பு நிற விதைகள் அவனது சிநேகிதியோடு மரத்தில் ஓணான் கோடி சுற்றி ஊஞ்சலாடிய நினைவுகளை மேல் கொணர்கின்றன. பாவாவின் நிதானமான , துல்லியமான , விவரணைகளுடன் கூடிய கதை சொல்லும் பாணிய

சிறுகதைக்குள் நுழைதல்

Image
சமீப காலமாகவே உலக இலக்கியம் மற்றும் அழியாசுடர்களுக்கு அடிக்கடிச் சென்று அங்குள்ள கதைகளைப் படித்து வருகிறேன். அங்கு படித்த கதைகள் தந்த அனுபவம் பற்றி இங்கு பகிர்ந்து கொள்ளலாமென்ற எண்ணம். நிறைய வாசித்திருந்தாலும் செவ்வியல் இலக்கியங்கள் படிக்கும் முறையான பயிற்சி ஏதும் எனக்கில்லை. எனவே இங்கு பகிரப்படுபவைகளை விமர்சனமாகக் கொள்ளலாகாது. நான் கதைகளை எவ்வளவு தூரம் புரிந்து கொண்டேன் என்பதையே அவை காட்டும். மேலும் நல்ல சிறுகதைகள்   படிக்க விழையும் ஒருவருக்கு இந்தப் பதிவுகள் தூண்டு கோலாக அமைந்தால் அது எனக்கு மகிழ்ச்சி தரும். பெரும்பாலும் உலக இலக்கியம் தளத்திலுள்ள கதைகளையே வாசித்து வருகிறேன். நேரடித் தமிழ்க் கதைகளைப் படிப்பதைவிட மொழிபெயர்ப்புக் கதைகளில் நமக்குத் தட்டுப்படும் உலகம் பிரத்யேகமானது. தொடர்ந்த நிதானமான வாசிப்பில் கதைகள் கொண்டிருக்கும் பல்வேறு தளங்கள் நமக்குப் புலப்படுமெனினும் , இணையத்தில் நீண்ட நேரம் வாசிக்கையில் கண் வலிக்கிறது. அதனாலயே ஒரு முறை வாசிப்பில் இக்கதைகள் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. முதல் கதை நான் காலச்சுவடு தளத்தில் படித்தது.

ஜி. எச்

Image
சிறுகதை எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால் அதற்கான பதிலைக் கொஞ்சம் குழப்பமாகத்தான் சொல்ல முடியும். கடவுள் இருக்கிறார் என்றோ, இல்லை என்றோ என்னால் உறுதியாச் சொல்லி விட முடியாது. இதே பதில்தான் காதல் இருக்கிறதா என்ற கேள்விக்கும். இளமைப் பருவத்தின் ஆரம்ப நாட்களில் அது இருப்பது போலவும் தோன்றுகிறது. மத்திம மற்றும் இறுதி நாட்களில் அது இருக்கிறது என்று நிரூபிப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் ஆவிகள் இருக்கிறதா என்ற கேள்வி வந்தால் அதற்கான பதில் என்னைப் பொறுத்தவரை எளிது. என் காரண அறிவும், நான் கற்றுத் தேர்ந்த கல்வி எனக்குக் கொடுத்திருக்கிற பின்புலமும் ஆவிகள் இல்லை என்று நான் அறுதியிட்டுக் கூற உதவி செய்யும். ஆவிகளில் எனக்கு இதுவரை நம்பிக்கையிருந்ததில்லை. சிறுவயதில் பார்த்த திகில் திரைப்படங்கள் கூட பயமுறுத்தினதில்லை.   ஒரு முறை மதியம் தூங்கி எழுந்திருந்த போது, காயப்போடப்பட்டிருந்த   தாத்தாவின் வேஷ்டியில் ஏற்பட்ட அலைவுகள் ஆவிகள் அசைவது போலவே இருந்தது. நீண்ட நேரம் அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சிந்தனைச் சிற்பி போல பாவித்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்த