அத்வைதம்
ஒன்றுமற்றதிலிருந்து ஓர் புள்ளியாய்த் தோன்றி வெடித்தேன் சிதறுண்டேன் பிரபஞ்ச வெளியாய் பால் வீதியாய்ப் பரவினேன் என் பிரம்மாண்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காய் உடலுக்குள் குடிபுகுந்தேன் தனிமை வாட்ட துணை வேண்டி என் விலா எலும்பைப் பறிகொடுத்தேன் கூடி முயங்கினேன் நுரைத்துக் குமிழ்களாய் பெருகினேன் குமிழ்கள் என்னைச் சூழ்ந்து கொள்ள மூச்சுத் திணறிற்று உடல் என்னும் உடை சிறையாகிப் போயிற்று ஒன்றுமற்றதிலிருந்து எல்லாம் ஆனேன் எல்லாம் ஆனபின் என்னைத் தேடினேன் தேடித் தீர்ந்தபின் உண்மை உணர்ந்தேன் இரண்டற்றதாய் நானே இருந்தேன்