கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ - என் பார்வை


 

கரிப்பு - சிறுகதை, பாலாஜி ராஜூ

அன்புள்ள பாலாஜி,

கதை மிகவும் நன்றாக வந்திருக்கிறது. எனக்குத் தெரிந்து எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்க இயலவில்லை. மொழி நன்றாக கைகூடி வந்திருக்கிறது. உங்கள் ஊர் சூழ்நிலையை அப்படியே கண்முன் வரைந்து காட்டியிருக்கிறீர்கள். நவீனத்துவ பாணியில் எழுதப்பட்ட கதையைப் போல் தெரிகிறது. இதைப் பாராட்டாகவே சொல்கிறேன். கதையின் ஒவ்வொரு பகுதியிலும் முழுமை கூடியிருக்கிறது. கிணற்றை ஒரு படிமமாக மாற்ற நீங்கள் எந்த சிரத்தையும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தது நல்லது. எனவே கிணறு இயல்பாகவே படிமமாகி விட்டிருக்கிறது. ஊரின் மக்களும், அவர்களது வாழ்வியலும் அழகாக, நேர்த்தியாக, அவற்றுக்கான தனித்துவம் மிக்க சொற்களுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாசிக்க மிகச் சுகமாக இருந்தது. லாரி ஓட்டும் மலையாளிகள் குளிக்கும் உப்புத்தண்ணிக் கிணறு அவர்களைக் காவு வாங்கி விடுவதைக் கதையாக்கி இருப்பது சிறுகதை வடிவம் குறித்த உங்களது போதத்தைக் காட்டுகிறது.

நேரடியாகக் கதை சொல்லல் முறையைக் கையாண்டிருக்கிறீர்கள். உண்மையில் இப்படிச் சொல்வதுதான் கடினம். எனக்கு எந்தக் குறையும் கண்ணில் படவில்லை. இது ஆகச் சிறந்த கதையா என்பதில் மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இது தனித்துவம் மிக்க கதை என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை