8 டிசம்பர், 2025

பாலாஜி ராஜூவின் நெடும்பாதைகள்

 



பாலாஜி ராஜூவின் நெடும்பாதைகள்

வணக்கம் ஜெகதீஷ்,

 உங்களுக்கும் தங்கைக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

கதையை முடித்துவிட்டேன், பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்து அயர்ந்துவிட்டேன். தயக்கத்துடன் உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன், நேரமிருக்கையில் வாசித்துப் பாருங்கள். தயக்கத்திற்கு காரணம் கதை ஒருவேளை வெளியானால் உங்களிடமிருந்து வரும் எதிர்வினைக்கான எதிர்பார்ப்பு அம்சம் இப்போதே பகிர்வதால் இல்லாமல் போய்விடுமே என்பதால்தான். ஆனால் கதைக் கட்டுமானம் குறித்த உங்கள் பார்வையை அறிவதற்காக அனுப்புகிறேன். எனக்கு கீழ்கண்ட சந்தேங்கள் இருக்கின்றன,

1. கதையில் மையப்பாத்திரத்தின் நிலையை நம்பகமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அதாவது வாசகனுக்கு அந்தப் பெண்மணியின் நிலை மீது empathy உருவாகுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இதைத்தான் 'it lacks conviction' என்று குறிப்பிட்டேன். 

2. கதையின் முடிவு இயல்பாக இல்லையோ என்று தோன்றுகிறது. கவிதைகளைப் போல சிறு தருணங்களைப் பிடித்துக்கொண்டு கதையை முடிக்கிறேனோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

3. கதையின் நாடகத்தன்மை திணிக்கப்பட்டதைப் போல இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

4. கதையின் தலைப்பு இப்போதைக்கு வைத்திருக்கிறேன், வேறு தோன்றவில்லை.

அன்புள்ள பாலாஜி, 

பாதை - சிறுகதை வாசித்தேன். நீங்கள் இதுவரை எழுதிய கதைகளில் இது ஆகச் சிறந்தது என்று சொல்வேன். இதற்குப் பிறகு உங்கள் கதைகள் இதைவிடச் சிறந்ததாக வரக்கூடும். எனக்குக் கதையை வாசித்து முடித்ததும் சட்டென்று தோன்றியது இதுதான்.

ஏன் சிறந்த கதை என்கிறேன்? காரணம் உங்கள் மொழி, அன்னம்மாளின் உலகத்தை உருவாக்குவதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை. கதையில் ஒன்றுமே நடப்பதில்லை. ஆனால் கதையில் ஒரு வலி மிகுந்த பிரிவு, வெளியேற்றம், ஒரு வீட்டின் சிதைவு அதன் அத்தனை ரணங்களோடும் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் ஒரு முறை பேசியது போல கலையும், கைத்திறனும் ஒன்றொடொன்று முயங்கி இயங்குபவை. நீங்கள் கதைத் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். கலையும், கதையும் தன்னாலேயே உருவாகி விட்டன.

பாலாஜி ராஜூவின் புனைவுலகம் இக்கதையிலும் உருவாகி வருகிறது. அதற்கு நீங்கள் கையாளும் பிரத்யேக சொற்களும், மொழியும்தான் காரணம். ஊரணைகையில் இருளைத் துளாவி ஊரைக் கடக்கும் டவுன் வண்டி; அரிசி வற்றல், நார்த்தங்காய் ஊறுகாய், பொரிவிளங்காய் உருண்டை, ஒரு விள்ளை கருப்பெட்டியோ, வெல்லமோ சேர்த்த தேங்காய் பத்தை; நெய்யும் வெல்லமும் சேர்த்த வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு; சிவன் கோயில் தேர்முட்டி; அதங்கிய ஈயக்குவளை; பங்களா வீட்டை வர்ணிக்க நீங்கள் பயன்படுத்திய சொற்கள் என்று உங்கள் சொற்களஞ்சியம் ஒரு புனைவுலகை அனாயசமாக உருவாக்கி விடுகிறது. தயவு செய்து இதை உபயோகிப்பதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இவைதான் ஒரு தனித்தன்மை கொண்ட புனைவுலகை உருவாக்குகின்றன. மேலும் என்னைக் கவர்ந்த ஒரு சில சொற்றொடர்களைக் குறிப்பிடுகிறேன். “ஓட்டுக்குள் குறுகும் நத்தை தை போல” “தர்க்கம் இயங்குமிடத்தில் எப்போதும் கள்ளத்தின் கை கை த்தடமும் இருக்கும்.” இது போல கதை முழுக்க பல அவதானங்கள். ஒரு வேளை வெண்முரசு பாதிப்போ என்ற ஐயம் எனக்கு வந்தது. இருப்பினும் அவை கதையுடன் இயைந்து நிற்கின்றன.

1. கதையில் மையப்பாத்திரத்தின் நிலையை நம்பகமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அதாவது வாசகனுக்கு அந்தப் பெண்மணியின் நிலை மீது empathy உருவாகுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இதைத்தான் 'it lacks conviction' என்று குறிப்பிட்டேன். 

