தியானப்பாதை
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்கும் எல்லாருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஆன்மீக ஈடுபாடு ஏற்படத்தான் செய்கிறது. கல்லூரிப் பருவத்தில் ஓஷோவைப் படித்த போது அவரது புரட்சிகரமான கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன. இப்போதிருக்கும் வணிகத் துறவிகளுக்கெல்லாம் அவர்தான் முன்னோடி என்று சொல்வார்கள். சிலர் மஹரிஷி மஹேஷ் யோகியைச் சொல்வார்கள். பீட்டில்ஸ் பாடகர்களை அவர் ஈர்த்ததிலிருந்து அவர் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானார். ஆனால் இந்தியாவில் அவர் அவ்வளவு பிரசித்தம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். முதலில் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கப்பட்ட ஓஷோ பிரபலப்படுத்திய ஜென் தியானமுறைகள், நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மீது அவர் வீசிய கலகக்கேள்விகள், இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு அவரால் மட்டுமே கொடுக்கப்பட முடியுமென்று அவர் உறுதியளித்த ஞானோதயம் மற்றும் இன்னபிற அனைத்துத் தொழில்நுட்பங்களும் சில பல மாற்றங்களோடு அப்படியே இன்றுள்ள வணிகத் துறவிகளால் பின்பற்றப்படுகின்றன. தியானம், யோகா என்று நான் முதலில் இறங்கியது ஈ