கைவல்ய நவநீதம் 1

கைவல்ய நவநீதம்
கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல். அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை என் கையில் கிடைத்தது. தொள்ளாயிரத்து இருபதுகளில் எழுதப்பட்ட மணிப்பிரவாள நடையிலான தமிழ். குரு ஒருவர் விளக்க நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடியும். கோவிலூர் மரபைப் பின்பற்றும் மடங்களில் கைவல்ய நவநீதம் மிகப் பிரசித்தம். ஸ்வாமி ஓம்காரானந்தாவின் கைவல்ய நவநீத வகுப்பு கொஞ்சம் கேட்டிருக்கிறேன். இது பொன்னம்பல ஸ்வாமிகள் உரையைப் படித்து எனக்குப் புரிந்ததைக் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.
இவ்வுலகில் எல்லா  மனிதர்களும்  தங்கள்துக்கத்தை நீக்கிக்  கொள்ள வேண்டுமென்றும் , ஆனந்தத்தை அடைய வேண்டுமென்றே விரும்புகிறார்கள்இவையிரண்டும் முழுமையாக அடையப்பட்ட நிலை முக்தி, மோக்ஷம் அல்லது ஆன்ம விடுதலை  என்றழைக்கப்படுகிறது.
இந்த நிலையை அடைய வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி பிரம்ம ஞானத்தை  அடைவதே.
இதன் பொருட்டே பரம கருணாநிதியாகிய பரமேஸ்வரன் நான்கு வேதங்களின் வாயிலாகவும் அந்த வீடு பேற்றை அடைய விரும்புகிற சாதகர்களுடைய தகுதிக்கேற்ப கர்மம்பக்தியோகம் மற்றும் ஞானம் ஆகிய நான்கு வழிகளையும் கூறியுள்ளார்.
இவற்றுள்கர்மம்,பக்தி,யோகம்ஆகிய மூன்றும் மனத்தூய்மைஅடைவதற்காக மேற்கொள்ளப்படும் சாதனைகள்.ஞானம் என்கிற சாதனை ஒன்றே முக்தியை அடைவதற்கு நேரடி சாதனையாக இருக்கிறது.இதை உணர்ந்த நம் பண்டைக்காலத்துமகரிஷிகள் ஞானத்தையே உபதேசிக்கும் உபநிஷத்,பகவத்கீதைபிரம்மசூத்திரம்ஆகியநூல்களைப் பின்பற்றி வழி நூல்களையும்சார்பு நூல்களையும் இயற்றினர்யோக வாசிஷ்டம் , பஞ்சதசி,   
  விவேக சூடாமணி ஆகியவை அவற்றுள் ஒருசில.
அவற்றின் பொருளை எல்லாம்   நன்கறிந்து தமிழ் மொழியில் எளிதில் உணருமாறு கைவல்ய நவநீதம் என்னும் நூலை செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார் ஸ்ரீ தாண்டவராய சுவாமிகள். அந்நூலுக்கு ஸ்ரீமத் பொன்னம்பல தேசிக சுவாமிகள் தத்துவார்த்த தீபம் என்னும் பெயரில் உரை எழுதியுள்ளார்.
கைவல்ய நவநீதம் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி தத்துவ விளக்கப் படலம் என்றும், இரண்டாவது பகுதி சந்தேகம் தெளிதல்  படலம் என்றும் அழைக்கப்படுகின்றன.
நூன்முகம்
இந்நூல் மங்கல ஸ்லோகத்தோடு துவங்குகிறது. மூல நூல்கள் இருக்க, வழி நூல்களுக்கு மங்கலம் அவசியமா என்று பார்த்தால், தான் துவங்கிய நூலை நன்முறையில் எழுதி முடிக்க வேண்டுமென்பதற்காகவும்அதற்குத் தடையாகவுள்ளவை அனைத்தும் இம்மங்கலத்தால் நாசமடையும் என்ற எண்ணத்தாலுமே இயற்றப்பட்டது. தடைகள் பாவத்தின் மூலமே விளையும். பாவத்தினால் நற்காரியங்களை நிறைவேற்ற இயலாது. பாவங்களைப் போக்குவதற்கு மங்கலம் அவசியம். இயற்றுபவர் பாவமில்லாதவராக இருப்பினும் மங்கலம் செய்யவேண்டியது அவசியமே. இல்லையெனில் நூலைக் கற்க விரும்புபவர்க்கு நூலாசிரியரிடத்து நாஸ்திகப் பிராந்தியுண்டாகும். நூலை ஆர்வத்துடன் அணுக மாட்டார்
மங்கலம் மூன்று வகைப்படும்.
வஸ்து நிர்தேச ரூப மங்கலம்;
நமஸ்கார ரூப மங்கலம்
ஆசிர்வாத ரூப மங்கலம்.
சகுனமும்நிர்குணமாகவும் உள்ள  ஒரே மெய்ப்பொருள் பரமாத்மா. அந்தப் பரமாத்மாவின் புகழ் பாடுவது வஸ்து நிர்தேச ரூப மங்கலம் எனப்படும்.
அவ்வாறன்றி அந்த மெய்ப்பொருளுக்கு வணக்கம் கூறுவது நமஸ்கார ரூப மங்கலம் ஆகும்.
தனக்கோ அல்லது மாணவருக்கோ பிடித்தமான வஸ்துவைப் பிரார்த்திப்பதுஆசிர்வாத ரூப மங்கலம் எனப்படும்

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை