4 மே, 2025

நீலத்தழல்- கருத்துக்கள்

 



ஏப்ரல் 2025 முழுவதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கக் கிளையில் என் சிறுகதைகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்தது. நண்பர்கள் என் பல்வேறு சிறுகதைகள் குறித்த பார்வையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அவர்களது விமர்சனத்தையும் முன்வைத்தனர். அவர்களுக்கு என் நன்றி.

மேற்காணும் ஓவியம் என் நண்பரும், ஓவியருமான அருண்குமார் அருணாசலம் நீலத்தழல் கதைக்கென்றே பிரத்யேகமாக வரைந்தது. அருண் எழுத்தாளர் இரா. முருகனின் மிளகு நாவல் சொல்வனம் இதழில் தொடராக வெளிவந்தபோது அதன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் அற்புதமான ஓவியங்களைத் தீட்டிப் புகழ்பெற்றவர். சில அமெரிக்க நாவல்களின் அட்டைப்படங்களையும் வடிவமைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசிக்கிறார்.


நீலத்தழல் சிறுகதை குறித்து நண்பர்களின் கருத்துக்கள்

நீலத்தழல் சிறுகதை

Prasad Venkat

Is there a burned out middle-class immigrant caught in the rat race who doesn't romanticize a lush past? Prasad, (no relation to me) a high school math teacher in Maldives (probably some relation to a member of this group) fumes to his wife about how many balls he has to juggle to pay his monthly mortgage:

> எத்தனை விஷயங்களை விட்டு விட்டு இங்கு வரவேண்டி இருந்திருக்கிறது? நண்பர்கள், உறவுகள், உணவு, சினிமா, கிரிக்கெட், அரசியல், தீபாவளி, பொங்கல், காளியம்மன் கோயில் மாசித் திருவிழா. எல்லாம் காசு சேர்க்கவும், கடனடைக்கவும் தானே. இங்கு வரும் முன் அங்கு சொற்ப ஊதியத்தில்தானே வேலை பார்த்தோம்? செத்தா போய்விட்டோம்?

Prasad's colleague Varun encourages him to take a break and go fishing in the middle of the night. While the story hints at bioluminescence early on, making the eventual reveal unsurprising, I was pleasantly surprised at the power of the imagery Jegadeesh paints:

> திடீரென்று தங்கத் துகள்கள் போல ஒளிப்பைகள் வெடித்துச் சிதறுவதைப் பார்த்தான். ஏதோ அவனுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கிக் கொண்ட கனவுலகில் நுழைந்ததைப் போலிருந்தது.

> அவனுக்கு எதிரில் ஒரு நாலைந்து டால்ஃபின்கள் மின்னும் நீலஒளியை உடலெங்கும் பூசிக்கொண்டு நீந்திப்போயின. நீலத்திரையைக் கிழித்து நீருக்குள் பாய்ந்து, பின் வெளிவந்து கடற்பரப்பின் மேலாகப் பாய்ந்தன. கனவு இன்னும் அற்றுவிடவில்லை.

The man who starts his fishing trip worried about bioneeds (நடுக்கடலில் வயிறு கலக்கினால் என்ன செய்வது என்று பிரசாத்துக்குக் கவலையாக இருந்தது) comes back with a new appreciation and gratitude for what this world has to offer now. Jegadeesh (who dedicates his collection of stories to a Swami) asks us to tamp down future worries and past regrets and instead cultivate gratitude and appreciate the simple joys of life.

Nicely done!

பிரசாத் வெங்கட்


Nirmal

Porkugai ragasiyam வாழ்க்கையின் யதார்த்தங்களுக்கு மத்தியில் கனவுகளை காப்பது என்பது வேறு உலகத்திற்கு தப்பிப்பது அல்ல, மாறாக இந்த உலகில் வாழ்வதற்கான வலிமையைக் கண்டெடுக்க என சொல்லும் கதை. பாலு என்னும் பாத்திரம் வழியே  சித்தப்பா, பாட்டி, காயத்ரி, மீனா அக்கா என பல பாத்திரங்களை கதை காட்டுகின்றது. ஜெகதீஷ் புத்தகத்தின் தலைப்பாக சொன்ன கதை.

ஜெகதீஷின் நீலத்தழல், ஊனுடல் இரண்டிலும் ஒரு ஸ்பெஷல் என்னவெனில் அது மாலத்தீவின் கலாச்சாரம், மக்கள் மனதை பிரதிபலிக்க கூடியது. தமிழில் மாலத்தீவு வாழ்வினை பதிவு செய்த கதை ஆசிரியர் ஜெகதீஷ் மட்டுமே என்று நினைக்கின்றேன்.

Nirmal


ஊனுடல் - கருத்துக்கள்

 



ஏப்ரல் 2025 முழுவதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கக் கிளையில் என் சிறுகதைகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்தது. நண்பர்கள் என் பல்வேறு சிறுகதைகள் குறித்த பார்வையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அவர்களது விமர்சனத்தையும் முன்வைத்தனர். அவர்களுக்கு என் நன்றி.


ஊனுடல்  சிறுகதை குறித்து நண்பர்களின் கருத்துக்கள்

ஊனுடல்  சிறுகதை

 வெங்கட பிரசாத் - கனடா

உடல் அழிந்து போகக்கூடிய ஒன்று. ஆனால்,  எந்த ஒரு உணர்வினையும் உணர, உன்னத நிலையை அடைய உடல்  மிக தேவையான ஒன்று.  நம் வீட்டுக்கு செல்ல உதவி செய்யும் ஒரு வாகனம். அத்தகைய உடல் உணவில் இருந்து தோன்றி, உணவாக மாறும் விந்தை உடையது.  

இக்கதையில் மூன்று ஆண் - பெண் உறவு காண்பிக்கப்படுகிறது. மூன்று ஜோடிகளின் வழியே உடலைக் குறித்த பார்வை முன்வைக்கப்படுகிறது.

1. அடிமைக்கால பிரதிநிதிகளாக-   சங்குவின் தாய்-தந்தை - முன் தலைமுறை சேர்ந்த, அடித்து வாட்டும் ஆண் மிருகத்தை அமைதியாக பொறுத்துப் போகும் பெண். மனைவி என்பவள் மனம் கொண்ட மனித இனம் அல்ல, அது ஒரு உடல் - உபயோகிக்க, உடைக்க ,கசக்க ,கிழித்து தூர எறியும் ஒரு பொருள் என எண்ணும் ஆண். தன்னை எரிப்பது தீ என்றாலும், அக்கம் பக்கம் இருள்  அண்டாது காத்திடும் என எண்ணம் மேலோங்கிய உறவு. 

2. நவீன காலத்தில் பிரதிநிதிகளாக -  உடன்படும் உறவுக்காலம் வரை அல்லது தேவையெனில் ஒரு இரவுக்கு என்ற எல்லையில், இது உடல் என்ற அளவில் தெளிவான அறிவுடன் அணுகும் சிவப்பு கழுகும், க்ளோரியாவும், வல்லூறு கிழித்து உண்ணவே செய்யும் - மேஜை மீதிருக்கும் உணவோ, மெத்தை மீதிருக்கும் பெண்ணோ - அது இரை என்றே எதையும் அணுகும். ஆனால் இக்கால  மனிதர்களுக்கு தனி மனித மதிப்பு, அதன் வெளிப்பாடு என்பது மிக முக்கியம். பணமோ, வசதியோ, அழகோ அதை மீறி கிடையாது.  கரையும் அலையும் கொள்ளும் சினேகம் போல. 

3.  கற்பனாவாதம் (or Idealistic) கால பிரதிநிதிகளாக - சங்குவும் ஐனியும்.வீட்டில் சண்டை போட்டு, ரிசார்ட்டில் தனியாக ஒரு இளம் பெண் வேலை செய்தால் கெட்டுப்போக வாய்ப்புகள் அதிகம் என பயத்தை மீறி வரும் பெண்ணுக்கு, தயவு செய்து போ என வீட்டில் பிடிவாதமாக அனுப்பி வைத்தவனோடு உள்ளத்தின் மௌன மொழிகளை உடல்களின் வழியே மெல்லிய தூறலால் நனைக்கும் ஒரு உறவு. 

விலங்கு நிலைக்கு மீண்டும் திரும்பாமல் மனிதனை காப்பது - கலை, பண்பாடு, சட்டம் மற்றும் அச்சம். அப்படி நங்கூரம் இடப்பட்ட மனித மனம்  அவ்வப்போது தளும்பலாம் - என்றாலும் பெரிதாக பாதிக்காது தப்பித்து விடலாம். சுதந்திரமும் அச்சமும் ஒரு சேர தரும் தனிமையில், நம்மை எது வழிநடத்துகிறது என்பதும் அதுவும் அது எந்த சந்தர்ப்பத்தில் - என்பதும் மிகவும் முக்கியம்.  

ஒரு சூத்திரத்தில் இருந்து முழு பாடத்தையும் விளங்கி கொள்வது போல் - அழியும் உடல் வழியே அழியா நினைவுகளை மீட்டிக் கொள்ளும் மாயத்தை நிகழ்த்தும் மாயாவிகள் - சங்குவும் ஐனியும். 

கதைக்கு நடுவே கவித்துவமான வரிகள் மிதந்து மிதந்து வருகிறது. உதாரணத்திற்கு, 

> மெல்லிய ஒளி உமிழும் ஒற்றை விளக்கொன்றைத் தொங்கவிட்டபடி, சிவப்புக் கழுகை நோக்கி அலைகளில் ஏறி இறங்கி வந்து கொண்டிருந்தது ஒரு சிறுபடகு.

வெங்கட பிரசாத் - கனடா

-----------------------------------

Prasad Venkat

"ஊனுடல்" offers a poignant glimpse into the burgeoning desires and hesitant hopes of youth, standing in contrast to narratives like M. Gopalakrishnan's "தனியன்" which delves into the fading embers of middle-aged longing. Where "தனியன்" portrays dejection after hormonal urges wane, "ஊனுடல்" captures the vibrant, often overwhelming, pulse of testosterone in a young man still brimming with hope.

The story centers on Sangu, a young man around 20, working as a waiter in an upscale Maldivian resort. He is consumed by his attraction to Ina, a room cleaner at the same resort. Both hail from struggling, conservative backgrounds in Tamil Nadu, seeking economic stability far from home. This shared background forms a subtle bond between them. Sangu, despite his palpable desire, is characterized by a lack of assertiveness, a trait reminiscent of "தனியன்"'s protagonist, yet crucially distinct due to his underlying optimism.

The narrative skillfully builds on Sangu's internal conflict. He's acutely aware of Ina's reciprocal interest, marked by hints she has previously given, yet paralyzed by hesitation when it comes to making the first move. His predicament echoes a sentiment shared amongst his high school friends back home – the challenge isn't necessarily a lack of courage or mutual feeling, but finding the opportune circumstance ("புள்ளிங்க கூட தனியா இருக்கற மாதிரி அமையறதே வரம்") for intimacy in their conservative environment.

This much-desired circumstance arrives unexpectedly when Sangu and Ina are tasked with assisting a wealthy man on their yacht for a one-night stand with a woman he met at the resort. Away from the constraints of the resort and their routine, the isolation provides the catalyst Sangu needs. He finally acts on his feelings and kisses Ina.

However, the story introduces a stark contrast through the hosts. The wealthy host's interaction with his partner escalates into a violent fight, shattering the romantic potential of the setting and highlighting a destructive form of interaction. This volatile backdrop makes the story's resolution even more tender. In the aftermath, Ina seeks solace not in isolation or anger, but by leaning on Sangu's shoulder. His response is not one of conquest, but of care: "சங்கு அவளது தோளில் கைவைத்து, அவளை ஒரு மலரைப்போலத் தன் வசம் இழுத்துக் கொண்டான்".

This final image is pivotal. Sangu's initial, hormone-driven fixation seems to resolve into something gentler, more protective. The story seems to reinforce that true connection, perhaps even true manliness, lies not in the aggressive pursuit driven by testosterone, but in this tenderness and care.

Congratulations, Jegadeesh.

Prasad Venkat


பேராசிரியரின் கிளி- கருத்துக்கள்

 



ஏப்ரல் 2025 முழுவதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கக் கிளையில் என் சிறுகதைகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்தது. நண்பர்கள் என் பல்வேறு சிறுகதைகள் குறித்த பார்வையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அவர்களது விமர்சனத்தையும் முன்வைத்தனர். அவர்களுக்கு என் நன்றி.

பேராசிரியரின் கிளி சிறுகதை குறித்து நண்பர்களின் கருத்துக்கள்.

பேராசிரியரின் கிளி

Pramothini - San Francisco.

I have always wanted to read Jegadeesh’s stories - but did not know where to start. Thank you @Nirmal and @Austin Sounder for shining the spotlight on பேராசிரியரின் கிளி. Here is my review.

Not all who succeed are respected. Not all who are respected have succeeded. பேராசிரியரின் கிளி lingers in this grey space between success and respect.

When Shruti was a nobody, her teacher Ram was a somebody—on the brink of a huge discovery. But today, fifteen years later, she is a somebody, and he is a nobody. A nobody whose address doesn’t even exist on Google Maps. A nobody who gave himself up to alcohol. A nobody who quietly retired. 

And yet, despite all the awards Shruti has received, she still longs for his appreciation—his public acknowledgment that she’s done something truly worthy. And he remains silent. Why does he stay silent? Is it jealousy, or something else? Read the story to find the answer—one that’s both surprising and moving.

---------------

What I liked about this story: The quirky parrot 🦜causing comical chaos is so adorable. We feel Shruti’s journey—her fear, anger, longing, and need for validation. The slow reveal of who Shruti and Ram really are makes us want to keep reading. The wine stain as a metaphor for unhealed emotional wounds is poetic. And when Ram finally explains his silence, it lands hard—because by then, we’ve lived through Shruti’s confusion and pain.

It’s a great story, and a good introduction to Jegadeesh’s works. Congratulations,

Pramothini - San Francisco.


அசைவும் பெருக்கும் - கருத்துக்கள்




ஏப்ரல் 2025 முழுவதும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கக் கிளையில் என் சிறுகதைகளைப் பற்றிய விவாதம் தொடர்ந்து நடந்தது. நண்பர்கள் என் பல்வேறு சிறுகதைகள் குறித்த பார்வையை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர். அவர்களது விமர்சனத்தையும் முன்வைத்தனர். அவர்களுக்கு என் நன்றி.


அசைவும் பெருக்கும் சிறுகதை குறித்து நண்பர்களின் கருத்துக்கள்

அசைவும் பெருக்கும் சிறுகதை


சாரதி வெங்கட்ராமன்


அசைவும் பெருக்கும் - இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்தமான கதை. கதை சொல்லியோடு ப‌‌‌ல இடங்களில் என்னை அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததாலோ என்னவோ, முதல் வாசிப்பிலேயே பிடித்துப்போய் விட்டது. 


எத்தனை முறை முயன்றும் தியானத்தில் ஒன்றி எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல் மனதை நிலைநிறுத்த முடியாத கௌதம், ரிஷிகேஷின் ஒரு ஆசிரமத்தில் தற்செயலாக குரு அபேதானந்தரை சந்தித்து தன் குழப்பத்திற்குத் தீர்வு காண்கிறான்.


கதையின் ஆரம்பத்தில், அத்தனை பிரம்மாண்டமாய் ஆர்ப்பரித்து பொங்கி வரும் கங்கையைப் பகலில் காண்கையில், அந்த பாலத்தின் புறக்காட்சிகள் மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. கங்கையின் பெருக்கை அவன் மனதால் உணர்வதில்லை.


ஒரே இரவில் மிகவும் கடினமான கணிணிப் பொறிநிரலைத் திருத்தி எழுதி முடிக்கையில், தன் முழுமனதும் அதில் ஒன்றி இருந்ததைக் கண்டுணர்வதன் மூலம் தியானம் என்பதென்ன என்றறிகிறான். மனம் அமைதிப்பட்ட அந்நிலையில் மீண்டும் அந்தப் பாலத்தில் நிற்கையில், இம்முறை கங்கையின் தாலாட்டாக பாலத்தின் அந்த ஆட்டத்தை அனுபவிக்க முடிகிறது அவனால்.


“உன் சுபாவம் என்ன? அது உன்னை எவ்வித கர்மத்தில் தூண்டுகிறது? அது தர்மத்தின் வழிபட்டு இருக்கிறதா? எனில் நீ அக்கர்மத்தைத் தொடர்ந்து செய். அதன் பலனுக்காக அல்ல; ஏதேனும் நிர்பந்தத்தின் பொருட்டு அல்ல; உன்னை மேம்படுத்த; உன் மனதைப் பண்படுத்த;” என்று குரு உரைப்பது கௌதமுக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே பொருந்தும்.


சாரதி வெங்கட்ராமன்


—-----------------------------------------------------

மதன் சோனாசலம்

அத்தனை கழிவுகளையும், குப்பைகளையும் கலந்துவிட்டு, கங்கையை அன்னை என விதந்தோதுவர்களின் முரண்பாட்டை சற்று எள்ளலோடு நோக்குவதிலிருந்து தொடங்குகிறது கௌதமின் பயணம். அதன் பின், அவன் தங்கியிருக்கும் விடுதியும், அந்த விடுதியில் அவனுக்கு முன் தங்கியிருந்தவர்கள் (முன்வினை!) செய்த தவறால் தினம் வந்து தொந்தரவு தரும் குரங்கும் நமக்கு அறிமுகமாகிறது. அதை தொடர்ந்து ரிஷிகேஷின் தெருக்களும், மக்களும், மாடுகளும் மெல்ல மெல்ல கதையில் துலங்கி வருகிறது, கிட்டத்தட்ட கௌதமின் ஆழ்மனம் போல. அவன்  குரு அபேதானந்தரை சந்திப்பதில் கதையின் மைய்யம் விவாதிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக தன் ஆழ்மனதின் இச்சைகளை கலையவும், தியானத்தில் ஆழ்ந்து தன்னை உணரவும் கங்கை கரையை அடைந்தவனுக்கு  அவரது வார்த்தைகள் எதோ ஒரு வகை தெளிவை அளிப்பதாக எண்ணுகிறான். குரு அருளோ அல்லது தற்செயலோ, அதுவரை வேலையை உதறிவிட்டு தன்னை தேடி வந்தவனுக்கு மீண்டும் ஒரு வேலையில், எந்த விதமான தொல்லைகளும் இல்லாமல் தான் மட்டுமே என உணரும் சில மணி நேரங்கள் கிடைக்கிறது. அத்தனையும் முடித்த பின், தியானம் செய்யும் நேரமும் தள்ளி போனபின், துயிலாமல் நடக்க தொடங்குகிறான். அதே கங்கை. காலையில் பல வகையான மனிதர்களோடு அதிர்ந்து கொண்டிருந்த பாலம், இப்போதும் அசைகிறது. ஆனால் இப்போது பாலத்தில் நின்றிருப்பது அவன் மட்டும்தான், அதுவும் அசையாமல். கீழே கங்கை பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது அவன் கங்கையை புரிந்து கொள்கிறான், எந்த எள்ளலும் அல்ல ஒரு சின்ன புன்னகை மட்டுமே எஞ்சிருக்கிறது. 

வாழ்த்துக்கள் ஜெகதீஷ் 

மதன் சோனாசலம்

-------------------------------------------------------

ப்ரதீப் -டெக்ஸாஸ்


இந்த கதை அனைத்தும் மன பழக்கமே, காமமும், தியானமும்   கூட என்று மரபில் தொடர்ந்து கூறப்படும் கருத்தை புனைவு பரப்பில் வைக்கிறது. மேலும் வேலையில் ஈடுபடும்போது, சாட்சியாக மாறும்போது "நான்" யை இழக்கிறான்..தியானம் நிகழ்ந்து உள்ளதை அறிகிறான். தியானத்தின் போது அறிவதில்லை.


ஜெகதீஷ் உருவாக்கும் மைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் ஒரு அன்றாட இக்கட்டு நிலையிலிருந்து , இறுதியில் உருமாற்றம் கொள்வதை அவதானிக்க முடிகிறது..அவர்களுக்கும், நமக்கும் சுவராசியமிக்க ஒரு புனைவு பரப்பை உருவாக்கி அளிக்கிறார்..அந்த கதாபாத்திரமும், நாமும் அதன் வழியே சென்று, அந்த இக்கட்டுகளுக்கு சாட்சியாக அமைகிறோம் . அதில் கிடைக்கும் தீர்வும், அந்த பயணமும் இந்த கதைகளை முக்கியமானதாக ஆக்குகின்றன.


ப்ரதீப் -டெக்ஸாஸ்


—----------------------------------


விவேக் சுப்ரமணியன் - ராலே


Vivek - Story explores the questions exploring the core theme of foundation of devotion, the reflections on duality.


The geographical setting enhances the story’s authenticity, the flowing Ganges with its evening aartis, to the Ram Jhula bridge with people crossing while a cow ambles through, to the troublesome monkeys that harass visitors around the ashram. These vivid details create a realistic portrayal of life in Rishikesh or a similar spiritual center. The story traverses with genuine intimacy the challenges and confusions that arise in an ordinary person's meditation journey. Set on the banks of the Ganges in an ashram, Gautam, a seeker trying to control his wandering mind through meditation.


Gautam's two-year struggle with meditation practice, filled with inconsistency and frustration at not experiencing any tangible results. The guru responds by taking him to view the Ganges (affectionately referred to as "Mother" by locals), suggesting that simply gazing at the river is itself a meditation. - It reminds me of Hermann Hesse's novel Siddhartha. The novel ends in a similar pattern.


Story doesn't romanticize spiritual practice but instead shows the real obstacles. Gautam's mind refuses to settle, constantly chasing thoughts and creating reasons to avoid meditation altogether. Anyone  who has attempted meditation and encountered the mind's resistance.


The guru's wisdom draws beautifully from Vedantic philosophy. When he explains that true meditation isn't about stopping thoughts but rather observing them until one realizes "I am not these thoughts, but the witness of them," he echoes the core Advaita Vedanta principle of separating the observer from the observed. His reference to the Bhagavad Gita's conversation between Arjuna and Krishna (where Arjuna complains about controlling the mind being as difficult as controlling the wind) connects Gautam's struggle to a timeless spiritual tradition.


I see contrasts on Western and Eastern approaches to spirituality in the story. Gautam, trained in logical thinking as a computer programmer, struggles with the non-linear nature of spiritual growth, while the guru emphasizes that vairagya (detachment) isn't about rejecting the world but realizing that worldly objects cannot provide lasting fulfillment. A classic teaching from the Upanishads.


We see a moment unfold between Gautam and Guru Abhedananda. Gautam, having established some trust with the spiritual teacher, decides to share his deepest struggle, his persistent sexual desires that have troubled him for years.


The guru's response is particularly interesting, as he doesn't react with judgment or dismissal. Instead, he references "Venus in Furs" by Leopold von Sacher-Masoch, using it as a philosophical entry point to discuss the nature of desire. He suggests that sexual desire, when it exceeds basic biological need, can become a form of violence whether directed toward others or, as in Severin's case in the novel, invited upon oneself.


The spiritual teacher then expands the concept of "kāma" (desire) beyond just sexual longing to include attachment to all things and beings. This aligns with classical Vedantic understanding where kāma is one of the four purusharthas (goals of human life) but also a potential obstacle to spiritual growth when it becomes obsessive.


His advice draws directly from the Bhagavad Gita's concepts of the self as both witness (upadraṣṭā) and permitter (anumantā), suggesting that Gautam's consciousness is allowing these desires to persist. The solution he offers combines elements of Karma Yoga and meditation, a holistic approach that acknowledges one cannot advance in meditation without first cultivating the mind through right action.


As a reader, the linking of a moment from The Brothers Karamazov in the guru’s setting feels somewhat out of place. But of course, it’s entirely the writer’s choice.(Logically Protagonist gautam is not avid reader as specified in the story)


Final moment when Gautam traverses the bridge, Such beautiful, vivid descriptions that bring scenes to life before our eyes! This piece feels like a confluence of river, devotion, vibrant worldly life, and meditative reflections occurring amid all the bustle. The  image of a journey, clearly portrays the outer world's motion and gradually guides us toward that inner peace while reading. Gautam  stands on that bridge, sensing the shifting movements in the air and the wild rush of the river flowing beneath. The line “Thousands of bodies; one soul” is beautiful.


விவேக் சுப்ரமணியன் - ராலே


—---------------------------------------------------------


விஜய் சத்யா - வாஷிங்டன் டிசி


ஜெகதீஷின் அசைவும் பெருக்கும் சிறுகதையை வாசித்தேன். ஆன்மீக தேடல் உள்ள ஒருவன் தியானம் கைகூடாமல் ஒரு குருவின் வழிகாட்டுதலால் இயல்பாக தியான அனுபவம் பெறும் கதை. 


 ரிஷிகேஷுக்கு தியானம் கற்க செல்லும் கௌதம் தன்னால் மனதை அடக்கி தியானத்தில் அமர முடியவில்லை என்று குருவிடம் கேட்கிறான்.


அங்கு பெருகி ஓடும் கங்கை நதியை பார்க்க அழைத்து செல்கிறார் குரு. கங்கை தாயை பார்த்துகொண்டிருப்பதே தியானம் என்கிறார். தொடர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபடவும், புலன் இன்பங்களில் நாட்டமின்றி இருக்கவும் அறிவுறுத்துகிறார்.  இவற்றை ஒரு கருத்தாக மட்டுமே அவனால் உணரமுடிந்ததென்றும் தியானத்தில் அமர்ந்தாலே மனம் அலைபாய ஆரம்பித்து விடுவதாகவும் கூறுகிறான். அப்படி அலைபாயும் மனதை பார்ப்பதே தியானம் என்று கூறுகிறார்.  மனதை நீண்ட நாட்களாக அலைகழிக்கும் காம உணர்வை பற்றி கேட்க உயிரியலின் இயல்பான காமம் மென்மையானதென்றும் மனமே அதை வக்கிரமாக்கி விடுகிறது என்றும் புரியவைக்கிறார்.  அதை கடப்பதற்கு  கீதையின் பலனை எதிர்பாரா கர்மமே சிறந்தது என்றும் போதிக்கிறார்.


அன்றிரவு அவசர வேலையாக மடிக்கணினியில் ஒரு ப்ரோகிராமை முழு ஈடுப்பாட்டோடு தயார் செய்கிறான். 


அதை முடித்தவுடன நள்ளிரவில் ரிஷிகேஷ் தெருக்களில் உலவுகிறான்.  ராம் ஜூலாவில்  ஏறி கங்கையின் பெருக்கை பாலத்தில் அசைந்தபடி விடியும் வரை லயித்து பார்த்திருக்கிறான். கங்கை தாயை பார்த்துகொண்டிருப்பதே தியானம் என்று குரு சுட்டியதை கருத்தாக மட்டும் இல்லாமல் ஆழ்ந்த அனுபவமாகவே அடைகிறான். 


மனதிற்கு நிறைவான கதை. வாழ்த்துகள் ஜெகதீஷ்.


விஜய் சத்யா - வாஷிங்டன் டிசி

—---------------------------------------------------------------

அசைவும் பெருக்கும்

3 மே, 2025

பொற்குகை ரகசியம் கலந்துரையாடல்





தமிழில் வெளியான என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான பொற்குகை ரகசியம் குறித்து ஒரு கலந்துரையாடலை அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்துள்ளது. விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை  50 நிமிடத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை எலியட்டின் பெயரால் நடக்கும் இலக்கிய அரங்கொன்றில் சூம் செயலி வழியாக நிகழ்ச்சியை நம் விஷ்ணுபுரம் குழுமம் நடத்துகின்றது. இது நம் நண்பர்களுடன், நண்பர்களுக்காக, நண்பர்களால் நடத்தப்படும் நிகழ்வு. மே மாதம் நடக்கும் நிகழ்வில் சவுத் கரோலினாவில் இருக்கும் ஜெகதீஷ் குமாரின் பொற்குகை ரகசியம் புத்தகம் பற்றி கலிபோர்னியாவின் விஜய் ரெங்கராஜனும், டெக்சாசின் ப்ரதீப்பும் பேச உள்ளார்கள்.


மே 4, 2025, ஞாயிற்றுக்கிழமை டி.எஸ். எலியட் மாதாந்திர இலக்கிய கூடல்

மே மாதம் முதல் ஞாயிறு 04-மே மாதம்-2025 அன்று டெக்ஸாசை சேர்ந்த நண்பர் ப்ரதீப்பும், கலிபோர்னியாவை சேர்ந்த விஜய் ரெங்கராஜனும் நமது ஜெகதீஷ் குமார் அவர்களின் சிறுகதை தொகுப்பு பொற்குகை ரகசியம் பற்றி உரை நிகழ்த்துவார்கள்.  கனடாவில் உள்ள நண்பர் விபி நிகழ்வினை தொகுத்து வழங்குவார்.

ஜெகதீஷ்குமார் கேள்வி , பதில் நிகழ்வில் பங்கு பெற்று நம்முடன் அவரது படைப்பு பற்றி உரையாடுவார்.

நேரம் காலை: 7 மணி PST/9 மணி CST/10 மணி EST/

இந்திய நேரம்: மாலை 7.30 மணி 

ப்ரதீப் உரை - 10 நிமிடம்

விஜய் ரெங்கராஜன் உரை -10 நிமிடம்

ஜெகதீஷ் கேள்வி பதில் - 30 நிமிடம்

சூம் செயலி இணைப்பு https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09

அமேசானில் பொற்குகை ரகசியம் கிண்டில் பதிப்பு கிடைக்கிறது.

பொற்குகை ரகசியம் கிண்டில் பதிப்பு



13 மார்ச், 2025

பொற்குகை ரகசியம் - விமர்சனம்



 

என்னுடைய பொற்குகை ரகசியம் தொகுப்பு குறித்து ஆஸ்டின் சௌந்தர் எழுதியுள்ள விமர்சனம்.

ஆஸ்டின் சௌந்தர்

நேற்றைய (12/30/2024) மாலை , எனக்கு இனிதான மாலை. இரு மலைகளுக்கு நடுவே ஆதவன் சென்று மறையும் அந்தியைக் காணும்பொழுது வரும் அதே உவகை , ஜெகதீஸின் , “நிமித்தம்” சிறுகதையை அகழ் இதழில் வாசித்தபொழுது அடைந்தேன். அசோகமித்திரன் ஒரு முன்னுரையில் சொல்லியிருப்பார், “நான் இந்தக் கதைகளை எழுதும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தேன், வாசிக்கும் நீங்களும் அதே மகிழ்வை அடைவீர்கள் “ என. அந்த மகிழ்வை “நிமித்தம்” எள்ளளவும் குறையாமல் கொடுத்தது. கதையின்  வெற்றி reading pleasure கொடுப்பதில் எல்லோரையும் சென்றடையும் என்பதில் உள்ளது. கதைநாயகனின் செயல், வாழ்க்கையின் துண்டு ஒன்று பறந்துவந்து இரத்தத்துளிகள் படர வாசகனின் அகத்தை தொட, இது இலக்கியம் என்றும் சொல்கிறது. 

ஜெகதீஸின் “பேராசிரியர் கிளி” கதையை சொல்வனத்தில் வாசித்துவிட்டு, “இலக்கியத்தில் கொட்டுப் பட்டாலும் அவர் கையால் கொட்டுப்படவேண்டும்” என்று நான் நினைக்கும் நண்பருக்கு அனுப்பி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டேன். அவரும் நான் நினைத்ததையே சொன்னார். ஜா. தீபா-வின், “குரு பீடம்” கதையில் தொட்ட பேசுபொருள் எனினும், இவரது உத்தி வேறுபடும் இடமும், வாழ்வியல் சூழலும், “பேராசிரியர் கிளியை” ஜெகதீஸ் பயன்படுத்திய விதமும் இலக்கியம் என ஆகிறது என்றார். ஒவ்வொரு எழுத்தாளரும் , அவர்களைத் தொடர்ந்து வாசிக்கலாம் என்று நான் குறித்து வைத்திருப்பேன். ஜெகதீஸ் அந்த இடத்தை இந்தக் கதையின் மூலம் அடைந்துவிட்டார். ஆனால், தொடர்வாரா என்ற test மிச்சமிருந்தது. 

ராலே ராஜன் வீட்டிற்கு, நாங்கள் செப்டம்பரில் சென்றபொழுது ஜெகதீஸும் அனுவும் தம்பதி சகிதமாக வந்து பார்த்து, “பொற்குகை ரகசியம்” நூலை “எங்கள் அண்ணா” என்று ஜெகதீஸ் கையெழுத்துப் போட அன்பளிப்பாகக் கொடுத்தனர். மரியாதையின் நிமித்தம் தொகுப்பில் உள்ள, “சொல்லப்படாத கதை” -யை ராஜனும் சசியும் எங்களுக்கென ஒதுக்கியிருந்த அறையில் தூங்கி எழுந்த ஒரு காலையில் வாசித்தேன். எதுவுமே இல்லாத ஒன்றை எடுத்துக்கொண்டு எதோ பெரிதாக இருப்பதுபோல் தனது எழுத்துச் சித்திரத்தால் மட்டும் சாதிப்பது என்பது முற்றிலும் ஒரு கலைஞனாலேயே முடியும். அவனை நான் அந்தக் கதையில் கண்டுகொண்டேன். அந்தக் காலை, ஜெயமோகன், அருண்மொழி போன்ற தளபதிகள் சூழ ஒரு பட்டாளமாக, Jaipur Literature Festival -போக தயாராகிக்கொண்டிருந்தோம்! அனுவின் காதலன் கோட்டெல்லாம் போட்டு அழகனாக தயாராக  வாசலில் வந்து நின்றிருந்தார். “தம்பி , நீ கலைஞன் “ என்று கட்டிப்பிடித்துக்கொண்டேன். அருகில் நின்ற அனு கண்கள் மின்னப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் கட்டிப்பிடித்ததைப் பார்த்துப் பொறாமையெல்லாம் கொள்ளவில்லை. 

இதற்கு முன்னர் மழையும் இல்லாத வெய்யிலும் இல்லாத ஒரு நாளில்,  “பேராசிரியர் கிளி” “கர்மா” “ஊனுடல்”, “நீலத்தழல் “ எல்லாம் வாசித்த ஒரு வாசகனாக  , நான் அவரை அழைத்திருந்தேன். “கர்மா” நல்ல கதைதான் தம்பி, ஆனா இவ்வளவு Straight Forward-ஆக எல்லாம் தலைப்பு வைக்கக்கூடாது என்றேன். அன்றுதான், “அண்ணா எப்படிண்ணா இப்படி வலிக்காம அடிக்கிறீங்க” என்றார். அனு கண்கள் மின்னப் பார்த்திருக்க , ஜெகதீஸின் கண்களில் அந்த அண்ணனா இந்த அண்ணன் என்ற சந்தேகம்! 

“நிமித்தம்” வாசித்துவிட்டு அந்த அகமகிழ்வு நிலை குலையாமல் நிற்கிறதா எனப் பார்க்க, Virginia Woolf-ந் Unwritten Novel மற்றும் Kew Gardens வாசித்தேன். கந்தர்வனின், “தலைவர்” சிறுகதையை வேறு ஓர் காரணமாக மீள்வாசிப்பு செய்ய நினைத்திருந்தேன். எனது ஆசிட் டெஸ்டிற்கு அதை வாசிதத்து மேலும் உதவியது. ஜெகதீஸ் , எனும் கதைசொல்லி, கந்தர்வன் எனும் கதைசொல்லி பத்தி பத்தியாக பாத்திரங்களை படைப்பதிலும், காட்சியமைப்பிலும் இணையாக சென்றார்கள். கந்தவர்னின் கதையில் வரும் ஒரு அம்மா , அப்பா, மருத்தவப் படிப்புக்கு தங்கள் மகனை தயாராக்கும் சித்திரம். “நிமித்தம்” கதையில் மாநில அரசு அலுவலக சித்திரம். அந்த அம்மாவும் அப்பாவும் கோடான கோடி மக்களின் பிரதி நிதிகள். ஜெகதீஸின் கதை நாயகனும், தாசில்தாரும், காக்கிச்சட்டை போட்டவரும் , புரைகண்ணுடையானும், தமிழக மக்களின் அச்சு அசல் வார்ப்புகள். இரண்டு கதைகளிலும்  வாழ்வு வைக்கும் சூடு, நிதர்சனம். என் மனதில் படித்த , இதுவரை வாசித்த அனைத்து நல்ல கதைகளின் நிரையில் “நிமித்தமும்” நிற்கிறது.

“பொற்குகை ரகசியம்” நூலை எடுத்து, குறுங்கதைகள் என வகைப்படுத்துப்பட்டுள்ள, “பேசும் மலர்”, “தேங்காய்ச் சில்லு”   கதைகளை வாசித்தேன். “பேசும் மலர்” வாழ்வை ரசிப்பவனின் காதுகளும் கண்களும் எந்த அளவுக் கூர்மையடையும் என அழகிய மொழியில் சொல்கிறது. அழகியல் கூறுகளில் மனம்கவர் கதைகளில் இதை வைத்துக்கொள்வேன். “தேங்காய்ச் சில்லு” கதைகளை வாசித்தேன். “பேசும் மலர்” வாழ்வை ரசிப்பவனின் காதுகளும் கண்களும் எந்த அளவுக் கூர்மையடையும் என அழகிய மொழியில் சொல்கிறது. அழகியல் கூறுகளில் மனம்கவர் கதைகளில் இதை வைத்துக்கொள்வேன். “தேங்காய்ச் சில்லு” , யோசனையில் இருப்பவனை, தொட்டுக்கூப்பிட்டால் ஒரு சிலிர்ப்பு வருமே, இந்தக் கதையை வாசித்ததும் அப்படி ஒரு சிலிர்ப்பு. ஆனால், இந்த சிலிர்ப்பு அடங்காதது. ஜெகதீஸின் பெயரை ஒரு பத்திரிகையில் பார்த்ததும், அந்த படைப்பை வாசிக்க வைக்கும். புத்தகக் கடையில் ஜெகதீஸ் என்ற பெயர் கொண்ட நூல் எங்கே எனத்தேட வைக்கும். ஜெகதீஸ் கதை சொல்ல எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல் பிடித்துள்ளது. “ஒப்பனை” கதையில் உரையாடல்கள் செறிவாக வந்துள்ளன. மாணவி விஜயலட்சுமி-யை, ஆசிரியர் லாவண்யா, “விஜயலட்சுமி” என்று முழுமையான பெயர் சொல்லி அழைக்க, இந்தக்காலத்தில் யார் பெயரை முழுசாக சொல்கிறார்கள் என்று யோசித்தேன். சக மாணவர்களோ, “விஜே” என்று அழைக்கிறார்கள். அப்படியே நவீனமாக உரையாடலை நகர்த்திவிடுகிறார். “பொற்குகை ரகசியம்” , சைக்கிளில் சிட்டாகப் பறக்கும் பாலுவிற்கு அந்தப் படக்கதை வாசிக்கவேண்டும் என்பதைத்தாண்டி வேறு ஒரு ரகசியம் இருக்கிறது. “பிறப்பொக்கும்” கதை சங்கிலியை யார் எடுத்தார்கள் என்பது வாசகனுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு. எல்லாம் இணைந்து வாசகனுக்கு சுவாரஸ்யத்தை அள்ளி வழங்குகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒருவன் பல நாடுகளில், பலவிதமான பண்பாட்டுச் சூழலில் வாழும் நிமித்தமாகிவிடுகிறது. ஜெகதீஸ் குமார் அவர்களின் பிரதிநிதி. “பொற்குகை ரகசியம்” நூலில், அவர் வாழ்ந்த வசித்த நாடுகளில், கண்களையும் காதுகளையும் திறந்து வைத்து சுற்றிலும் நடப்பதை கவனித்திருக்கிறார் எனத் தெரிகிறது. விருந்தாளியாக வந்து பார்ப்பவர்களுக்கு அமெரிக்க வீட்டின் முன்னுள்ள சீராக வெட்டப்பட்ட பசும்புற்கள் தோட்டங்கள் மகிழ்வளிக்கும். புல்லைவெட்டத் திணறும் புல்வெட்டியின் சக்கரத்தீன் கீழ் மாட்டிக்கொள்ளும் க்ரேன்பெர்ரி கிளையோ, இருந்து வாழும் கதைசொல்லியின் கண்களில் மட்டுமே படும். வருடக்கணக்காக தனது ஹோண்டா அக்கார்டை மாற்றாத பேராசிரியரும் அவனது கண்ணில் படுவார். எந்த நாடாக இருந்தால் என்ன கணக்கு வாத்தியார் போர்டில் எழுதுவதை கவனிக்காத மாணவர்கள் இருக்கிறார்கள். கடலில் மீன் பிடிக்கப்போலாமா என்று கேட்டால், திமிங்கலத்தின் விட்டையைப் பார்க்கவா என கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். நிலம் மாறினாலும் குதர்க்கம் மாறாத மானிடர்களையும், லாட்டரிச் சீட்டு விற்கும் தமிழ் நாட்டுச் சிறுவன் , நீல ஒளியை உமிழும் ஜெல்லி மீன்கள் என “பொற்குகை ரகசியம்” பன்னாட்டுக்காரனின் கதைகள் அடங்கிய தொகுப்பு.


ஆஸ்டின் சௌந்தர்


“நிமித்தம்” சிறுகதை குறித்து


 

என்னுடைய “நிமித்தம்” சிறுகதை குறித்து வந்த கருத்துக்கள்

சு.வெங்கட்

ஜெகதீஷ் உங்களுடைய நிமித்தம் சிறுகதையைப் படித்தேன். இது என்னுடைய பார்வை.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் தனக்கான வேலை செய்ய நினைக்கும் ஒருவனாகத்தான் ரகு நந்தனை முதலில் பார்த்தேன். ஆனால் அவனிடம் அந்த நிமிர்வு தொலைந்துபோகிறது. எப்படியாவது தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ளத் துடிக்கும் அவனுக்கு லஞ்சம் கொடுப்பதில் இருக்கும் தயக்கம் முற்போக்கு இல்லை. தன் கை காசை இழக்கக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே. அவனுக்கு யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ அவர்களுக்குத் தேவையான ஒன்றைக் கொடுத்து காரியத்தைச் செய்துகொள்வது தெரிந்திருக்கிறது. இந்தியாவில் எந்த வித கூச்சமும் இல்லாமல் காலில் விழுந்து அவர்களின் ஈகோவை தூக்கிவிடுவதுபோல செய்து தங்கள் காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் ஒரு முறை உள்ளது. அது துபாயில் கனடாவில் வேலை செய்யாது என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் அந்நாடுகளில் நிர்ணயிக்கும் காலக் கெடுவை மதித்து நடக்கிறார்கள். காலில் விழுவது காரியத்தைச் சாதித்துக்கொள்ள உதவும் ஒரு முறை என்பது பரவலாகத் தெரிந்திருந்தாலும் அது இன்னும் இந்தியா போன்ற நாடுகளில் கலாச்சார ரீதியில் வேலை செய்கிறது. அப்படிதான் அந்த நேர்மையான அதிகாரியும் அதில் விழுகிறார் என்று நினைக்கிறேன். அது ஒரு துர்க்குண நிமித்தம்.

கண்ணில் புரை விழுந்து இருப்பவர் ரகுநந்தன் மனதின் மறு பாதியின் வடிவமாகவே பார்க்கிறேன். “தெரு நாய் ஒன்று மைதானத்துக்குள் மந்தமாக நடந்து கொண்டிருந்தது” அங்குள்ள சூழ்நிலையைக் காட்டும் ஒரு நல்ல ஆழ் மன பதிவு காட்சியாக இருந்தது. இது போன்ற கதைகள் மிக எளிதாக நமக்குள் இருக்கும் சுஜாதா வந்துவிடுவார். ஆனால் அதை நீங்கள் எளிதாகக் கடந்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

சு. வெங்கட்

விஜய்குமார் சம்மங்கரை

அவன் காலில் விழுந்து ஆசி வாங்குவது ஒருவித disturbed feeling ஐ உருவாக்குகிறது. கதை பிடித்திருந்தது.

விஜய்குமார் சம்மங்கரை

நிர்மல்

ஊழல் பழகி போன ஒரு இடம். அந்த இடத்தில் கூட இவன் நம்மவன் என ஒருவனை அடையாளம் கண்டுக் கொள்ளுதல் செய்ய வேண்டிய பணியை வேறு எதுவும் எதிர்பார்க்காமல் செய்ய தூண்டுகின்றது. ஒரு கல்வி பணியில் இருக்கும் உயர் அதிகாரி அதே போல கல்விபணியில் இருக்கும் இருக்கும் இன்னோருவரை தன்னை போன்றவராக காண்கின்றார். அது உயர் அதிகாரிக்கு மன விரிவினை தருகின்றது. ஊரையே நம்மவன் அவர் காண முடிந்திருந்தால் கதாநாயகனுக்கு வந்திருக்கும் சிக்கல் வந்திருக்காது. அக்க மகாதேவியின் பாடல் ஒன்று உண்டு .

இவனாரவ இவனாரவ இவனாரவனெண்டு எனிசடிரய்யா

இவ நம்மவ இவ நம்மவ இவ நம்மவனெண்டு எனிசய்யா

கூடல சங்கம தேவா நிம்ம மனெய மகனெண்டு எனிசய்யா

கூடல சங்கம தேவனிடம் “கூடல் சங்கம தேவா, நின் வீட்டில் நான் மகனென்று எண்ணச் செய் ஐயா!” என மன்றாடும் குரல். வீடுபேறினை நோக்கிய குரல். சம்சார வாழ்வில் அரச அதிகாரி என்னும் பேரூருவங்களிடம் , அதிகாரமற்ற சம்சாரிகள் அதெ தொனியில் மன்றாட வேண்டியுள்ளது.

நிர்மல்

பாலாஜிராஜூ

இதை விட அற்புதமான புத்தாண்டு பரிசு ஜெகதீசுக்கு அமையாது. அவருடைய கதைகளுடன் தொடர்ச்சியாக பயணம் செய்தவன் என்ற முறையில் 'நிமித்தம்' சிறுகதையை அவருடைய உச்ச படைப்பு என்றே நானும் வைக்கிறேன், 'This guy knows what he is doing' என்று தோன்றியது. நிச்சயமாக அவர் எழுத்தாளனாக முழு பரிணாமம் அடைந்துவிட்டார் என்று எண்ணிக்கொண்டேன். இது போன்ற புகழ்மொழி அவருக்கு ஒர் சுமையாக இருக்கலாம், ஆனால் இந்த இடத்தில் பகிரவேண்டும் என்பதால் சொல்கிறேன்.


'நிமித்தம்', 'பொற்குகை ரகசியம்', 'ஊனுடல்', 'நீலத் தழல்' - என்பது என்னுடைய வாசிப்பில் முதன்மையாக நிற்கும் அவருடைய சிறுகதைகள். Go strong Jegadeesh!

பாலாஜி ராஜூ

ஆஸ்டின் சௌந்தர்

நேற்றைய (12/30/2024) மாலை , எனக்கு இனிதான மாலை. இரு மலைகளுக்கு நடுவே ஆதவன் சென்று மறையும் அந்தியைக் காணும்பொழுது வரும் அதே உவகை , ஜெகதீஸின் , “நிமித்தம்” சிறுகதையை அகழ் இதழில் வாசித்தபொழுது அடைந்தேன். அசோகமித்திரன் ஒரு முன்னுரையில் சொல்லியிருப்பார், “நான் இந்தக் கதைகளை எழுதும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தேன், வாசிக்கும் நீங்களும் அதே மகிழ்வை அடைவீர்கள் “ என. அந்த மகிழ்வை “நிமித்தம்” எள்ளளவும் குறையாமல் கொடுத்தது. கதையின்  வெற்றி reading pleasure கொடுப்பதில் எல்லோரையும் சென்றடையும் என்பதில் உள்ளது. கதைநாயகனின் செயல், வாழ்க்கையின் துண்டு ஒன்று பறந்துவந்து இரத்தத்துளிகள் படர வாசகனின் அகத்தை தொட, இது இலக்கியம் என்றும் சொல்கிறது. 


“நிமித்தம்”


உள் நின்று உடற்றும் - கருத்துக்கள்



 

என் புதிய சிறுகதை “உள் நின்று உடற்றும்” அகழ் இதழில் வெளிவந்துள்ளது. கதையை வெளியிட்ட அகழ் இதழுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் நன்றி.

இக்கதை குறித்த விவாதம் நான் சார்ந்துள்ள விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கக் கிளையின் குழமத்தில் நடைபெற்றது. பின்னால் வருவது நண்பர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்.

வெங்கட பிரசாத் (விபி)

பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது வழியே, கற்பனையாக நிகழ்வுகளை நிகழ்த்திக் கொள்வது வழியே மன அழுத்தத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்கிறார்கள்  (அல்லது தள்ளி போடுகிறார்கள்). அந்த அக இருளில் விரிந்து பறந்து போவதில் பாதி நிஜத்தில் நடந்தாலும் கலங்கி விடுவார்கள். 


பக்தியில் ஒரு தலை (யில் ஒரு துளி), பத்தினி மீது ஒரு கால், நடு நடுவே மனசாட்சியின் குரல்கள், என நிறைய இடங்களில் பார்த்த கதாபாத்திரம். அவன் காலையில் எண்ணிய ஒன்றை சகாயத்தின் வழியே நேரில் கண்டதும் சுள் என சுடுகிறது.  மணியை கோர்க்கும் நேர்த்தியாய்  கதை நிகழும் களத்தை பார்த்து பார்த்து அமைத்து இருக்கிறீர்கள். 


p .s : ஆரம்பத்தில் வந்த நாகத்துறை ஐசுவரிய சித்தரின் வரிகளாக வரும் நஞ்சும் அருளும் இரு பக்கங்களாய் அமைந்திருக்கும் மனித மனதை  சுட்டும் வரிகள் 

செருக்கெனும் நஞ்சும் அழித்தருள் தெய்வமும் ஒருங்குறை உளமிது உள்ளொளி பெருக்குவாம்

 Google ல் தேடிப் பார்த்தால் , இந்த சித்தர் கணித ஆசிரியராக இருக்கவே சாத்தியம் என்கிறது - அப்படியா ? :-) 

மற்றபடி, நண்பர்கள் இந்த கதையில் இருக்கும் நுணுக்கங்களை வெகு சிறப்பாக கோடிட்டு காண்பித்து  இருந்தார்கள்.

சிறப்பு ஜெகதீஷ்


வெங்கட பிரசாத் (விபி)

* * *

நிர்மல்

உள் நின்று உடற்றும் கதையில் இசக்கி அம்மன் வழியாக கலாச்சார புராணங்கள் நீதியை எவ்வாறு உருவகப்படுத்துகின்றன என்பதைக் காண்கிறோம். இந்த தெய்வ உருவகம் வரலாற்று அநீதிகளுக்கு எதிரான குரல்களை அங்கிகரித்து, அதே வேளையில் அறநெறி மீட்புக்கான பாதையை வழங்குகிறது. 

கோவிலில் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனும் அம்மன் பற்றி விவாதிக்கும்போது இந்த அறநெறி சட்டகத்தை தெளிவாகக் காணலாம்>

"முகுந்தன், அது ஏன் எல்லா அம்மனும் உக்கிரமானவங்களாவே இருக்காங்க? ஒருவேளை பொம்பளைங்களுக்கு நம்ம மேல இருக்கற கோபத்தைக் காட்டறதுக்கான கருவியா இந்த அம்மன்ங்கற தெய்வம்?" என்றார் 

ராதாகிருஷ்ணன் புன்முறுவலுடன்.

"அதென்னமோ தெரியலை சார். அம்பிகாங்கற பொண்ணுதான் எங்க குலதெய்வம் இசக்கியம்மனா மாறினதா ஐதீகம். மூதாதைச் சடங்குக்கு வச்சிருந்த சாப்பாட்டை எடுத்து பசியோடு வந்த துறவிக்குப் பறிமாறிடுறா அந்தப் பொண்ணு. ஆத்துக்குக் குளிக்கப் போய் திரும்பி வந்த புருஷனுக்கு, 'அதெப்படி சடங்கு முடியறதுக்கு முன்னாடி அப்படி ஒரு அபச்சாரம் பண்ணப்போச்சு' னு அவ மேல கடுங்கோபம். குழந்தைகளோட சேர்த்து பொண்டாட்டியை அடிச்சு வெளிய துரத்திடுறான். காட்டுக்குள்ள ஓடிப் போய் குழந்தைகளைக் கொண்ணு தன்னையும் மாய்ச்சிக்கிறா சார் அவ. அவளே திரும்பி யட்சிணியா பிறந்ததாகவும், ஏழு ஜென்மங்கள் அதே கணவனுக்கு மனைவியாப் பிறந்து அவனைக் கொண்ணு பழி தீர்த்துக்கிட்டதாகவும் செவிவழிக்கதை..."

இந்த உரையாடல் கலாச்சார கதைகள் அறநெறி முரண்பாடுகளை எவ்வாறு மொழியாகவும், மொழியில் இருந்து உருவான கற்சிலை என  உருவமாகவும் மூலம் வெளிப்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது. இந்தக் கதையில் உள்ள சமூகத்தின் கூட்டு நினைவுகள் பார்த்திபனுக்கு அவரது சொந்த துஷ்பிரயோகத்தை உணர ஒரு கண்ணாடியாக அமைகிறது, குறிப்பாக சகாயத்தின் வன்முறையை எதிர்கொள்ளும்போது இதைக் காணலாம்.

அன்றாடம் நயாகரா போன்ற பெரிய நீர்வீழ்ச்சி. அதன் அடியில் நிற்கையில் அகவயமாக நோக்குவது கடினம். உலகம் நம் புலன்களை “மெய்ட் ஆப் தி மிஸ்ட்” படகு போல ஏற்றி அன்றாடத்தினை நோக்கி சென்று கொண்டே இருக்கும். இவ்விடத்தில் கொஞ்சம் ஓய்வாக அகவயமாக நோக்க ஒரு பிஸிக்கல் ஸ்பேஸ் வேண்டும், நேரம் வேண்டும். தொழில்முறையிலும் தனிப்பட்ட வழக்கங்களின் அலையிலும் சிக்கிக்கொண்ட பார்த்திபனுக்கு, கோவில் என்பது அவரது நடத்தையை இறுதியாக எதிர்கொள்ளக்கூடிய உளவியல் நிலையாக அமைகிறது.

கோவிலில் பார்த்திபன் அங்குள்ள பெண்களை கவனிக்கையில் அவருக்கு ஏற்படும் வெளிப்பாட்டில் இதை காணலாம்:

"தன்னைச் சுற்றிலுமிருந்த பெண்களை மீண்டுமொருமுறை நோட்டமிட்டார். குடிக்கச் செல்லாத கணவனிடம் நாணிக் குனிந்தபடி பேசிக்கொண்டிருக்கும் அந்தப் புதுப்பெண், குழந்தையை மடியில் கிடத்தி, தாலாட்டி உறங்க வைத்துக்கொண்டிருக்கும் அந்தத் தாய், அலைபேசியின் திரைமீது விரல்களால் தாளமிட்டபடி இருக்கும் ஸ்வேதா வயதுள்ள அந்தப் பெண், நெற்றி வியர்வையை வழித்து விட்டு, 'உஸ்ஸப்பா' என்றபடி, தாளாத வெயிலுக்கு முந்தானையால் முகத்துக்குக் காற்று வீசிக்கொண்டிருக்கும் அந்த அம்மா (ஒரு சாயலில் அவரது மனைவியைப் போலவே இருந்தாள் அவள்.) எல்லாருமே இசக்கி அம்மனின் வடிவங்களாகத் தெரிந்தனர் பார்த்திபனுக்கு. பார்த்துக்கொண்டே வந்தவரின் பார்வை சூலமும், குழந்தையும் ஏந்தி, காலடியில் ஓர் ஆணை மிதித்தபடி உக்கிரப்பார்வை பார்த்துக்கொண்டிருந்த இசக்கி அம்மனின் திருவுருவத்தின் மீது நிலை கொண்டது. திடீரென்று அவரது உடல் சிலிர்த்துக் கொண்டது."

கோவில் என்னும் மரியாதைக்கு உரிய சூழல் பார்த்திபனுக்கு அவர் மனதில் வேரூன்றிய அன்றாட பழக்கங்களை கடந்து அகவய நோக்கில் தன் பிரச்சனைகளை சிந்திக்க இடம் அளிக்கின்றது. கோவிலும், அம்மனின் வெளிப்புற குறியீடுகளும் அவரது தற்காப்பு அரண்களை ஊடுருவி, சாதாரண பெண்களில் தெய்வீக பெண்மையை அடையாளம் காண உதவுகின்றன.

மனித மனம் அரூபமானவற்றை அப்படியே புரிந்துகொள்ள இயலாத. நாம் கருத்துக்களை விளக்கினாலும், அவற்றை உள்வாங்கிக்கொள்ள ஏதோ ஒரு வடிவம், ஒரு பெயர், ஒரு கதை தேவைப்படுகிறது. அநீதிக்கு எதிரான குரல் என்பது ஒரு கருத்தாக்கம் – அது மனதில் தொடர்ந்து நிற்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு உருவம் தேவை.

“உள்நின்று உடற்றும்” கதையில் இதைத்தான் பார்க்கிறோம். அநீதிக்கு எதிரான குரல் “இசக்கி அம்மன்” என்ற பெயரில், உருவத்தில் வந்திருக்கிறது. இந்த உருவகப்படுத்தல் வெறும் கற்பனையல்ல. இது மனிதர்களின் அனுபவத்தை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவி.

மனதின் இயல்பு: பெயரும் வடிவமும் இல்லாதவற்றை மனித மனம் தொடர்ந்து சிந்திக்க முடியாது. மறுக்கப்பட்ட நீதிக்கு எதிரான குரலை வடிவமாக்கி, கதையாக்கி, பெயரிட்டு முன்வைக்கும்போது, அவை மக்களின் மனதில் ஆழமாகப் பதிகின்றன.

சக்தி என பெயரிட்டு உருவம் அமைத்தல்: இசக்கி அம்மன் வெறும் கல் சிலை அல்ல – அவள் பெண்களுக்கு எதிரான அநீதிகளை எதிர்க்கும் சக்தியின் பரு வடிவம். இந்த வடிவுக்கு கதை சொல்லப்படும்போது அது மக்களை ஆழமாகத் தொடுகிறது. “அம்பிகா” என்ற சாதாரண பெண்ணின் கதை, பின்னர் “இசக்கி அம்மன்” என்ற தெய்வமாக மாறும் நிகழ்வு, பெண்ணியம் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து சமூக சக்தியாக மாறும் வரலாற்றின் சின்னமாக அமைகிறது.

மீட்சி: இந்த கதையில் பார்த்திபன் மாற்றம் அடைவது வெறும் தனிப்பட்ட முடிவாக இல்லாமல், கலாச்சார சட்டகத்திற்குள் நடக்கும் ஒரு நிகழ்வாக காட்டப்படுகிறது. இசக்கி அம்மனின் புராணம் அவருக்கு ஒரு மொழியை, ஒரு சட்டகத்தை வழங்குகிறது, அதனூடாகத்தான் அவர் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முயல்கிறார்.

இந்தக் கதையில், கலாச்சாரம் வெறும் பழக்கவழக்கங்களின் தொகுப்பு அல்ல , அது சமூகத்தில் நீதியை வலியுறுத்தும் ஒரு முறையாக, ஒரு மொழியாக செயல்படுகிறது. இசக்கி அம்மன் போன்ற உருவகங்கள் மூலம், நீதிக்கான குரல் என்ற கருத்து சமூகத்தில் தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கிறது.

கடைசியாக, இந்த கதையில் முக்கியமான நுணுக்கம் என்னவென்றால், இசக்கி அம்மன் பார்த்திபனுக்கு வெறும் கோபத்தின் வடிவமாக அல்ல, மீட்டெடுப்பின் வழியாகவும் தோன்றுகிறாள். அவரது குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைய கோவிலுக்குச் செல்ல முடிவெடுப்பது அதற்கு சான்று.

நிர்மல்

* * *

பிரசாத் வெங்கட்

Parthiban asks:

> ஏன் எல்லா அம்மனும் உக்கிரமானவங்களாவே இருக்காங்க? ஒருவேளை பொம்பளைங்களுக்கு நம்ம மேல இருக்கற கோபத்தைக் காட்டறதுக்கான கருவியா இந்த அம்மன்ங்கற தெய்வம்?

This question, coming from him at that point in life, felt a bit disingenuous. The man is an epitome of primal urges: (1) he's mad at his wife for not being sexy enough (and also for making உப்புமா), (2) mad at his daughter for expressing interest in pursuing higher studies instead of acceding to get married and not be weight on his shoulders anymore, (3) looks forward to the day to fill his coffers with bribe (4) not really interested in working (தலை வலிக்கற மாதிரி இருக்கு. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்) (5) has a special place for the wife-killing Sahayam because he delivered fresh fish to his house, cut the way he likes. So far, he hasn't done anything to redeem himself, other than worry about his wife's whereabouts.

Nirmal's sharp point:

> கோவில் என்னும் மரியாதைக்கு உரிய சூழல் பார்த்திபனுக்கு அவர் மனதில் வேரூன்றிய அன்றாட பழக்கங்களை கடந்து அகவய நோக்கில் தன் பிரச்சனைகளை சிந்திக்க இடம் அளிக்கின்றது.

is all the more relevant because it is the same இசக்கி அம்மன் that Parthiban daily looks in his home and mindlessly ritualizes:

> தன் குலதெய்வமான இசக்கி அம்மனுக்கு தீபம் காட்டிக்... தேவியைத் துதிப்பதைச் சற்றே நிறுத்தி, தலையை சற்றே திருகலாகச் சுழற்றி, “என்ன இன்னுமா டிஃபன் தயாராகலை?” என்று அடுக்களையில் உழன்று கொண்டிருந்த வீட்டம்மாளிடம் அதட்டலாகக் கேட்டார்.

At the end of this saga, when his daughter mentions that the wife's still frightened of him, his response is "எதுக்கு பயப்படணும்?", as if he's newly born. Yes, the wife is no யட்சிணி, but also Parthiban is not Parthiban anymore.

Nicely done, Jegadeesh.

பிரசாத் வெங்கட்

சு. வெங்கட்

உள்நின்று உடற்றும் - நல்ல தலைப்பு. ஆணென்ற அதிகாரம் உள்நின்று அவனை வருத்தி எடுப்பதாக எடுத்துக்கொள்கிறேன்.  சிறுகதைகளில் கற்பனையின் ஊடே யதார்த்தவாத காட்சிகளை மீறி, கதைக்குச் சம்பந்தமே இல்லாமல், ஆழ் மனதில் பொதிந்த ஒன்று வெளிவந்து அக்கதையை வேறு தளத்துக்கு நகர்த்தும். அப்படி ஒரு காட்சி "சைக்கிளில் பிளாஸ்டிக் பொருட்களும், பொம்மைகளும் விற்கும் ஒருவன் எழும்பி நின்று சைக்கிளை மிதித்தபடி காவல் நிலையத்தைக் கடந்து போனான்." இது சட்டென அக்காவல் நிலையத்தை, பார்த்திபனை மிக நெருக்கத்துக்குள்ளாக்கியது. வாழ்த்துக்கள் @Jegadeesh Kumar.

சு. வெங்கட்

பிரதீப்

ஜெகதீஷ் அவர்களின் கதை வெளியாகி உள்ளது.வாழ்வின் ஒரு தருணத்தை மிக அழகாக காட்சிப்படுத்தி உள்ளார். வாழ்த்துக்கள் ஜெகதீஷ்

பிரதீப்

* * *

பாலாஜி ராஜூ

வணக்கம் ஜெகதீஷ்,

‘உள் நின்று உடற்றும்’ கதையை இன்று விடிகாலை பெரும் ஆர்வத்துடன் வாசித்தேன். ஆர்வத்துக்கு காரணம் நீங்கள் நான்கு ஐந்து கதைகள் எழுதி வைத்திருப்பதாக முன்னர் சொன்னது. அது ‘அகழ்’ இதழில் வெளிவரும் என்றும் எதிர்பார்த்திருந்தேன்.

பார்த்திபன் என்ற காவல்துறை ஆய்வாளரை வைத்து கதை பின்னபட்டுள்ளது. முறைப்படுத்தப்பட்ட லஞ்சம் வாங்கும், குறிப்பிட்ட புலன் தேவைகள் கொண்ட, நடுத்தர வயதுக்கே உரிய மன ஊசலாட்டங்களால் அலைக்கழிக்கப்படும் ஒரு மனிதன், ஒரு சராசரி காவல்துறை அதிகாரி என்றும் சொல்லலாம்.

கதை ஆண்களுக்குள் ஊறும் வன்முறையை விசாரிக்கிறது என்ற எண்ணத்திற்கே வருகிறேன். இந்தக் கதை பெண்களின் மேல் ஆண்கள் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்த விரும்பும் வன்முறை சார்ந்தது என்று தோன்றினாலும், இதை அதற்கு மேலும் பல தளங்களில் விரித்துக்கொள்ள முடியும். காமம், சுயகர்வம், அதிகாரம் போன்றவற்றை நாடும் எண்ணங்களின் பின் உள்ள வன்முறை என்று வரையறுத்துப் பார்க்கிறேன், பொருந்துகிறது. 

வன்முறை என்பது நிகழவேண்டும் என்பதில்லை, அது மனதில் இருந்தாலும் அதற்கு இணையானதுதான். இங்கு பார்த்திபனின் மனதில் இருக்கும் வன்முறை அத்தகையது. சகாயத்துக்கு தன் செயல்களை மாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை, பார்த்திபனுக்கு உண்டு.

மனைவியைக் கொல்ல எண்ணுபவனின் முன் ஒரு பெண்ணின் தலை வந்து விழுந்து அவனுடைய குரூரத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பகுதி மிகவும் தனித்துவமானது, படைப்பாளியாக நீங்கள் வென்ற இடம் இது. கதையைத் தாங்கும் பகுதி இது, அல்லது கதையை அதன் உச்சம் நோக்கி நகர்த்தும் பகுதி.

பெண்களை வெறுத்தாலும் அவர்கள் இல்லாமல் ஆண்களின் வாழ்வு முழுமை அடைவதில்லை என்ற நிலையில் கதை நின்றுகொள்கிறது, மறுக்கமுடியாத உண்மையும் கூட.

கதையில் மிகச் சரியாக கையாளப்பட்ட தகவல்களில் ஜெகதீஷின் கூர்மை நிச்சயம் இருந்தது. தேவையான அளவுக்கு மட்டுமே உவமைகள். சகாயத்தின் தோற்றத்தையும் பற்களையும் விவரித்ததை எடுத்துக்காட்டாக சொல்லலாம். விரும்பிய களத்தை சரியாகவே சொல்லிவிட்டீர்கள் என்றும் தோன்றியது.

ஒவ்வொரு கதைக்கும் அதற்கே உரிய தர்க்கங்கள் உள்ளன, அந்த தர்க்கம் கோரும் மொழியும் பின்ணணியும் வாழ்வியலும் உள்ளது என்பதைப் புரிந்துகொள்கிறேன்.

கதையை ஒரு குறளோடு தொடங்கியது நன்றாக இருந்தது. சிறுகதையின் முதல் பத்தியை கதைகள் எழுத விரும்புபவனாக கூர்ந்து கவனித்தேன், புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் எனக்குள் உள்ள வாசகனை அந்த முதல் பத்தி சற்று ஏமாற்றமே அடையச் செய்தது. இதை நீங்கள் பிரக்ஞையோடு திட்டமிட்டிருப்பீர்கள் என்றும் தெரியும். கதைக்கு இது தேவை என்றும் நீங்கள் எண்ண நியாங்கள் உள்ளன.

சிறுகதையை வாசித்து முடித்ததும் நமக்குள் தோன்றும் எண்ணங்களை நான் ஏற்றும் மறுத்தும் ஆன ஒரு நிலையில் வைக்கிறேன். ஏற்பு நமக்குள் இருக்கும் வாசகனின் மேல் உள்ள நம்பிக்கை, மறுப்பு அந்த வாசகனுக்கு அறியாத நுணுக்கங்கள் கதைக்குள் இருப்பதற்கான வாய்ப்பு சார்ந்தது.

இந்தக் கதை ஜெகதீஷின் ஆகச் சிறந்த ஆக்கமா? நிச்சயமாக இல்லை. ‘நிமித்தமும்’  ‘பொற்குகை இரகசியமும்’ அளித்த சிலிர்ப்பை இந்தக் கதை எனக்கு தரவில்லை. கதையை வாசித்ததும் இந்த எண்ணமே எழுந்தது. கதையின் கரு ஏனோ என்னை ஈர்க்கவில்லை. இந்த எண்ணம் பிறகு மாறலாம். ஆனால் உங்கள் கதைகளை என்றும் தொடர்பவனாக இதை உரிமையாகவே சொல்கிறேன். எனக்குள் இருக்கும் பேராசைக்கார வாசகன் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறான், வேறொன்றுமில்லை. Sometimes we are too good, which can be detrimental to our own benefit.

நம்முடைய குழுவில் கதைகளை நீங்கள் குறிப்பிட்டதைப் போல பெரும்பாலானவர்கள் வாசிக்கிறார்கள். உங்களுடைய முந்தைய கதைகளுக்கு இத்தகைய வாசிப்பு சூழல் அமையவில்லை என்பதை நன்றாக புரிந்துவைத்திருக்கிறேன், இப்போது மாறிவிட்டது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று குழுவில் கதைகள் எழுதுபவர்களுக்கு தொடக்கமாக இருந்தது நீங்கள்தான். நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறேன்.

என்னடா ரெண்டு கதைகளை எழுதிவிட்டு இப்படி நேரடியாக சொல்கிறானே என்று எண்ணவேண்டாம், அப்படி எண்ண மாட்டீர்கள் என்றும் தெரியும். என்னுடைய இரண்டாவது கதை (இருபது ரூபாய்) அத்தனை ஒன்றும் உயர்ந்த ஆக்கமல்ல என்பதை எழுதி முடித்தவுடன் தெரிந்துகொண்டேன். கதையை வெளியே அனுப்பவேண்டாம் என்றுதான் எண்ணினேன், மதனும் சங்கரும் அத்தனை மோசமல்ல என்று சொன்னதால் பகிர்ந்தேன். ஏனோ இதைச் சொல்லிவிடவேண்டும் என்று தோன்றியது, பகிர்கிறேன்.

உங்களுடைய அடுத்த ஆக்கங்களையும் இதே ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய ஆக்கங்களை நீங்கள் ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறீர்கள். அவ்வப்போது அதன் போதாமைகளையும் முன்னர் சொன்னீர்கள், இனியும் அதையே எதிர்பார்க்கிறேன், தயங்கவேண்டாம்.

கடைசியாக ஒன்று, இந்தக் கதை ஒரு இலக்கிய ஆக்கமா? ஆம், அதில் எனக்கு சந்தேகமே இல்லை. வாழ்த்துக்கள் ஜெகதீஷ்.

பாலாஜி ராஜூ

விவேக் சுப்ரமணியன்

Ulnindru Udatrum: Story employs archetypal patterns to examine societal treatment of women through the parallel journeys of two men Inspector Parthiban and the murderer Sahayam. The narrative begins with subtle foreshadowing: "That Friday would bring him a severe headache, but Inspector Parthiban didn't know it yet." This ordinary morning, when local merchants typically bring "gifts" to the police station, establishes Parthiban's participation in systemic corruption before revealing his domestic life.

Story employs manifests psychological Shadow archetype through both explicit and implicit violence. In Parthiban's breakfast, we witness the psychological precursors to abuse. Momentary violent throwing break fast plates, impulse reveals the Shadow lurking beneath his official position. These private thoughts gain significance when juxtaposed with Sahayam's case, a man whose Shadow manifested in lethal violence. As Radhakrishnan explains, "The post-mortem showed her internal organs were damaged from beatings." The progression from Parthiban's violent fantasies to Sahayam's murderous reality creates a disturbing continuum of masculine aggression.

The narrative transitions from individual psychology to collective consciousness through the introduction of Isakki Amman. This deity functions as what  termed the Great Mother archetype, containing dual aspects:

1. The Nurturing Mother: Mukundhan's recounting establishes her compassionate origin as Ambika, who "took food meant for an ancestral ritual and served it to a hungry ascetic"

2. The Terrible Mother: Following abuse by her husband, she transforms into a vengeful yakshini who "took revenge on that same husband over seven lifetimes"

Parthiban's character development demonstrates the concept of individuation, the integration of unconscious elements into consciousness. After his wife and daughter disappear, his perception of women transforms: "Gleaming, blooming faces. Laughing eyes. Bodies radiating compassion and tenderness." Most significantly, "All of them appeared to Parthiban as forms of Isakki Amman," representing his emerging recognition of feminine divinity in ordinary women.

Through Radhakrishnan's poignant question "Why are all goddesses fierce? Perhaps these goddess deities are vehicles for women to express their anger toward us?" the narrative suggests that mythological structures reflect collective psychological patterns. The Vimochana women's group represents institutional attempts to address violence, while Isakki Amman addresses the deeper archetypal forces that both perpetuate and potentially transform such violence.

This sophisticated narrative demonstrates how literature can employ archetypes to illuminate the psychological foundations of gender(or any form of) violence, suggesting that lasting change requires not merely legal frameworks but a profound confrontation with the collective unconscious patterns that normalize abuse.

Parthiban's character development shows a gradual awakening to his Anima (the feminine aspect within the masculine psyche) at the end of the story.

Vivek Subramaniyan.



Vijay Rangarajan

உள்நின்று உடற்றும்

- ஜெகதீஷ் குமார்


கதை மிக யதார்த்தமாக மொழியில் நேர்காலத்தில் அழகாக எழுதப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக தலித் ஆய்வாளர்கள் மூலம் நமக்கு மேலும்மேலும் தெரியவரும் சித்திரம் அறக்குற்றத்தால் கொல்லப்படும் பெண்கள் கிராம தெய்வங்களாக ஆக்கப்படுவது. அந்த ஒரு இழை இந்தக்கதையில் அழகாக பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு ஆண் மற்றவர்களைச் சமமாக நடத்துவதற்கு உலகமே அவனுக்கு கோடிட்டுக்காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று காட்டுகிறது. "The Torment Within." யாருக்கு உள் நின்று உடற்றுகிறது ஆதிக்கப்பசி? ஒவ்வொரு ஆணுக்குள்ளா? ஒவ்வொரு சமூகத்திற்குள்ளா? அல்லது பெண்கள் தங்களுக்குள்ளேயே அரைத்துச் செரித்துக்கொண்டிருக்கும் ஏதோவொரு துன்பப்பசியா?

Vijay Rangarajan.




“உள் நின்று உடற்றும்”


மேலும் வாசிக்க