Posts

Showing posts from January, 2012

ந்யூமாவின் நகல்

Image
சிறுகதை ந்யூமாவின் நகல் ராகுலன் – 00. 003398 G II -      இந்திய அரசின் தலைமை அணுக்கரு விஞ்ஞானி -      4.3.2094.       17: 58 : 245 மணி “ திரு. ராகுலன், தாங்கள் இந்திய அரசின் அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகக் கணிப்பொறியால் அழைக்கப்படுகிறீர்கள்.” ‘கோக்’ பானம் குடித்துக் கொண்டிருந்த ராகுலன் நகர்ந்து வந்து அகலமான மானிட்டர் முன்பு அமர்ந்தான். “ஆஜர். செய்தி என்ன?” “ வணக்கம் ராகுலன்! கடந்த 2600 நானோ விநாடிகளாகத் தாங்களுக்கும், தலைமையகத்துக்கும் இருக்கும் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கிறது. விடியோ பிம்பங்கள் குழப்புகின்றன. தங்கள் கம்யூனிகேஷன் சிஸ்டத்தில் ஏதும் கோளாறா என்று பார்த்துக் கொள்ளவும்”           “ இல்லை. அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எதற்கும் சரி பார்க்கிறேன் “ என்று தன் பிஸியை அருகில் இழுத்து விரல்களால் கொத்தினான்.           “ வணக்கம் குரு! என்ன வேண்டும் என்றது பிஸி.           “ நிவா! நமக்கும் தலைமையகத்துக்குமான சானல்களில் எதுவும் கோளாறா? பார்த்துச் சொல்”           “ பொறுங்கள். ஆராய்கிறேன்.” என்று அது சொன்னபோது, தலைமையகத் தொடர்புக்கான மானிட்டரில் வெறும் க

விரல்கள்

Image
இந்தக் கதையை எழுதி பனிரெண்டு வருடங்களாகிறது (13 -11 – 1999). நிரஞ்சனா என்ற மாதத்திற்கு இரண்டு பிரதிகள் மட்டுமே விற்கிற சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்து நான் மட்டுமே அதை அச்சில் வாசித்தேன். அச்சாவதற்கு முன் அதன் ஆசிரியர். வாசித்த காலத்தில் சுஜாதாவின் நூல்களை காய்ந்த மாடு போல் மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த பாதிப்பு கதையில் வெளிப்படையாகவே தெரிகிறது. விரல்கள் பெண்கள் இல்லாத கதை. ஆனாலும் கதைக்குக் காரணம் ஒரு பெண்.           அன்புள்ள அப்பாவுக்கு,           நான் இங்கு நலமாய் வந்து சேர்ந்தேன். இன்னும் மூன்று நாட்கள் கழித்துதான் கல்லூரி ஆரம்பமாகும். ரூமில் தனியாக இருப்பது வெறுப்பாக இருக்கிறது. நீங்கள் எனக்கு வாங்கித் தந்த ஒரு பவுன் மோதிரத்தை நான் விட்டு விட்டு வந்து விட்டேன். அது என் விரலுக்கு லூசாக இருக்கிறது. அதை மாற்றி வைக்கவும் . . .                 வாயிலில் காலை வைத்ததும் கலவரம், தவிப்பு, எதிர்பார்ப்பு, குதூகலம் என்று ஒருவித கலவையான குழப்பங்கள் வந்து தமிழ்ச் செல்வனின் காலியான வயிற்றில் அப்பிக் கொண்டன. சூரியன் கதகதப்பாய் மேலெழும்பிக் கொண்டிருந்தது. இங்கிருந்து பார்த்தால் இரண்டு குருவிகள் மட்ட

வாசிப்பின் பாதை

Image
நேற்று என் பள்ளி நூலகத்துக்குள் நுழைந்தேன். சில ஆண்டுகளாக நூலகர்கள் இல்லாமலிருந்து இவ்வருடம்தான் கல்வி அமைச்சகம் இரு நூலகிகளை அனுப்பி வைத்திருக்கிறது. புத்தகங்களை வேலையாட்கள் உதவியோடு அடுக்கிக் கொண்டிருந்தனர் இருவரும். நான் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கான புத்தகங்களைத் துழாவுவதைத் துவங்கினேன். பெரும்பாலும் நாவல்கள் வரிசைப் பக்கமே கண் செல்கிறது. பதின்பருவத்தில் வைரமுத்து, மு.மேத்தா கவிதைத் தொகுப்புகளைத் தேடியிருக்கிறேன். பிறகு நூலகத்திலிருந்து யாராலும் வாசிக்க விருப்பம் கொள்ளப்படாத தலையணை அளவு புத்தகங்களைக் கொண்டு வருதலும் பழக்கமாயிருந்தது. தத்துவம், சுயசரிதை, ஆன்மிகம் என்று கண்டு விட்டால் கைகள் பரபரக்கும். இப்போது நாவல்களே பெரிய கவர்ச்சியாயிருக்கின்றன.           வரிசையாக ஒவ்வொரு நாவலாக எடுத்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டிருந்த கதைச் சுருக்கத்தை மட்டும் வாசித்து விட்டு வைத்தேன். பெரும்பாலான ஆங்கில நாவல்களில் இது ஒரு வசதி. பின்னட்டையைப் பார்த்து விட்டு வாசிக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம். உலகைத் தாக்கப்போகும் பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றப் புகும் கதாந