Posts

Showing posts from June, 2011

எஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்

Image
நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளரான எஸ் . ராமகிருஷ்ணன் எழுதிய நாவலான யாமம் பற்றி நான் எழுதிய பரிந்துரையை சில நாட்கள் முன்பு அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன் . அதை அவர் படித்து விட்டு எனக்கு இன்று பதில் எழுதியிருந்தார் . அந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் . அன்பு ஜெகதீஷ் யாமம் பற்றிய உங்கள் விமர்சனம் மிக நன்றாக உள்ளது,  நுட்பமாக வாசித்து எழுதியிருக்கிறீர்கள் உங்கள் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி மிக்க அன்புடன் எஸ்ரா நீண்ட நாட்களுக்குப் பின் எனக்கு வாசிப்பிலும் எழுதுதலிலும் ஆர்வம் மீண்டதற்கும், நல்ல திரைப்படம் பற்றி நான் அறிந்து கொண்டதற்கும் அவரது எழுத்துக்கள் ஒரு காரணம். நான் எழுதிய யாமம் பரிந்துரை

வழியனுப்புதல்

Image
வழியனுப்புதல் சிறுகதை நாகப்பச் செட்டியாருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தும் நெஞ்சு எரிச்சல் தீரவில்லை. கொஞ்ச நாட்களாகவே இந்த எரிச்சல் நீங்காமலேயே நெஞ்சில் தேங்கி நிற்கிற மாதிரிதான் இருக்கிறது. குடிச்சதுக்கப்புறம் வயித்துக்கு எதாவது கொடுத்தாத்தானே, அப்புறம் சாராயம் உள்ளே குடலை அரிக்காம என்ன பண்ணும் என்பாள் ரேவதி, ஏதோ புருஷன் மேல் ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி. நாசமாய்ப் போனவள். என்னை இப்படி ஆக்கினதே அவள்தானே. ஊருக்குள் ராஜா மாதிரி துதிபாடும் ஆட்கள் புடைசூழ வலம் வந்தாலும், மனசில் விழுந்து விட்ட முடிச்சு மட்டும் அவிழ்க்க மாட்டாமல் நெஞ்சை சதா நிரடிக்கொண்டிருக்கிறது. அந்த முடிச்சு தரும் வலிக்குத்தான் வேளாவேளைக்கு மருந்து தர வேண்டியிருக்கிறது. கூண்டிற்கு வந்து வேலை செய்கிற பசங்கள் எல்லாரும், வாத்தியாரே, உங்க திறமை யாருக்கு வரும்? ரெண்டு ஆஃப் பாயிலை வச்சுக்கிட்டே ஒரு ஆஃபு, ரெண்டு க்வாட்டரு உள்ள தள்ளிருவீங்களே.’ என்பார்கள். எப்படி வாத்தியாரே ஃபுல்லா ஏத்திட்டு மலை மாதிரி ஸ்டெடியா நிக்கிறீங்க? என்று அதிசயிப்பார்கள். அது சரிப்பா வாத்தியாரு நம்பள மாதிரியா, இப்பவும் கூண்டுக்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்

கனவுகளின் உபாசகன்

Image
கனவுகளின் உபாசகன். ஆழ்ந்த உறக்கத்தில் சட்டென்று பிரசன்னமாகி மிதக்கும் சிறுகனவென கடல் நடுவில் அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டுதான் அடர்ந்து திரவமாகி கப்பலைச் சுமந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது சிவராமனுக்கு. கடல் இரவில் ஒரு வினோதத் தோற்றம் கொண்டுவிடுகிறது. அதன் பிரம்மாண்டத்தையும், அடியாழங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களையும் ஒடுக்கிக் கொள்கிறது. ஏதோ கருவறைக்குள் மீண்டும் புகுந்து சுருண்டு கொண்ட மாதிரி ஆகிவிடுகிறது இரவில். மேல்தளத்தில் நின்றபடி வானம் பார்த்தால் யாரோ கழட்டி வீசின மோதிரங்கள் போல நட்சத்திரங்கள் தெரிகின்றன. அவற்றோடு உரையாடித் தன் கனவுகளின் விசித்திரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று ஆசைப்பட்டான் சிவராமன். தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்த தனிமையிலிருந்து இது வேறுபட்டதாக இருந்தது. இதுவரையிலும் அவன் தனிமையைக் கனவுகள் ஆண்டு கொண்டிருந்தன. தான் வசிக்கும் உலகத்தினின்றும் முற்றிலும் வேறான, கிளர்ச்சியும், மர்மங்களும் கொண்ட கனவுகள் அவனுக்குள் இடையறாது தோன்றி அவனை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. கனவுலகத்திலிருந்து அவன் பெறும் வாழ்வனுபவங்கள் நனவின் கசப்பிலிருந்து அவ

