Life of Pi 2
வெகு சீக்கிரமே படகில் உள்ள காலொடிந்த வரிக்குதிரை கழுதைப் புலியாலும், கழுதைப் புலியும், உராங்க் உடானும் பெங்கால் புலியாலும் கொல்லப்பட்டு விடுகின்றன. பிறகு நாவலின் பெரும்பாலான பகுதியை பையும், ரிச்சர்ட் பார்க்கருமே கழிக்கின்றனர் (அதுதான் புலியின் பெயர்). இருவரும் அவரவர்களுக்கு எல்லை வகுத்துக் கொண்டு அதிலிருந்து நகராமல் இருக்கின்றனர். படகிலிருந்து குடிநீர் பாட்டில்கள், டின் உணவுகள், மீன் பிடி தூண்டில், மழைநீரைச் சேகரிக்கும் கருவிகள் மற்றும் இன்னபிற பொருட்களையும் கண்டெடுக்கிறான் பை. இந்தப் பொருட்கள் சிலநாட்கள் படகில் உயிரோடிருக்க அவனுக்கு உதவுகின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கிடைத்து அவன் குடிக்கும் போது அடையும் ஆனந்தத்தை மார்டெல் விவரிக்கும் போது, உயிர் பிழைக்க எந்தவித சாத்தியமுமே இல்லாத நிலையில் நடுக்கடலில் ஒரு பட்கில் மாட்டிக் கொண்டு துன்புறுவது எத்தனை பயங்கரமானது என்பதை நம்மால் உணர முடிகிறது. மெதுவாக மீன் பிடிக்கவும் கற்றுக்கொள்கிறான் பை. தான் பிடித்த மீன்களையும், கடலாமைகளையும் பச்சையாகவே உண்டு வாழ ஆரம்பிக்கிறான். அவன் பிடித்ததில் பெரும்பகுதி ஆர்.பி (ரிச்சர்ட் பார்க்கர்)