Posts

Showing posts from 2013

சந்திரபாபுவின் வாழ்வு

Image
கண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்வு கிழக்கு பதிப்பகம் வெளியீடு ஆசிரியர் முகில் சந்திரபாபு என்கிற மகா ஆளுமையின் தாக்கம் முப்பது வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதென்பது இன்றியமையாததொரு நிகழ்வாகும். என் பதின்பருவத்தில் சந்திரபாபுவின் தத்துவப் பாடல்களை எனக்கு முந்தைய தலைமுறையினர் கொண்டாடிக் கொண்டிருந்ததைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தையும் தாண்டி ஒரு தலைமுறைத் தமிழர்களின் பிரியத்துக்குரியவராகவும், பலரின் ஆற்றாமைகளையும், சோகங்களையும் பிரதிநிதித்துவப் படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் பாபு. கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘கண்ணீரும் புன்னகையும்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில் அவனைத் தொடர்ந்த சோதனைகளும், துயரங்களும் எளிமையான மொழியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான கலைஞனை எப்படித் தேவை தீர்ந்ததும் வீசி எரியப்பட்டுவிடுகிற எச்சில் இலையைப் போல, திரையுலகம் அவரை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரிந்துவிட்டது என்பதற்குச் ச

வாலி மரணம்

கவிஞர் வாலியின் மரணச் செய்தி தற்போதுதான் தொலைக்காட்சி வாயிலாக வந்து சேர்ந்தது. எஸ்.பி பாலசுப்ரமண்யம் பேசும்போது வாலி சிறுவயதிலேயே தவறிவிட்டார் என்றார். அது உண்மைதான் என்று பட்டது. நாலுதலைமுறை நடிகர்களுக்கு எழுதியவர். கடைசியாக மரணப்படுக்கையில் இருந்த போது கூட மரியான் படத்திற்குப் பாடல் எழுதியதாக ரஹ்மான் ஒரு சந்திப்பில் குறிப்பிட்டார். சில திரைப்படங்களில் அவர் நடித்ததைப் பார்த்து அவரது ஆளுமையை வியந்திருக்கிறேன். அவரது நகைச்சுவையுணர்வும் அற்புதமான பேச்சாற்றலும் நான் ரசித்து மகிழ்ந்தவை. வாலிக்கு நடந்த ஒரு பாராட்டு விழாவில் அவர் படிக்கும் போது செய்த குறும்புகளைப் பற்றி நாகேஷ் தனக்கே உரிய பாணியில் விவரித்ததும், வாடா, போடா என்று தன் பால்யகால நண்பனை உரிமையோடு அழைத்ததும், அவருக்கு வாலி கொடுத்த பதிலடியும் நினைவுக்கு வருகின்றன. பொதிகைத் தொலைக்காட்சியில் வாலிப வாலி என்ற ஒரு தொடரில் தன் திரையுலக அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் அவரது அபாரமான நினைவாற்றல் வெளிப்பட்டது. நிகழ்வுகளை துல்லியமாக விவரிக்கும் அவரது திறனையும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறேன். நான் திரைப்பாடல்களை ரசிக்க

கு. அழகிரிசாமி - வறுமையில் செம்மை.

அழகிரிசாமியின் சுயரூபம் என்ற சிறுகதையைச் சமீபத்தில் வாசித்தேன். வேப்பங்குளம் என்ற பெருமை மிக்க கிராமத்தைச் சேர்ந்த வீரப்பத் தேவரின் பேரனும், கந்தசாமித் தேவரின் ஒரே மகனுமான வீ.க. மாடசாமித் தேவரின் ஒரு நாளைச் சொல்கிறது கதை. வேப்பங்குளம் பெருமை கொண்ட கிராமம். அதைப் பற்றிச் சொல்லுகையில் கு. அ, வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு . ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு . இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும் , வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய் , அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே , அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘ உண்டு ’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது . என்கிறார். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் முத்தையாத் தேவரிடம் வீராப்பாய்ப் பேசுகிறார். மத்தியானம் காசு வந்து சேரும் என்கிறார். கிணற்றடியில் குளித்து விட்டு, பேருந்து நிறுத்தத்துக்கருகில் உள்ள முருகேசம் பிள்ளையின் பலகாரக் கடைக்குச் செல்கிறார். கையில் காசு இல்லை. முருகேசம் பிள்ளையுடன் நட்பாகப் பேசி ஏதாவது நாலு இட்டிலி ஓசியில் கிடைக்குமா என்று பார

மொழிபெயர்ப்பின் நுட்பம்

உங்களது , இரண்டாவது மொழிபெயர்ப்பைப் படித்தேன்.   மிக நன்றாக வந்திருக்கிறது.    இந்தக் கதை , deceptively simple.   மொழிபெயர்ப்பு கொஞ்சம் கடினம் தான்.   Frost, Snow, Ice, Snowfall, Snowstorm, sleet, போன்ற நுண் வேறுபாடுகளை நமக்கு அனுபவ ரீதியாக உணரும் வாய்ப்பு அதிகம் இருந்ததில்லை.   முதல் , ஓரிரு பத்திகளை மூலத்துடனும் , உங்கள் மொழிபெயர்ப்புடனும் சேர்த்துப் படித்த போது என் மனதில் பட்ட சில மாற்றங்களைச் செய்துள்ளேன்.   ஒன்றும் அதிக வேறுபாடு இல்லை.    உங்கள் மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது.   தொடர்ந்து செய்யுங்கள்.   படிக்க ஆவலுடன் உள்ளேன். அன்புடன் , ராஜா   பி.கு. கரிகாலன் என்ற பெயர் பதிவுகளுக்காக கொண்ட பெயர். குழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு - திருத்தப்பட்ட வடிவம் குழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு அமெரிக்கச் சிறுகதை பென் ஹெக்ட் மொழியாக்கம் : ஜெகதீஷ் குமார் I GOT OUT OF BED to see what had happened in the night. I was thirteen years old. I had fallen asleep watching the snow falling through the half-frosted window. இர வில்   வு   என்ன நிகழ்ந்திருக்கிறதென்

வாசிப்பும், பகிர்தலும்

அன்புள்ள கரிகாலன் , உங்கள் ஊக்கத்துக்கும் , பாராட்டுக்கும் நன்றி. அந்தக் கதையை மீண்டும் வாசித்துத் திருத்தி எழுதியிருக்கிறேன். முடிந்தபோது வாசித்துப் பார்க்கவும். வாசகர் அனுபவத்தில் வரிசையாகப் பதிவுகளை வெளியிட்டு வருகிறீர்கள். வாடிவாசல் , தேவதேவன் பதிவுகளைப் பார்த்தேன். தேவதேவன் கதைகள் பதிவை முழுமையாகப் படித்தேன். கதைகளின் சாராம்சத்தை அழகாகக் கோடி காட்டியிருக்கிறீர்கள். இவ்வருடம் நான் விடாது நாவல்கள் மட்டுமே படித்து வருகிறேன். அவற்றில் மூன்று மட்டுமே தமிழ். ஜெயமோகனின் ரப்பர் , பின் தொடரும் நிழலின் குரல் , அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு. மற்றவை அனைத்தும் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை. சில அற்புதமான நாவல்களை அச்சில் படிக்க முடிந்தது மிகுந்த சந்தோஷம். சரமாகோவின் Blindness, Marquez's One hundred years of solitude, Paulo Coehlo's Eleven minutes, அவ்வப்போது ஆசுவாசத்துக்காக ஜான் கிருஷமின் king of torts, the bleachers, Micheal Crichton's Air Frame, போன்றவையும் படித்தேன். தற்போது அமிதவ் கோஷின் glass palace நூறு பக்கம் பாக்கியிருக்கிறத