நீலத்தழல் - சிறுகதை - அரூ அறிபுனைகதைப் போட்டியில்




ஒரு கதை வைத்திருந்தேன். அதில் கொஞ்சம் அறிவியல் இருந்தது. நண்பர் விஸ்வனாதன் மகாலிங்கம் அரூ இதழுக்கு அறிபுனை கதைப் போட்டிக்குக் கதை அனுப்பும்படி அறிவுறுத்தினார். இது அறிவியல் புனைகதை என்ற வகைமைக்குள் வருமா என்ற ஐயத்தோடுதான் அனுப்பினேன். அவர்களும் அவ்வாறே நினைத்திருக்கிறார்கள். சிறப்பாகக் குறிப்பிட்ட இருகதைகளில் ஒன்றாக இக்கதையை ஒரு குறிப்புடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

 கீழே வருவது அவர்கள் தந்த குறிப்பு.

‘நீலத்தழல்’ நேர்த்தியாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள கதை. ஆனால், இக்கதையில் நிதர்சனமான அறிவியல் இருக்கின்றதே தவிர, அறிவியல் ஊகம் இல்லை, புதிய அறிவியல் கற்பனை இல்லை. ஆகவே அறிவியல் புனைவு என்கிற வகைமைக்குள் வராது. ஆனாலும் இக்கதையை குறிப்பிடத்தகுந்த கதையாக வெளியிடுவதற்குக் காரணம் அறிவியலை வெறும் கோட்பாடுகளாகவும் கருதுகோள்களாகவும் பட்டியலிடாமல், ஒரு வாழ்வனுபவமாக சித்தரித்துள்ளார் ஜெகதீஷ் குமார். உயிரொளி உமிழ்வு (bioluminescence) எனும் அறிவியல் கருதுகோளை ஒரு கட்டுரையாகப் படிக்கலாம், ஆவணப்படமாகப் பார்க்கலாம். ஆனால் இப்படி ஒரு புனைவாகப் படிக்கும்போது அது நமது உடலுக்குள் இறங்கிச்சென்று, ஏதோ ஒரு தசைமடிப்பிற்குள் அமர்ந்துகொள்கிறது. தமிழில் நிறைய கதைகள் இப்படி எழுதப்பட வேண்டுமென நினைக்கிறோம்.

கதையை அரூ இதழில் வாசிக்க


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை