Posts

Showing posts from October, 2022

பிறப்பொக்கும் - சிறுகதை

Image
  நன்றி: பதாகை. ஜூலை, 2022 பெருமாள் கோவில் வீதிக்குள் சாமி ஊர்வலம் நுழைந்ததும் அவரவர் வீட்டு வாயில்களில் நின்றிருந்த தெரு மக்கள் எல்லாரும் கைகூப்பி சாமியையே நோக்கிக் கொண்டிருந்தனர் . செந்தில் மட்டும் ஏறிட்டு பாட்டியின் முகத்தைப் பார்த்தான் . அவள் உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன . தொங்கிப் போயிருந்த கன்னச் சதைகள் நடுங்க ,  சுருங்கி வரி விழுந்த கண்களில் நீர் பெருகியிருந்தது . அவள் சாமியை நோக்கிக் கைகூப்பியிருக்கவில்லை . செந்தில் குழப்பமடைந்து , அவள் சேலை நுனியைப் பிடித்து மெல்ல இழுத்தான் . பாட்டி இவனைக் கவனிக்காமல் தலைகுனிந்து அழுகையைத் தொடர்ந்தபடி இருந்தாள் .  அருகில் நின்றிருந்த லல்லி அம்மா அவள் தோள்களில் ஆறுதலாய்க் கை வைத்தாள் . “ ஏனுங்கம்மா , எதாச்சும் நெனச்சுகிட்டீங்களா ?” “ வருசா வருசம் சாமி ஊர்வலத்துக்கு பாலு முன்ன நின்னு எல்லாம் செய்வான் . இப்ப புள்ள எங்க இருக்குதோ , என்ன பண்ணுதோ ? அந்தக் கரிவரதராஜ பெருமாள்தான் என் புள்ளையைக் காப்பாத்தித் திருப்பி அனுப்பணும் .” அழுகையினூடே பேசியதால் அவள் குரல் நடுங்கி