ஆன்மிகத்தின் நுழைவாயில்

Image
வேதாந்த நூல்களில் மூன்று நூல்கள் பிரஸ்தான த்ரயம் என்றழைக்கப்படுகின்றன. அவை உபநிஷத், பிரம்ம சூத்திரம், மற்றும் பகவத் கீதை ஆகியனவாகும். இவற்றில் உபநிஷத் ஸ்ருதிப் பிரஸ்தானம் ஆகவும், பிரம்ம சூத்திரம் சூத்திரப் பிரஸ்தானம் ஆகவும், பகவத் கீதை ஸ்ம்ருதிப் பிரஸ்தானம் ஆகவும் செயல்படுகின்றன. ஆதி ஷங்கரர் இந்த மூன்றுக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். இதனால் அவருக்கு பாஷ்யக்காரர் என்ற பெயர் உண்டு.           பாஷ்யம் மட்டுமன்றி ஷங்கரர் சுயமாகவும் பல நூல்களை இயற்றியுள்ளார். ஆத்ம போதம், உபதேச சாகஸ்ரீ, அபரோக்ஷ அனுபூதி போன்றவை அவற்றில் அடங்கும். இவற்றில் நாம் அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் கருத்துக்களைப் பார்க்கவிருக்கிறோம்.           பிரஸ்தான த்ரயத்தின் அடிப்படையில் சுயமாக இயற்றப்படும் நூல்களுக்கு பிரகரண கிரந்தங்கள் என்று பெயர். இவை வேதாந்தத்தின் துவக்க நிலையில் இருப்பவர்களுக்காக இயற்றப்படுபவை. மூன்று வகையான பிரகரண கிரந்தங்கள் உள்ளன. அவை, 1.     முழு வேதாந்தத்தின் சாரத்தையும் தருவது. எ.கா. தத்துவ போதம். 2.     ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்குவது. எ.கா. பஞ்சதசி. இந்நூலின் ஒவ்வொரு அத்யாயமும்

இல்லறம்

Image
ஸ்வாமி குருபரானந்தர் இல்லறம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையைக் கேட்டேன். உரை கேட்கும்போது எடுத்து வைத்துக்கொண்ட குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.         அப்பைய தீக்ஷிதர் தான் எழுதிய நூலின் முன்னுரையில் சிவபெருமானையும், பார்வதியையும் வணங்கித் துதிக்கும்போது, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது அவரவரது தவத்தின் பயனாகவே என்று கூறுகிறார். நம் வாழ்வில் நாம் யாருடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அது நாமும் அவர்களும் செய்த தவத்தின் பயனாகவே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.         மனித இனம் தனித்து வாழும் குணம் கொண்ட இனம் அல்ல. அதெற்கென்று இருக்கிற சமுதாய அமைப்பில் இணைந்து வாழ்வதற்குரிய வகையில்தான் அவர்களது இயல்பு படைக்கப்பட்டிருக்கிறது. நமது தேவைகளுக்காக பிறமனிதர்களுடன் நாம் இணைந்து வாழ்வது நமக்கு அவசியமாகிறது. தனிமையில் மகிழ்ச்சி அடைவதென்பது ஆதியில் ஹிரண்யகர்பனாலும் கூட முடியாத காரியமாக இருந்தது, எனவேதான் இருமை படைக்கப்பட்டது என்று ஓர் உபநிஷத் கூறுகிறது. மேலும் ஒரு மனிதன் பிறருடன் பழகும்போதுதான் அவன் மனம் வளர்ச்சி அடைகிறது. இரண