நீங்கள் நம்பகமாகச் சொல்லியிருப்பதாகத்தான் பட்டது. கதையின் முடிவில் அவள் எழுந்து, “அஞ்சு மணியாயிருச்சு, செந்தில் வேலன் வந்திருப்பான்,” என்கிறாள். அவள் எங்கிருந்து எழுகிறாள் என்பது வாசகனாக என்னுடைய கேள்வி. ஊர் விட்டுப் போகும் வண்டியிலிருந்து எழுகிறாளா, அல்லது வீட்டுக்குள்ளேயே இன்னும் உறங்கியபடி ஊர்விட்டுப் போவதைப் போல கண்ட கனவிலிருந்து எழுகிறாளா? செந்தில் வேலனின் வருகையில் அவள் வாழ்க்கை தினமும் துவங்கியபடியிருந்தது. அவள் அந்த தினப்படி செயல்பாடுகள் முடியவே கூடாது என்று உள்ளூர விரும்புகிறாள். எப்படியோ இந்த உலகை ஏமாற்றி அவள் ஒரு லூப்-ல் தன் வாழ்க்கையை விழ வைத்து விட்டாள். இனி மீண்டும், மீண்டும் எழுந்தபடியே இருப்பாள். இந்த இரவை இப்படியே நீட்டித்துக் கொள்ள முடியாதா? அவளது ஏக்கத்துக்கு அவளது உள்மனமே ஒரு தீர்வைக் கண்டு விடுகிறது. அவளால் முற்றத்து செம்பருத்திச் செடிகளோடும், சுவரில் நகரும் மரப் பல்லியோடும், தண்ணீர் தொட்டியின் அதங்கிய ஈயக் குவளையோடும், எண்ணெய்ப் பிசுக்கு விரவிய விளக்கேற்றும் மாடக் குழியோடும் எப்போதும் போல வாஞ்சையுடன் இருக்க முடியும்.

ஒரு தாயாக, பொம்னாபாடியாரின் (என்ன அழகான பெயர்!) இரண்டாம்தாரமாக, குச்சாயியோடு எதுவும் பேசாமலும் அமர்ந்திருக்க வல்ல தோழியாகவும், வீட்டின் அத்தனை ஜடப்பொருட்களின் மீது அன்பு செலுத்துபவளாகவும் அவளோடு என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. கதையின் கடைசி வரி அந்த எம்பதியை மேலும் வலுவாக்குகிறது.

2. கதையின் முடிவு இயல்பாக இல்லையோ என்று தோன்றுகிறது. கவிதைகளைப் போல சிறு தருணங்களைப் பிடித்துக்கொண்டு கதையை முடிக்கிறேனோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

முடிவு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முடிவுக்கு முன் வரும் அன்னம்மாளின் தன்னுரையாடல் சற்றே விலகலைக் கொடுத்தது. அதன் மொழி செந்தமிழில் இருந்ததுதான் அதன் காரணம். அவள் தனக்குள் தன் மொழியிலே பேசிக்கொள்வது போல இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. 

ஆம். இக்கதையே கவிதை போன்ற ஒரு தருணம்தான். ஆனால் அப்படிப்பட்ட தருணங்களைக் கதையாக்குவது எளிதல்ல. அதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். கதையின் செவ்வியல் வடிவை இதில் போட்டுப் பார்க்க முயல்கிறேன். அன்னம்மாளுக்கு அந்த வீட்டின் ஆன்மாவோடு நெருங்கிய உறவு. ஆனால் அங்கேயே இருக்க இயலாமல் அவள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம், சிக்கல். அந்தச் சிக்கலைத் தீர்க்க அவளது எளிய மனம் ஒரு வழி கண்டுபிடிக்கிறது. அவள் மீண்டும் மீண்டும் உறக்கத்திலிருந்து எழுந்து கொண்டே இருக்கப் போகிறாள். 

இக்கதையில் காலம் ஒரு மிக முக்கியமான பாத்திரம். அவளுக்கு முன் தடையாக நிற்பது காலம்தான். காலத்தின் சுழலில் அவள் விழுந்து மீண்டும், மீண்டும் எழுகிறாள். எனவே பொம்னாபாடியாரின் வேஷ்டிக்குள் சுற்றி வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தின் ஒலி குறித்து நீங்கள் எழுதியிருந்தது பொருத்தமானது. மகேஸ்வரன் கடிகாரத்தின் முள்ளில் தொங்குகிறான்.

3. கதையின் நாடகத்தன்மை திணிக்கப்பட்டதைப் போல இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

இல்லை. அந்தக் குறிப்பிட்ட ஒரு பாராவை நீங்கள் மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4. கதையின் தலைப்பு இப்போதைக்கு வைத்திருக்கிறேன், வேறு தோன்றவில்லை.

பாதை என்ற தலைப்பு நன்றாகவே இருக்கிறது. தலைப்பு வைப்பதில் நான் ரொம்ப சுமார். ஆனால் வெளியேற்றம், அல்லது காலம் குறித்த சொற்கள் ஏதேனும் தலைப்பாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

மேலும்… கமாக்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. நிறைய இடங்கள் கமா வேண்டி நிற்கின்றன. சில எழுத்துப் பிழைகள். குறித்திருக்கிறேன்.

நான் கதையை டபுள்ஸ்பேஸ் விட்டுதான் எழுதுவேன். அப்படித்தான் கேட்கிறார்கள். வாசிக்கவும் எளிது.


வணக்கம் ஜெகதீஷ்,

கதையை வாசித்து சிரத்தையோடு கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். எழுத்துப் பிழைகளையும் சுட்டியதற்கு மேலும் நன்றிகள், எப்படியும் வந்துவிடுகிறது.

உங்கள் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன, அதற்கும் மேல் வந்த உணர்வு ‘அப்பாடா கதை மோசமில்லை போல’ என்ற ஆசுவாசம். நம் படைப்புகளின் மேல் நம்பிக்கை வைத்து வாசிக்கும் நண்பர்களின் பங்கை குறைத்துமதிப்பிடவே முடியாது. (ஜெ இதைத்தான் குறிப்பிடுகிறார், நீங்களும் வாசித்திருப்பீர்கள்).

நீங்கள் குறிப்பிட்ட அவதானங்கள் - கதையில் வெளிப்படும் ஆசிரியரின் குரல் மீது எனக்கு எப்போதுமே சந்தேகக் கண் உண்டு (உங்கள் கதைகளில் இவை அதிகம் இருப்பதில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன்). கதையின் போக்கிற்கு அவை என்றுமே சற்று இடஞ்சல்தான். குறிப்பாக தொடக்ககாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களின் குரல் வாசகனுக்குத் தெரியாத எதைச் சொல்லிவிடமுடியும் என்ற கேள்வி எனக்கு உண்டு. ஆனால் அவை நம் கருத்துக்கள் என்பதாலேயே நீக்குவதும் சிரமமாக இருக்கிறது. நிச்சயம் வெண்முரசின் பாதிப்பு என் கதைகளில் உள்ளது என்பதை வெளிவந்த பிறகு வாசிக்கையில் கவனித்திருக்கிறேன். ‘இருபது ரூபாய்’ கதையில் கூட அது உள்ளது. உங்கள் பார்வை மிகச் சரியானதுதான், நீங்கள்தான் இதை முதலில் என்னிடம் வெளிப்படையாகச் சொன்னவர்.

இந்தக் கதையில் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன், அதை ஒன்றாக மாற்றிவிடலாமா என்ற எண்ணமும் உண்டு. அதீத உவமைகள் கதையை மீறித் தெரிபவை. முதலில் இதே கதையில் ‘மௌனப் பெருவெளி’ போன்ற வார்த்தைகள் இருந்தன, நீக்கிவிட்டேன். கதையின் போக்கை மீறித் தெரிபவை என்று எண்ணினேன் (ஆதீதக் கவித்துவம்). நீங்கள் இயைந்துதான் இருக்கிறது என்று சொல்வதால் இப்போதைக்கு அங்கு நான் கத்தி வைக்கவில்லை.

கதையில் நீங்கள் குறிப்பிட்ட முடிவு - நான் எண்ணியது அவள் வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. பொருட்களோடு நினைவுகளையும் சுமந்துகொண்டுதான் செல்கிறாள் என்பதுதான். அது ஒன்றும் புதிய பார்வை அல்ல, ஆனால் அவள் அதை வெளிப்படுத்தும் தருணம் என்னளவில் புதியது, கதை உருவாக்கிய சூழலுக்குள் வருவது. நீங்கள் குறிப்பிட்ட லூப் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் அதுபோன்ற ஒரு பகுதியை எழுத இன்னும் எனக்கு தன்னம்பிக்கை இல்லை. கவிதைகளில் இதுபோன்ற தருணங்களை எழுதியிருக்கிறேன், அங்கு எப்போதுமே கட்டுப்பாடில்லாத சுதந்திரமும் உள்ளது. (கவிதைகளில் அதற்கே உரிய தத்துவம் உருவாக இடம் இருக்கிறது என்ற உங்கள் பார்வை அழகானது).

நீங்கள் குறிப்பிட்ட அன்னம்மாளின் தன்னுரையாடல் மீது எனக்கும் ஐயம் இருந்தது. அதை மாற்றி எழுத முயல்கிறேன். இதைத்தான் கதையின் அதீத நாடகத்தன்மை என்று சொல்லியிருந்தேன்.

கதையின் ஊசல் கடிகாரம் காலத்தின் பிம்பம்தான். அது ஒன்றும் தனித்துவமான படிமம் அல்ல என்பதையும் புரிந்துகொள்கிறேன். கதைக்குள் அதற்கு இடம் இருந்ததால் பயன்படுத்த முயன்றேன். 

தலைப்பு வைப்பதில் நீங்கள் சுமார் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் கதைகளின் தலைப்புகள் மீது எனக்கு எப்போதுமே வியப்பு உண்டு. ஆனால் ஒற்றை வார்த்தைகளில் நான் வைக்கும் தலைப்புகள் கொஞ்சம் உழைப்புக் குறைவையும் சொல்பவை, நீங்கள் சொன்னவற்றின் அடிப்படையில் யோசித்துப் பார்க்கிறேன். இன்னொன்று இப்படி ஒரு இயல்புவாதக் கதைக்கு அதீதக் கவித்துவத் தலைப்புகள் துருத்தித் தெரிபவை என்பதால் சற்று கவனமாகவும் இருக்கிறேன். ‘இருபது ரூபாய்’ என்ற எளிய தலைப்பை அறிந்தே வைத்தேன். ‘அதிகம் ஜல்லி அடிக்காதே’ என்று அடக்கிவாசிக்கச் சொல்லும் உள்குரல்தான் காரணம், வேறொன்றுமில்லை.

கமாக்களை நான் அவசியம் திருத்துகிறேன் ஜெகதீஷ், அவை வைக்கலாமா இல்லையா என்ற குழப்பத்தின் விளைவுகள். நிர்மலிடம் பேசும்போது உங்கள் கதைகள் பிழைகள் இல்லாமல் இருப்பதை எடுத்துக்காட்டாக ஒவ்வொருமுறையும் குறிப்பிட்டிருக்கிறேன். இன்னொன்றையும் சொல்கிறேன், ஆச்சர்யக் குறியை நீங்கள் எங்கு பயன்படுத்துகிறீர்கள் என்று பார்ப்பதற்காக ‘ஸ்பைடர்’ கதையை மீண்டும் நேற்று முந்தைய தினம் வாசித்துப்பார்த்தேன். எப்படி வாக்கியங்களை நீங்கள் பிரிக்கிறீர்கள் அமைக்கிறீர்கள் என்றும் புரிந்துகொள்ள, I am not kidding.

டபுள்ஸ்பேஸ் ஏன்று நீங்கள் குறிப்பிடுவது பத்திகளுக்கு இடையில்தானே, வேறொன்றா?

மீண்டும் மனம் நிறைந்த நன்றிகள். இதுவரை நீங்கள் என் படைப்புகள் குறித்துச் சொன்ன பார்வைகளை நான் சிதறவிட்டதில்லை, அவை என்னுடன் எப்போதும் இருப்பவை, அவற்றின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்திருக்கிறேன்.

கடைசியாக இந்த கதை எழுதும் செயலை ஒரு உருவகமாக எண்ணிப் பார்த்தேன். புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொள்பவன் எப்படி அதன் ஒவ்வொரு அடிப்படைகளையும் எண்ணி எண்ணிச் செய்வானோ அப்படித்தான் என்னுடைய கதைகளும் எழுத்தும். நீங்கள் ஒற்றைக் கையால் அநாயாசமாக வாகனத்தைச் செலுத்துபவர் என்று தோன்றியது. இதில் என்னோடு நிர்மல், விவேக், மதன் எல்லோரும் உண்டு. சங்கர் முதல் கதையில் அதீத முதிர்வோடு இருந்தார் என்று தோன்றியது, அவர் தடுமாறிய இடங்களும் இருந்தன. என்றாவது இயல்பாக நானும் கார் ஓட்டுவேன் என்று நம்புகிறேன்.


அன்புள்ள பாலாஜி,

மீண்டும் சொல்கிறேன், “கதை அவ்வளவு மோசமில்லை” கதை அல்ல; மிகச் சிறந்த கதை. இதை உங்களால் மட்டுமே எழுதியிருக்க முடியும். உங்கள் அனுபவங்களின் துணையால். கதையில் உங்கள் “அவதானங்களாக” வருவனவற்றை நான் இப்படிப் பார்க்கிறேன். அவை அன்னம்மாளின் எண்ணங்கள், ஆனால் தூய மொழியில் சொல்லப்படுகின்றன. எனவேதான் அவை கதையோடு இயைந்திருக்கின்றன. கதையின் கவித்துவத்துக்கு அவை வலு சேர்க்கின்றன. கதையின் கவித்துவம் என்று அன்னம்மாளின் கனவும், அவள் அஃறிணைகளோடு உரையாடுவதையும் குறிப்பிடுகிறேன். அந்தக் கடிகாரம் அழகான குறியீடாக வந்திருக்கிறது. செயற்கையாக இல்லை. 

(“மேற்கின் சிவந்த வானுடன் சூரியனும் தாழத் தொடங்கியிருந்தது.” என்ற வரி குறித்து யோசிக்கவும். கொஞ்சம் சாண்டியல் சாயல். மாற்றி எழுத முயலலாம்.)

கதை தலைப்பு வைப்பதில் உண்மையில் நான் சுமார்தான். அனு இருப்பதால் தப்பிக்கிறேன். பாதை நல்ல கதைதான். என்ன பிரச்னை என்றால் யாரோ இதே தலைப்பில் ஏற்கனவே எழுதி இருப்பார்கள். அதற்காக நீங்கள் வேறு தலைப்பு யோசிக்கலாம். அல்லது இதுவே நன்று.

கதையில் அந்த லூப் வந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அன்னம்மாள் முன்பே கனவு காண்கிறாள். இப்போதும் உறக்கத்திலிருந்து எழுகிறாள். அதனால் அந்தச் சிறு மாயம் அங்கு உங்களையறியாது நிகழ்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.கதைகளில் அப்படி நாமே அறிந்து அமைத்தல் கடினம் (மாய யதார்த்தக் கதைகளில் சாத்தியம்.)  மற்றபடி முடிவு நீங்கள் குறிப்பிட்டபடியே அமைந்திருக்கிறது.

தமிழ் உரைநடைக்குக் கமாக் குழப்பம் எப்போதுமே உண்டு (ஆங்கிலம் கமாக்களில் திளைக்கிறது.) குறைந்த பட்சம் லிஸ்ட் போடும் போது ஒவ்வொரு பொருளுக்கும் அடுத்து கமா போடலாம். டபுள்ஸ்பேஸ் நான் ஒவ்வொரு வரிக்கும் விடுவதைச் சொன்னேன். மேலும் பத்திக்கும்.

நீங்கள் என்னை ரொம்ப பாராட்டுகிறீர்கள், பாலாஜி. நன்றி. ஆனால் என் தமிழ் உரைநடையின் வலிமையை கதை எழுதுதலின் வலிமையாக எண்ணி மயங்கலாகாது. கதை அமைப்பையும், சொல்முறையையும் இன்னும் கற்றுகொண்டேதான் இருக்கிறேன். இரண்டாவது கியரில் இருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மீண்டும் உங்கள் மொழி பற்றிக் குறிப்பிடத் தோன்றியது. இரண்டு மொழிகள் இக்கதையில். ஒன்று யதார்த்த நடை. அது உங்களுக்கே உரித்தானது. இன்னொன்று வெண்முரசின் நடை. அதுவும் நன்றே. அது எல்லை மீறும்போது உங்களுக்கே தெரிந்து விடும். “திகழ்கிறது, ஆம், அவ்வாறே ஆகுக, என்றெல்லாம் கிரிஞ்சாக எழுதாதவரை” உங்களது அந்த மொழியையும் நான் ரசிப்பேன். (நான் எழுதும் போது வெண்முரசின் தாக்கம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் நான் வாசித்து நாளாயிற்று).


ஜெகதீஷ்,

உங்களுடைய குறிப்பை ஒரு புன்னகையோடுதான் வாசித்தேன். ‘மேற்கின் வானம்’ எழுதுகையில் எவ்வளவு க்ளிஷே என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது, அதை நீங்கள் குறிப்பிட்டது அதை அவசியம் மாற்றவேண்டிய அவசியத்தைச் சொல்கிறது, மாற்றுகிறேன்.

உங்கள் வார்த்தைகள் மீண்டும் நம்பிக்கை அளிக்கின்றன. அது இந்தக் கதைக்கு அல்ல, இனி வரப்போகும் கதைகளுக்கானவை. ஒருவகையில் இந்தக் கதையிலிருந்து உணர்வுரீதியாக நான் நீங்கிவிட்டேன். இதுவரை நான் எழுதிய கதைகளை இத்தனை முறை வாசித்ததில்லை, திருத்தியதில்லை. 

இங்கும் ஜெ வை எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன். அவர் ஆசிரியர் குரலை எப்போதுமே தூய தமிழில் அமைக்கிறார் என்பது என் (பிழை?) புரிதல். உங்கள் ‘ஸ்பைடரை’ மீண்டும் வாசிக்கும் முன் ஜெயின் சில கதைகளையும் வாசித்தேன், ஆனால் குழப்பமே எஞ்சியது. மீண்டும் இந்த அம்சத்தை நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் இந்த நடை அம்சத்தை பாராட்டாகவே சொல்லியிருக்கிறீர்கள் (But I have something to think about). இதை அவரிடம் ஒரு கேள்வியாக வைக்க இயலுமா?.

‘பாதை’ குறித்து நீங்கள் குறிப்பிட்ட அதே எண்ணங்கள் எனக்கும் இருந்தன. 

நான் உங்களைப் பாராடுகிறேனா? இருக்கலாம், உங்கள் கதைகளை அத்தனை கூர்மையாக நான் வாசிக்கிறேன் என்று தோன்றுகிறது. அதன் விளைவு இது. ‘பொற்குகை இரகசியம்’ கதை இன்னும் என்னளவில் ஒரு cult தான், ஏன் என்று தெரியவில்லை.

உனகள் வீட்டுக்கு வரும் ‘இராட்சசன்’ நம்மை இப்படி ஆட்கொண்டிருக்கிறார், வேறென்ன சொல்வது!. உங்கள் கதைகளில் ‘கல்லளை’ யில் (நினைவு சரிதானே!) அவருடைய தாக்கம் இருந்தது என்று தோன்றுகிறது. அதற்கு அடுத்த கதைகளில் நீங்கள் வெகுவாக நகர்ந்துவிட்டீர்கள். 

நாற்பதுகளின் சரிபாதிக்கு வந்துகொண்டிருக்கிறேன் ஜெகதீஷ். இனியும் புகழோ வசையோ அதை நேராகச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு என்னில் உள்ளது. உங்கள் கதைகள் குறித்து நான் வைக்கும் பார்வைகளை நீங்கள் அப்படியே கொள்ளவும். அடுத்த கதை எனக்கு உவப்பில்லை என்றால் அதையும் வெளிப்படையாகவே குறிப்பிடுவேன், இழக்க என்ன இருக்கிறது!. 

மீண்டும் சொல்கிறேன், நம்மை உந்தித் தள்ளுபவர்கள் நம்முடன் இருப்பதலேயே அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது. You inspire me in a lot of ways, I will leave it at that.

சரி, without being corny, I wrote a poem about ourselves, which I will share. Just take it, don’t respond back. Looking forward for your story in Dinamani.

என் கவிதைகள் - உயரம் - இந்தக் கவிதையில் கூட சொற்பிரயோகங்களை மாற்றும் தேவை இருக்கிறது. எழுதும்போது இது தன்னெழுச்சியாக வந்த கவிதை, ஆனால் வாசித்த பிறகு உங்களையும் என்னையும் எண்ணிக்கொண்டேன்.


நன்றி பாலாஜி.

பட்டம் விடுவதற்குத் துணையாக ஒரு நட்பு இருக்கையில் அந்த விளையாட்டு தரும் மகிழ்வே அதன் ஊதியம். உங்கள் கவிதை அழகாக இருந்தது. அதில் பட்டம் விடுபவனாக இடம் பெற்றது எனக்குப் பெருமை. இதே போல முடியும் ஒரு கவிதையை நான் என் பதின்ம வயதில் எழுதினேன். அது தொலைந்து விட்டது. “வாழ்நாள் முழுக்க அன்னாந்திராதவன் எப்படித்தான் படைப்பான் வானத்தை!” என்று கடைசி வரிகள் மட்டும் நினைவிலிருக்கின்றன.

என் தனிப்பட்ட கருத்து “ஆசிரியர் குரல்” இல்லாமலே எழுத முயற்சிக்க வேண்டும் என்பதுதான். பாயிண்ட் ஆஃப் வியூ கதாபாத்திரம்தான் நாம் அடுத்த வரி என்ன எழுதப்போகிறோம் என்று தீர்மானிக்கிறது. “மருதாணிச் செடி வெள்ளந்தியாக நுழைவது” அன்னம்மாளின் பார்வைக் கோணம்தான். பாலாஜியுடையது அல்ல. எனவே “ஆசிரியர் குரல்” என்பதை தவிர்ப்பதற்கே பெரும்பாலும் முயலவேண்டும். மீறி எழும்போது அதை பாத்திரத்தின் பார்வைக்கோணத்துக்கேற்ற மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாலசந்தர் ஒரு டிராகுலா மாதிரி என்று நடிகர் விவேக் ஒருமுறை சொன்னார். அவர் கடித்தவர்கள் அவர் மாதிரியே ஆகிவிடுவார்கள் என்று. என் வீட்டுக்கு வரும் ராட்சசன் என்னைக் கடித்து, நானும் அவர் மாதிரி ஆகி விட முடியுமா என்ற பேராசை மனதில் ரகசியமாக இருக்கிறது.

நீங்கள் தாரளமாகப் பாராட்டலாம், பாலாஜி. எனக்கும் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. திட்டும்போது எதையாவது இண்டெலெக்சுவலாகச் சொல்லி சமாளித்து விட்டால் ஆயிற்று.😃

என் கதை தீபாவளி மலர் அச்சுப்பதிப்பில்தான் வந்திருக்கும் போல. வீட்டில் வாங்கச் சொல்லியிருக்கிறேன். இணையத்தில் வெளிவரவில்லை எனில் தனியாகப் பகிர்கிறேன்.

தமிழ் உரைநடையில் நிறுத்தற்குறிகள் எங்கனம் பயன்படுத்த வேண்டும் என்று அசோகமித்திரனிடம் கற்றுக் கொள்ளலாம். அவர் கிட்டத்தட்ட ஆங்கிலத்தின் வழியைப் பின்பற்றுகிறார். ஜெ பெரும்பாலும் கமாவைத் தவிர்த்து விடுகிறார். 

நீங்கள் பலர் எழுதும் கதை குறித்து அவர்களிடம் விவாதிக்கிறீர்கள். எனக்கு அப்படிச் செய்ய பயம். எனக்கு இந்த நவம்பர் வந்தால் ஐம்பது துவங்குகிறது. இருப்பினும் தயக்கம் இருக்கிறது. உங்கள் ஒருவரிடம் முட்டி மோதினால் போதும் என்றிருக்கிறது. என்னுடைய இன்னொரு பலவீனம் தமிழில் எழுதப்படும் கதைகளை நான் போதிய கவனம் கொடுத்து வாசிப்பதில்லை. உங்கள் கதையையே மூன்று முறை வாசித்தபின்தான் என் கருத்துக்களைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது.



7 டிசம்பர், 2025

வானப்ரஸ்தம் குறித்து பிரசாத் வெங்கட்


 

வானப்ரஸ்தம்

வானப்பிரஸ்தம் explores the contrast between a spiritually-inclined mother and her anxious daughter caught in a rat race. While the premise has potential, the main reason this story didn't work for me is the mother who's painted as nearly saintly after a late-life (brief?) exposure to Upanishads, which strains credibility. She delivers spiritual wisdom directly, making scenes feel like lectures rather than organic conversations. A couple of examples:

> அம்மா சிரித்தாள். “கூச்சமா? எனக்கா? அச்சம், தயக்கம் இவைகளிலிருந்து நான் எப்போதோ விடுதலை அடைந்து விட்டேன்,” என்றாள் ஆங்கிலத்தில்.

> “கீதை என்பது ஒரு வேதாந்த நூல். மனித வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் தன்னை அறிதலே என்று வேதாந்தம் சொல்கிறது. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை. தன்னை அறிந்தவனுக்கு கவலைகள் ஏதுமில்லை. அதற்கான பாதையைத்தான் கீதை காட்டுகிறது. செய்யும் செயல்களை பற்றற்றுச் செய்தல் கர்மயோகம் எனப்படுகிறது. கர்மயோகம் செய்தவனுக்கு மனத்தூய்மை வாய்க்கிறது. மனத்தூய்மை அடைந்தவன் தன்னை அறியும் தகுதி பெறுகிறான். தன்னை அறிந்தவனுக்கு அதற்கப்புறம் செய்வதற்கு வேறேதும் இல்லை. ஆனந்தமாக மீதமிருக்கும் வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான், உங்களைப்போல,” என்றாள்.

Nirmal wrote:

> முழுமை கூடியவர்கள் பிழை அற்ற வாழ்வை நெருங்கியவர்கள், அதில் கான்பிளிக்ட் உருவாக்க இயலாது. ஒரு காட்சியில் வருகையில் கையாள்வது எளிது, கதையெங்கும் நெடுக வருகையில் அதை கையாள்வது கடினம். ஜெகதீஷ் அதை பரிட்சித்து பார்த்துள்ளார்.

The mother is so even-keeled that an unmarried daughter or a bear encounter in the woods will not tip her off balance. So where's the dramatic tension? If the drama is about the daughter's transformation -  that Samyukta is not in the presence of her old mother, but this newly sainted woman - then I'd have liked to spend more time in the gradual evolution of how Samyukta changes. There are hints, but that doesn't seem like the locus of the narration.

Vivek wrote:

> The contrast between Samyukta's rational, career-driven, immigration-anxious mindset and Amma's slow, interior turning toward Vedanta is drawn with great subtlety. 

Subtlety is what I didn't notice in this story. With only so many words, the author is forced to convey ideas - grand or small - within a page count. But this story reads more like an illustrated parable than a fully realized short story. Jegadeesh clearly cares about Vedanta, but I'd have appreciated more showing and less telling, more dramatic tension and less convenience, more discovery and less preaching, all of which Jegadeesh has done in his past stories. (In his most recent story, he portrayed a fractured person's complicated decision with beautiful nuance - a struggling alcoholic and a loving father, deciding to move away from his son for the sake of his son, was heartbreaking). My emotions were unfortunately unmoved throughout the reading of வானப்பிரஸ்தம்.

I think the story contains the seeds of a resonant experience, which Jegadeesh has expertly handled many times in the past to grow something wonderful. This time, with this story, they remain just seeds.

வானப்ரஸ்தம் குறித்து விவேக்

 



வானப்ரஸ்தம்

வானப்ரஸ்தம் குறித்து விவேக்

America appears as a far vaster and more open land than India, and the story beautifully captures the peculiar emptiness of that space-an emptiness that creates both a kind of fatigue and, at the same time, a heightened spiritual awareness. Through Samyukta and her mother's long drive across America, we travel with them i95,  past mountains, forests, and small towns, the descriptions of landscape and nature are vivid and unforced, and they give the narrative a quiet, contemplative rhythm. 

One of the most striking strengths of the story is the way it handles the relationship between Samyukta and Amma. MTheir conversations move effortlessly between irritation, affection, worry, and quiet admiration, and this emotional oscillation feels very truthful to a modern, diasporic mother-daughter bond. The contrast between Samyukta's rational, career-driven, immigration-anxious mindset and Amma's slow, interior turning toward Vedanta is drawn with great subtlety. The bear encounter and their detour into the mountains work almost like an externalization of Samyukta's inner journey

Against this backdrop, the spiritual awakening that Samyukta experiences toward the end of the story feels especially meaningful. Still, one wonders whether this moment of opening might benefit from being rendered a little more explicitly.?

Only one small reservation (perhaps significant ) is that some of Amma’s spiritual explanations occasionally tilt toward the tone of a formal satsang. This is true to her character and background, but in a few places it feels slightly more like listening to a discourse than following the inner movement of the narrative. Even so, these passages enrich the larger themes of seeking freedom, meaning, and clarity in a foreign land, and they effectively frame Samyukta’s final transformation. The philosophical reflections and Vedantic ideas run like a quiet undercurrent through the story, for the most part they remain integrated, though toward the end they risk rising a bit above the narrative itself.

கதையில் இயற்கை வர்ணனைகள் அனைத்துமே ஆன்மீகமானது. கலை மூலம் அந்த நிலையை நம்மால் அடையமுடியும். ஜெ தத்துவ வகுப்பில் சொல்லும் அந்த symphony of values போன்றது. வேதாந்தத்தை ஒருவர் அறியும் முறையும் அதுவே. கலையின் மூலம் அந்த இயற்கை யாசகம் கூட வேதாந்தத்தை நோக்கி செல்லும் பயணமே. அதுவும் நாமாக உணரும் அனைத்தும் not end goal, its part of our journey. என்னுடைய கவிஞர் மேரி ஆலிவர் எழுதிய wild goose என்ற கவிதையில் இப்படி ஒருவரி வரும்

Whoever you are, no matter how lonely,

the world offers itself to your imagination…

announcing your place

in the family of things.

இதோட சாரம்சம் கூட You belong to the universe என்பது. ஆம் Nature spiritualizes us not by altering the world, but by transforming the quality of our attention. Attention is all we need and we need more descript part that awaken this kind of attentive seeing.

நான்கு ஆசிரமங்கள் - பிரதீப்


 
வானப்ரஸ்தம்

வானப்ரஸ்தம் குறித்து

 மிக அருமையான வாசிப்பு அனுபவம் தந்த கதை வான பிரஸ்தம் 

சென்ற பூன் முகாமில் காலை காபியின் போது ஜெ.,  கேரளாவிற்கு வலசை வரும் பறவைகளை பார்க்க தொலைதூர நிலங்களில் இருந்து எல்லாம் வெளிநாட்டினரை பற்றி சொன்னார்.. நான் அவ்வாறு அவ்வளவு தொலைவு வந்து பார்த்த பின் அவர்கள் அடையும் மாற்றம் என்பது என்னவாக இருக்கும் .. அந்த சுவிட்ச் என்ன செய்யும் என்று கேட்டேன்.. அவர் அது தெரியாது.. அவர்கள் மீண்டு வந்து சொன்னால் உண்டு, ஆனால் எவரும் வர மாட்டார்கள் அடைந்ததில் இருந்து மேலே சென்று விடுவார்கள். புனைவாக வேண்டுமானால் எழுதி பார்க்கலாம் அல்லது நாம் அவ்வாறு ஒன்றை செய்து பார்த்து முயலலாம் என்றார்.. வெகுகாலம் என்னை தொந்தரவுக்கு உள்ளாக்கிய ஒரு பதிலாக இருந்தது. 

இந்த கதையில் , அவர் மற்ற வாழ்வின் பருவங்களை " முழுமையாக" செய்யவில்லை என்றே எடுத்துக்கொண்டேன் . ஆனால் அவருக்கு வான பிரஸ்தம் அமைகிறது. அந்த "சுவிட்ச்" நிகழ்கிறது. எப்படி? ஏன்? ஆனால் கதையில் மகளின் கிரகஸ்த்த பருவம் பற்றி பேச்சில், அம்மா இதற்கு முன் மகளின் திருமணத்தை வலியுறுத்தி வந்தவர் உன்னுடைய அதை பற்றி எனக்கு என்ன ? என்கிறார்.

அவரின் younger self ஆன அவர் மகள், பிறரை பார்த்து பயப்படுகிறார்.. ஆனால், அம்மாவோ நடுக்காட்டில் தன்தனியாகக இருக்கும் ஆணை அணுகவோ , அவருக்கு அறிவுரை அளிக்கவோ எந்த தயக்கமும் இல்லை. இது பின்னர் மகளிடம் transformation யை ஏற்படுத்துகிறது. ஒருவேளை அவர் வாழ்வின் இரண்டாவது பருவத்தை ( கிரகஸ்த்த) முழுமையாக செய்ய முடியலாம்.

