முள்
பத்து வயதில் என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. பள்ளிப்பருவத்தில் கோடை விடுமுறைக்கு எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வது வழக்கம். எங்கள் தாத்தா திரையரங்கு ஒன்றின் மேலாளராக இருந்தார். திரையரங்கை ஒட்டி ஒரு பெரிய கோடவுன் இருந்தது. வெள்ளாவி வைத்து வேக வைத்த நெல்லை கோடவுனில் பரப்பிக் காயப் போடுவார்கள். கோடவுனிலேயே தங்கி நெல் காய வைத்தது ஒரு குடும்பம்.நெல் காயப் போடாத சமயங்களில் காலியாகக் கிடக்கும் கோடவுன் எங்களது விளையாட்டு மைதானமாக மாறிவிடும். கிரிக்கெட் , ஹாக்கி , கிட்டிப்புள் என்று மனதுக்குத் தோதான விளையாட்டுகளை ஆடுவோம்.என் வாழ்க்கையில் நான் ஹாக்கி மட்டையைத் தொட்டிருக்கிறேன் என்பதை நினைத்து எனக்கு இன்னும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. முதல் முறை ஹாக்கி விளையாடியபோது பந்தை அடிப்பதற்கு பதிலாக பக்கத்து வீட்டு நந்தகோபாலின் பல்லை உடைத்து விட்டேன். அவன் வாயெல்லாம் ரத்தம். நல்லவேளை. பல் மீண்டும் வளர்ந்து விட்டது. ஒருமுறை நானும் என் தம்பியும் காலியாக இருந்த கோடவுனில் ஹாக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது நான் அடித்த பந்து