ராவணன் - ஆதாரமாய் சில சந்தேகங்கள்:
ராமாயணக் கதையை மணிரத்னம் எடுத்து சொதப்பி விட்டார் என்ற குற்றச்சாட்டை நிறுத்திவைத்து விட்டு, உருப்படியாகப் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்கலாம். மணிரத்னத்துக்கென்று ஒரு உலகம் இருக்கிறதாம். ஹாசினி பேசும் படம் விமர்சனத்தில் யூகிசேது சொன்னார். அந்த உலகில் வரும் பாத்திரங்கள் அவரது விருப்பத்திற்கேற்பவே இயங்கமுடியும். அதை நிரூபிப்பது போலவே ராவணனில் வரும் பாத்திரங்கள் இயல்புக்கு மாறுபட்டு நடந்துகொள்ளுகின்றன. தங்கை சாவுக்குக் காரணமானவனின் மனைவியைக் கடத்தி வந்து அவள் சாவுக்கு அஞ்சாதவள் என்று தெரிந்ததும் அவள் மீது காதல் பிறந்து விடுகிறது வீராவுக்கு. அவளும் அவனைப் பார்த்துக் கிறங்கி நிற்பது மாதிரிதான் தெரிகிறது. நகரப் பின்னணியில், அரிவாள் கலாசாரத்திலும் வேர்கொண்டு நின்ற பல திரைப்படங்களைப் பார்த்துப் பழகியிருக்கிற நமக்கு, ஒரு காட்டைப் பின்புலமாகக் கொண்டு, அதன் மலைகளும், மரங்களும், நதியும், ஓடையும், சேறும், சகதியும் படம் நெடுக விரிந்து கிடப்பது புத்துணர்ச்சியூட்டும் காண்பனுபவமாகத்தான் இருக்கிறது. ஆனால் காட்டின் மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வுச் சிக்கல்களும், போராட்டங்களும் பதிவு