Posts

Showing posts from 2010

அன்பு நண்பர்களுக்கு

Image
அன்பு நண்பர்களுக்கு, வரும் நவம்பர் பத்தாம் தேதி இந்தியா வருகிறேன். இலக்கிய நண்பர்கள் யாரையும் சந்திப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஊரில் எனக்கிருக்கும் இலக்கிய நண்பர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவன் யுவராஜ் எனக்கு சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து உதவியவன். இன்னொருவர் கே.சி. முருகன். தனிப்பயிற்சிக் கல்லூரி வைத்திருக்கிறார். அப்துல் கலாம், கண்ணதாசன், புஷ்பா தங்கதுரை, இந்த மாதிரிதான் அவரது வாசிப்புப் பழக்கம். ஊருக்குப் போனால் இருவரும் தத்துவம், இலக்கியம், கல்வி என்று மணிக்கணக்கில் பேசுவோம். என் திறமை  மீது அபார நம்பிக்கை அவருக்கு. நான் அங்கு சென்றால் என்னை வைத்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்பு ஒன்று எடுத்து விடுவார். நானும் நிறைய புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு போய் வகுப்பெடுப்பேன் . இடையிடையே எனக்குத் தெரிந்த, நான் அரைகுறையாகப் பயிற்சி செய்கிற எளிய யோகப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் வெளிச்சத்தைப் பார்க்க பரவசமாக இருக்கும். இந்த ஆண்டு புத்தகச் சந்தைக்குச் செல்லலாமா என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் சென்னையின் மக்கள் நெருக்கத்தை ந

அருகாமை

Image
நான் அறியவில்லை உன் அருகாமையின் அருமை. திடீரென்று மலட்டு நிலமாகி விட்டது என் மனம். ஜன்னலூடே தலை நீட்டுகிற  பூச்செடியை புறக்கணித்து விட்டு கணினித் திரையின்  ரோஜாவை  ரசிக்கும்   மனிதமந்தையில் ஒருவனானேன். நீ என் மீது வீசிய புன்னகைகள் சேகரித்தேன். சேகரித்த பெட்டி இன்று சேற்றுக்குள். குப்பைத்தொட்டியைக் கிளறிக் கிளறி அந்தப் பொக்கிஷப் புன்னகைகளைப் பொறுக்கி விடப் பார்க்கிறேன். நான் அறியவில்லை உன் அருகாமையின் அருமை. என் செல்ல தேவதையின் சிறகுகளை போர்வையாக்கி உறங்கினேன். அவள் இமைகளுக்குள் பூக்கும் கனவுகளைத் திருடிக் கொண்டேன். பூ தாங்கும் காம்புக்கு என் காதலைப் பொழிய வேண்டுமென்று புரியாமல் போனேன். அவள் என் உதிரத்தில் கலந்தாலும் இதயத்துடிப்பின் அடிநாதம் அவளே ஆனாலும் என் சுவாசத்திலும் குறட்டையிலும் உட்புகுந்து வெளிச் செல்லும் உயிர் அவளே ஆனாலும் குருதியோட்டம் அவள் பக்கம் பாயவில்லை. துடிப்பின் ஒலி அவளறியாமலேயே போனது. என் சுவாசம் வேறு திசையில் பயணித்ததை நான் அறியவில்லை. என்ன ஆயிற்று எனக்கு? ஏனிப்படி மரத்து விட்டதென் மனம்? காய்ந்து போன  என் நந்தவனம் இனி ஒரு தீக்குச

கல்வி கடிதங்கள்

Image
Hi Jagadeesh எனது இரண்டாவது மகனை பள்ளியில் சேர்த்து விட்டு அங்குள்ள அடிப்படை வசதி இன்மை மற்றும் கல்வி கற்பிக்கும் முறையில் எனக்கு உடன்பாடிலாததால் பள்ளியோடு ஒரு பெரும் போராட்டத்தை தனியாக அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறேன். இது குறித்து ஏற்கனவே சில  பதிவுகளும்  போட்டிருக்கிறேன்.  பதிவுகளை படித்து எனது கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைப்பவர்கள் தங்கள் தளத்தில் கொஞ்சம் இது குறித்து எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். அல்லது விருட்சத்தில் பின்னூட்டம் இடுமாறு  கேட்டுக் கொள்கிறேன.் நியாயம் இல்லை என்று நினைத்தால் விருட்சத்தில்  அதன்  காரணங்களை பின்னூட்டம் இடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு உங்கள் கருத்துக்கள் பெரிய உதவியாக இருக்கும்.  இது ஒரு தாயின் போராட்டம். பள்ளியில் வேறு எந்த பெற்றோரும் இது வரை பெரிதாக இதில் இறங்காத நிலையில்  இது ஒரு தனி மனித போராட்டம்.  Dept of Edu அதிகாரிகளிடம் புகார் அளிககு முன் பலரின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.  நன்றி. விருட்சம் Hi Jagadeesh Happy Diwali. Its long time since I communicated to you.  My younger son is attending LKG and he is 3+. The school forces h

கிம் கி டுக் தரும் ஜென் அனுபவம்

Image
தென் கொரிய இயக்குனரான கிம் கி டுக்கின் spring, summer,fall,winter ….and spring படம் முற்றிலும் புதிய காண்பனுபவத்தை வழங்கிய ஒரு திரைப்படம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, அவற்றின் நடுவே உள்ள ஏரி ஒன்றில் மிதந்தபடி நிற்கிற ஓர் பௌத்த ஆசிரமத்தில் பிறந்து வளரும் ஓர் இளம் துறவியும் அவனை வளர்க்கும் குருவும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். குழந்தைப் பருவத்திலேயே அந்த இளம் துறவிக்குள் முகிழ்த்து வளரும் அகங்காரம், தன்னையே முன்னிலைப் படுத்தி, தன்னைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக அவன் செய்யும் செயல்கள் மூலம் அறியப்படுகிறது. ஏரியில் உலவும் தவளை, பாம்பு, மீன் போன்ற சின்ன உயிர்களின் உடலில் கயிற்றைக் கட்டி அவற்றை நீரில் விடுகிறான். அவை துடிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து மகிழ்கிறான்.(சிறுவனாயிருக்கும் போதுதான்). குரு இவன் செய்கைகளை அமைதியாகப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இரவில் உறங்கும் போது அவன் முதுகில் பெரிய கல் ஒன்றைக் கட்டி விடுகிறார். காலையில் கல்லை அவிழ்க்கச் சொல்லிக் கேட்கும் அவனிடம், நீ போய் அந்த உயிரினங்களை விடுவித்து விட்டு வா. அதுவரை நீ கல்லைச் சுமந்து கொண்டுதானிருக்க வேண்டும். அவற்

எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம்

Image
நாவல் :          உப பாண்டவம் ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு : விஜயா பதிப்பகம் பக்கங்கள் :  384 விலை :      200 பரிந்துரை : ஜெகதீஷ் குமார்         உப பாண்டவம் மகாபாரதம் என்கிற இதிகாசத்தின் எண்ணற்ற கதாபாத்திரங்களின் நாம் பார்த்திராத பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. திரேதாயுகத்தில் விளங்கின அஸ்தினாபுரத்துக்குள்ளும், இந்திரப் பிரஸ்தத்துக்குள்ளும் யுத்தபூமியான குருக்ஷேத்திரத்துக்குள்ளும் சமகால மனிதனொருவன் பயணப்பட்டுத் தான் அடைந்த அனுபவங்களை விவரிப்பதைப் போலவே முழுக்கதையும் அமைந்துள்ளது. நாவல் என்றால் என்ன என்பதற்கான இலக்கண விதிகள் யாவை என்று எனக்கு முழுமையாகத் தெரியாததால், உப பாண்டவத்தில் அவை எத்தனை தூரம் மீறப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும் நாம் வாசித்து வருகின்ற வழக்கமான நாவல் வரிசையில் உபபாண்டவத்தைச் சேர்த்து விட முடியாதென்றே தோன்றுகிறது. (இது போன்று நீட்டி முழக்குவதற்கு நான் ஒன்றும் அப்படி நிறைய நாவல்கள் படித்தவனல்லன். என் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் மேற்கண்ட கருத்தைக் குறிப்பிட்டேன்.)         இந்திய

அகிராவின் ராஷோமோன்

Image
லேகா அவர்கள் யாழிசை ஓர் இலக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது. படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள். கதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள

மாலத்தீவின் மாணவர்கள்

Image
இந்த ஆசிரியர் தினத்தில் மாலத்தீவில் ஒரு ஆசிரியனாக எனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த திரு விருட்சம் அவர்களுக்கு நன்றி. மாலத்தீவுகளில் ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. அதுதான் உலக ஆசிரியர் தினம். நாம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றுவதற்காக செப் 5ல் கொண்டாடுகிறோம்.  நான் இங்கு வந்து ஏழு வருடங்களாகிறது. ஓர் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியனாகவும், தற்போது துறைத்தலைவராகவும் இருக்கிறேன். இந்நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.  இங்குள்ள மாணவர்களுடன் பழகியதில் அவர்களைப் புரிந்துகொண்டேன் என்று சொல்வதை விட எனக்குள் இருந்த ஆசிரியனை நான் சுத்திகரித்துக் கொண்டேன் அல்லது மீள் உருவாக்கம் செய்து கொண்டேன் என்பதே உண்மை. வகுப்பில் நுழைந்ததும் பதறிப்போய் எழுந்து வணக்கம் சொல்கிற, வகுப்புகள் நடைபெறுகின்ற போது ஆசிரியருக்கு எதிரான எந்தக் கருத்தையும் பேசாத, ஆசிரியர் சொல்வது சில சமயங்களில் தவறேயாயினும் அதை மறுத்துப் பேசாத, எங்கு அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் மரியாதையோடு விளிக்கிற நம் நாட்

ஜெயமோகன் கட்டுரைக்கு மறுவினை

Image
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு  கீதையும் யோகமும்   குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு கடிதம் எழுதியிருந்தேன் . அந்தக் கட்டுரை பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விட்டது.  அவருக்கு     நன்றி . அந்தக் கடிதத் தொடர்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ( அவர் தவறாக எண்ண மாட்டார் என்றெண்ணி ) அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு , ( உங்கள் கட்டுரைக்கு மறுவினை எழுத வேண்டுமென்று ஆரம்பித்து இந்தக் கடிதம் வரைமுறையின்றி நீண்டு விட்டது. மன்னிக்கவும்) கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் . கீதையை மதிப்பவர்கள் , எதிர்ப்பவர்கள் இருவரிடமுமே நிலவி வரும் தவறான அபிப்ராயங்கள் பற்றி நீங்கள் அற்புதமாக எழுதியிருந்தீர்கள் .  இந்த எதிர்வினையை ஆற்றுவதற்கு எனக்குள்ள தகுதியை முதலில்   சொல்லி விடுகிறேன் . தகுதி இல்லை என்றே சொல்லலாம் . இருப்பினும் கீதையைத் தட்டுத் தடுமாறிக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதையே   ஒரு தகுதியாக முன்வைக்கிறேன் .  கோயில்களில்   விற்கும்   கீதை பதிப்பைத்தான்   நான் முதலில் வாசித்தேன் . அது பக்தி   மார்க்