Posts

Showing posts from 2012

Life of Pi 2

Image
வெகு சீக்கிரமே படகில் உள்ள காலொடிந்த வரிக்குதிரை கழுதைப் புலியாலும், கழுதைப் புலியும், உராங்க் உடானும் பெங்கால் புலியாலும் கொல்லப்பட்டு விடுகின்றன. பிறகு நாவலின் பெரும்பாலான பகுதியை பையும், ரிச்சர்ட் பார்க்கருமே கழிக்கின்றனர் (அதுதான் புலியின் பெயர்). இருவரும் அவரவர்களுக்கு எல்லை வகுத்துக் கொண்டு அதிலிருந்து நகராமல் இருக்கின்றனர். படகிலிருந்து குடிநீர் பாட்டில்கள், டின் உணவுகள், மீன் பிடி தூண்டில், மழைநீரைச் சேகரிக்கும் கருவிகள் மற்றும் இன்னபிற பொருட்களையும் கண்டெடுக்கிறான் பை. இந்தப் பொருட்கள் சிலநாட்கள் படகில் உயிரோடிருக்க அவனுக்கு உதவுகின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கிடைத்து அவன் குடிக்கும் போது அடையும் ஆனந்தத்தை மார்டெல் விவரிக்கும் போது, உயிர் பிழைக்க எந்தவித சாத்தியமுமே இல்லாத நிலையில் நடுக்கடலில் ஒரு பட்கில் மாட்டிக் கொண்டு துன்புறுவது எத்தனை பயங்கரமானது என்பதை நம்மால் உணர முடிகிறது. மெதுவாக மீன் பிடிக்கவும் கற்றுக்கொள்கிறான் பை. தான் பிடித்த மீன்களையும், கடலாமைகளையும் பச்சையாகவே உண்டு வாழ ஆரம்பிக்கிறான். அவன் பிடித்ததில் பெரும்பகுதி ஆர்.பி (ரிச்சர்ட் பார்க்கர்)

Life of Pi 1

Image
Life of Pi யான் மார்டேல் எழுதி மான் புக்கர் பரிசு வாங்கிய நாவல் . வேறு ஒரு நாட்டை மையமாக வைத்து நாவல் எழுதுவதற்காக வந்த மார்டல் , பதினாறு வயது இந்தியச் சிறுவன் ஒருவனுடைய கதையை கேட்ட பிறகு அவரது மொத்த திட்டமும் மாறிவிட்டிருக்கிறது . இந்த நாவல் பற்றி எஸ் . ராமகிருஷ்ணன் தன் தளத்தில் குறிப்பிட்டிருந்தார் . நிதி பெருக்குவதற்காக எங்கள் பள்ளியில் நிகழ்ந்த ஒரு விலைக் குறைப்பு விற்பனையின் போது இந்த நாவல் என் கண்ணில் பட்டது . 2002 ல் வெளியான புத்தகம் என்று நினைக்கிறேன் . ஆனால் பார்க்க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியானதைப் போல் அரதப் பழசாக   இருந்தது . கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் பைண்டிங்கிலிருந்து கழன்று வந்து விட்டன . படிக்க முயற்சி செய்தால் மீதி பக்கங்களும் வந்து விடும் போலிருந்தது .  ஆனால் அதனுடைய விலைதான் என்னை ஈர்த்தது . ஐந்து ருபியா , இந்திய மதிப்புக்கு பதினைந்து ரூபாய் . எனவே எல்லாப் பக்கங்களும் இருக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகு அதை வாங்கி உடனே படிக்கவும் ஆரம்பித்து விட்டே

விஷ்ணுபுரம் - ஜெயமோகனுக்குக் கடிதம்

Image
அன்புள்ள ஜெ, உள்ளே இருப்பவர்கள் வாசித்தேன். விஷ்ணுபுரம் தரும் அதிர்வுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. நண்பர்கள்  விஷ்ணுபுரம் தந்த அனுபவங்களைத் தங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்வதை நோக்கியபடியே இருக்கின்றேன். விஷ்ணு புரத்தை நான் ஒருமுறை வாசித்திருக்கிறேன். இரண்டாவது முறை வாசிக்காமல் அது பற்றி எதையும் விவாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். நாவலை இந்தியாவில் வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் வாசிப்பதற்கென்று கொண்டு வருகிற புத்தகங்களின் எடை வாசித்த நூல்களைத் தொடர்ந்து வைத்திருப்பதைத் தவிர்த்து விடுகிறது. முதல் வாசிப்பில் விஷ்ணுபுரம் கொடுத்த அனுபவம் வினோதமானதும் அலாதியானதும் ஆகும். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் முதல் நூறு பக்கங்களை வாசித்து முடிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆயின. (விட்டு விட்டு வாசித்ததால்) மீதி இருந்த எழுநூற்றி சொச்சம் பக்கங்களை பதினைந்து நாட்களில் வாசித்து முடித்து விட்டேன். எனக்கென்னவோ விஷ்ணுபுரம் என்ற நாவல் ஒரு சிறுகதையின் விரிந்த வடிவம் போலத்தான் தோன்றுகிறது. வாசிப்பு சுகத்திற்கும், ஸ்வாராஸ்யத்திற்கும் துளிக்கூட ப

அ.முத்துலிங்கம் - கடிதம்

Image
அன்புள்ள அ . மு .   கட்டுரைக்கு மிக்க நன்றி . அங்கதம் கலந்த , சிந்திக்க வைக்கும் கட்டுரை . இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்த குருட்டுத்தனம் அமர்நாத் போன்ற மகத்தான இடங்கள் மட்டுமல்லாது , மத வழிபாட்டுக்குரிய எல்லா இடங்களிலுமே தொடர்கிறது . மற்றொரு புறம் தொழிற்சாலைகள் கழிவுநீரை நதிகளில் கலந்து விடும் திருட்டுத்தனம் . காலச்சுவட்டில் என் பெயர் சிவப்பு மொழிபெயர்ப்பாளர்களிடம் தாங்கள் கண்டிருந்த பேட்டி சுவாரசியமாகவும் , பயனுள்ளதாகவும் இருந்தது . மொழிபெயர்ப்பு என்பது இவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டுகிற பணி என்பதை அறிந்து மிகவும் வியந்தேன் . அதேபோல் ஜெயமோகனிடம் தாங்கள் ஊமைச்செந்நாயை அவர் எழுதிய விதம் குறித்து நிகழ்த்திய உரையாடலும் ஓர் எழுத்தாளன் மனம் எவ்வாறு சிந்திக்கிறது ; சக எழுத்தாளர் அவரிடம் என்ன தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது . நான் தங்கள் தளத்துக்கு அவ்வப்போது வருவதுண்டு . உங்கள் சிறுகதைத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை வாசித்திருக்கிறேன் . என் மனம் கவர்ந்த உங்கள்