இன்னும் ஒரு நுணுக்கமான குறிப்பு கதையில் அந்த அம்மா மாற்றம் அடைந்து இருந்தாலும் அவரின் வயது மற்றும் உடலின் எல்லைகள் அப்படியே தான் இருக்கின்றன. மூச்சு வாங்குகிறது.. சர்க்கரை அளவு குறைகிறது..இது அந்த மாற்றத்தை புனிதமான ஒன்றாக பார்ப்பதில் இருந்து விடுவிக்கிறது . இறைச்சியை ஒதுக்கி வைத்து விட்டு அவர் சாப்பிடும் படிமம் அருமையாக இருக்கிறது.

மிகவும் சுவாரசியமான ஒன்று அந்த ஆணின் கதாபாத்திரம். அந்த மலைகளைப் போல அவன அங்கு ஸ்திதப்பிரக்ஞன் ஆக இருக்கிறான்..  அவனால் அந்த அம்மாவை ஒரு செயின்ட் என்று புரிந்து கொள்ள முடிகிறது. இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கடந்தகால வாழ்க்கை உடையவர்கள் எனும்போது , எது மேலதிகமாக அந்த அம்மாவை விடுதலை செய்தது என்பது கேள்விகளை எழுப்புகிறது. அல்லது அவன் நேரடியாக உலகியலை தேர்ந்து சன்னியாச பருவம் அடைந்தவனாக கொள்ள முடியுமா?

உங்களின் ஆக சிறந்த கதைகளில் ஒன்றாக இதை தயக்கமில்லாமல் சொல்வேன். 

வாழ்த்துக்கள் ஜெகதீஷ்.


வானப்ரஸ்தம் குறித்து நிர்மல்

 

வானப்ரஸ்தம்

வனப்பிரஸ்தம் கதை முதுமையை ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்றிக்கொள்ளும் தனிமனித தேர்வை கதை ஆராய்கிறது. அம்மா முதியோர் இல்லத்தில் நடந்துக் கொள்ளும் விதம் சந்தான லட்சுமியிடன் உருவாக்கும் குழப்பம் அழகாக காட்சிப்படுத்தப்படுள்ளது. கதையின் இயற்கை வர்ணணைகள் குறிப்பாக I-95ல் இருந்து இறங்கி மலைக்கிராமத்துக்குள் செல்கையில் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. அங்கு சம்யுக்தாக்கும், சந்தான லட்சுமி இருவரின் உணர்வுகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அம்மா தலைதிருப்பி அவளைப் பார்த்து களைப்பாகப் புன்னகைத்தாள். "அப்படியே கொஞ்ச நேரம் நிப்போம். அது என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்" போன்ற வரிகள் சந்தானலட்சுமியின் மனநிலையை திறம்பட காட்டுகின்றன. நேரடியாக கீதை கோட் செய்யப்படுகின்றது. சந்தான லட்சுமியும் கீதையில் முழுக்க பயிற்சி உடையவர். அவருடைய இயல்புக்கு அது பொருந்தி வருகின்றது. கிரிகோரியும் அதை தனக்கு புரியவில்லை என்றுதான் சொல்கின்றார். அதுவும் கதைக்கு பொருத்தமாகவே உள்ளது. கதையில் தாய் மகள் முரண்பாடுகள் டொமெஸ்டிக் விஷயமாக இன்னமும் பரவி வந்திருக்கலாமோ என தோன்றுகின்றது. அதில் முழுக்க தோய்ந்த வேதாந்தியாக “விடுதலை அடைந்து விட்டேன்” என சொல்லுமிடத்தில் சந்தான லட்சுமி இருப்பதால் அந்த பாத்திரம் ஐயம் , திரிபற்ற முழு ஞானியாகவே ஆகி விடுகின்றது. சந்தான லட்சுமி ஞானியாக முழுமையாக்கப்படுவதால், அவள் மனித பாத்திரமாக இல்லாமல் தத்துவக் கருவியாக மாறுகிறாள். இதனால் கதை, கதையாக இல்லாமல், ஆன்மீகக் கட்டுரையின் கதை வடிவமாக மாறுகிறது

வனப்பிரஸ்தம் கதை முழுமையை எய்தி விட்ட ஓருவருக்கும், அவரை குடும்ப உறவில் வைத்துப் பார்க்கும் இளவலுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் வழியே நகர்கின்றது. பழமை, பைத்தியக்காரத்தனம் என பார்வையுடன் வனப்பிரஸ்தம் சென்ற ஓருவரை “குணப்படுத்த” முயலும் இளைவல் முடிவில்  தெரிந்துக் கொள்வதென்ன என கதை ஆராய்கின்றது.

கதையை படித்ததும் காரை எடுத்துக் கொண்டு கதை சொல்லும் ஐ-95 சாலையில் செல்ல வேண்டுமென ஆசை வந்தது. அந்த அளவுக்கு இயற்கை காட்சிகள், கதை மாந்தர் உள ஓட்டத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கதையில் முழுமைக் கூடிய ஓருவர் உள்ளதால் சில நேரம் சத்சங்க வகுப்புகளை நினைவூட்டுகின்றது என்பது என் வாசிப்பு.   பொதுவாக சிறுகதை வடிவத்தில் முழுமை கூடிய ஓருவர் கதையெங்கும் வருகையில் அதை கையாள்வது பெரிய சிரமம். முழுமை கூடியவர்கள் பிழை அற்ற வாழ்வை நெருங்கியவர்கள், அதில் கான்பிளிக்ட் உருவாக்க இயலாது. ஒரு காட்சியில் வருகையில் கையாள்வது எளிது, கதையெங்கும் நெடுக வருகையில் அதை கையாள்வது கடினம். ஜெகதீஷ் அதை பரிட்சித்து பார்த்துள்ளார்.


மேலும் வாசிக்க