Posts

Showing posts from October, 2011

சற்குணம் என்ற அசல் கலைஞன்

Image
               சமீபத்தில் மூன்று   தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன் . எங்கேயும் எப்போதும் , தெய்வத் திருமகள் மற்றும் வாகை சூட வா . ஆச்சரியமூட்டும் வகையில்   அதில் இரண்டு படங்கள்   நல்ல கருத்துக்களைச் சொல்லும் லேசான பிரசார தொனி கொண்ட கதைகளைச் சொல்பவை . எங்கேயும் எப்போதும் பேருந்து விபத்து ஒன்றை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது . பேருந்தில் பயணம் செய்பவர்களையும் அவர்களது பின்புலத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களோடு நமக்கு உணர்வு பூர்வமானதொரு உறவை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் . பிரதான கதை மாந்தர்கள் மட்டுமின்றி விபத்துக்குள்ளாகும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுமே மனதில் நன்கு பதிந்து விடுகின்றனர் . ஜெய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் . எந்த போலித் தோரணைகளுமின்றி இயல்பாக நடிக்கக் கூடியவர் . ஒரு சராசரி குறு நகரத்து இளைஞனை நினைவு படுத்தும் தோற்றம் கொண்டவர் . அவரது உரையாடல் வெளிப்பாடு தனித்துவமும் , எளிமையும் கொண்டது . அஞ்சலியும் அப்படியே . தமிழ்த் திரைக்கதாநாயகிகளில் நல்ல திரைப்படங்

இருத்தல்

Image
கடல் மீது நெளியும் வெயில் வளைக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும் மணல் நிற நண்டுகள் அலைகள் சமப்படுத்திச் சென்ற மணற்பரப்பை இலக்கற்றுக் கோடுகள் கிழித்துச் சிதைக்கும் விரல்கள். தாழ்வாய்ப் பறந்து மீன் தேடும் கடற்பறவைகள். படகுகள் எழுப்பிச் சென்ற அதிர்வுகளுக்கு அஞ்சிக் கரையொதுங்கும் குற்றலைகள். எதிரில் விரிந்த பிரம்மாண்டத்தின் முன்னிலையில் ஒரு துளியென நான் கரைந்தபடி.