சாதன சதுஷ்டயம் - 3


ஷமாதி ஷட்க ஸம்பத்தி:
ஷமம்
ஷமம் என்ற சொல்லுக்கு மன அமைதி அல்லது மன ஒடுக்கம் என்று பொருள்.
ஞானத்தை அடையும் பிரதானமான கருவி மனம். மனம் ஒரு கருவி. அது என்றுமே கர்த்தாவின் கையில்தான் இருக்க வேண்டும். புத்திதான் கர்த்தா. மனம் கருவி. புத்தியின் சொல்படி மனம் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும். பதிவுகளை எடுத்துக் கொண்டு சதா சஞ்சலப்படும் மனம் ஞானத்துக்குரிய கருவி அல்ல.

எந்த சாதனைகளை மேற்கொண்டு மனதை நம் வசப்படுத்த முடியும்?
வைராக்யம்
அடுத்த சாதனையான தமம்.
மனதை ஒழுங்குபடுத்த கீதையில் பகவான் வைராக்யம், அப்யாஸம் என்ற இருவித உபாயங்களைக் கொடுக்கிறார்.
நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், தீய பண்புகளை நீக்குதல்.
வாய்மை என்னும் குணம் மனதை அமைதிப்படுத்தும்.
தேவையற்றவைகளை நினைக்காதே என்று மனதுக்கு ஆர்டர் போட வேண்டும்.
த்யானம், ஜெபம் பழகுதல்.


மனதை அமைதிப்படுத்துவதால் கிடைக்கும் பலன் என்ன?
வைராக்யத்தை அதிகப்படுத்தும்.
இந்திரியக் கட்டுப்பாடு வரும்.
ஞானயோகம் மனதைக் கொண்டு செய்யும் ஒரு சாதனை. எனவே மன அமைதி ஞானயோகத்துக்குத் துணை செய்யும்.
மன அமைதியே ஒரு பலன்.
ஷமம் தமம் போன்ற குணங்கள் ஒன்றுக்கொன்று உதவி செய்யும். இதற்கு அந்யோன்ய ஆஸ்ர: என்று பெயர்.

தமம்
இந்திரிய ஒழுக்கம் அல்லது புலன் அடக்கம்.
குறிப்பாக ஞானேந்திரியங்களான கண், காது, நாக்கு முதலியவற்றை நன்முறையில் பயன்படுத்துதல்.
உடலின் ஆரோக்யம் உணவைச் சார்ந்தது. மனதின் ஆரோக்யம் ஐம்புலன்கள் மூலம் எந்த விஷயத்தை மனத்துக்கு கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தது.
உடலுக்கு ஒரு வாய். மனதுக்குப் பத்து வாய்கள். எனவே மனதுக்குத் தேவையற்ற விஷயங்களைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
புத்தர் நடக்கும் விதத்தைப் பற்றி வர்ணிக்கும் பொழுது,
அலோல சக்ஷு: யுக மாத்ர தர்ஸி என்று சொல்லப் படுகிறது.
அதாவது, அவர் அசையாத கண்களுடண், எவ்வளவு தூரம் பார்க்க வேண்டுமோ அவ்வளவு தூரம் மட்டுமே பார்த்துக் கொண்டு நடப்பாராம்.

எந்த உபாயங்களின் மூலம் தமத்தை வளர்த்துக் கொள்ள முடியும்?
ஓரிடத்தில் இருந்து பழுகுதல். எடுத்துக்காட்டாக, அதிகம் பேசுவது நம் பலவீனமெனில் வாரத்தில் ஒருநாள் மௌனம் காத்தல்.
விரத ரூபமாக ஸ்ங்கல்பத்தை மேற்கொள்ளுதல்.
புலன்களுக்கு நூறு சதவீதம் சுதந்திரம் கொடுக்காமலிருத்தல்.
எந்தச் சூழ்நிலையில் இருந்தால் கட்டுப்பாட்டை இழப்போமோ அந்தச் சூழ்நிலையில் இருந்து விலகி இருத்தல்.
சத்சங்கம் மற்றும் துர்சங்கத் தியாகம்.


தமத்தின் பலன்கள் யாவை?
இந்திரிய சக்தி – புலன்கள் சக்தியுடன் இருக்கும்.
ஷமத்தை வளர்க்க மிகவும் உதவும்.
குருசேவை போன்றவற்றில் ஈடுபட முடியும்.

உபரமம்
ஷமம், தமம் முதலியவற்றைத் தொடர்ந்து செய்தல், தேவையற்றதிலிருந்து விலகி நம்கடமைகளை மட்டும் செய்தல் (ஸ்வதர்ம அனுஷ்டானம்) முதலியன உபரமம் எனப்படும்.

உபரமத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து ஷம, தமத்தை மேற்கொள்ள வேண்டும்.


உபரமத்தை அடைவதன் பலன் என்ன?
ஷம, தமம் நமக்குள் நிற்கும்.
ஸ்ரவணத்துக்கு உதவும்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை