சாதன சதுஷ்டயம் - 5



ஸமாதானம்
மன ஒருமுகப்பாடு. சித்தஸ்ய ஸ்தைர்யம். ஏகாக்ர:
யோக சாஸ்திரம் இதையே ஸமாதி: என்கிறது.
தியானிக்க வேண்டிய பொருளில் இருக்க வேண்டிய மன ஒருமுகப்பாடே ஸமாதானம் எனப்படுகிறது.

ஸமாதானத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
1. வைராக்யம் அதிகரித்தல் வேண்டும்.
2. முமுக்ஷுத்வம் – அடைய விரும்பும் பொருளில் ஆர்வம்.
3. அப்யாஸம் – மனதை ஒருமுகப்படுத்தி தொடர்ந்து பயிற்சி செய்தல். தியானப் பயிற்சி.
4. த்ருதி: - உறுதி. உறுதியாக இருந்து பழகுதல். செய்ய வேண்டும் என்று முடிவு செய்த
விஷயங்களை உறுதியோடு நின்று செய்து முடிக்க வேண்டும்.

ஸமாதானத்தை அடைவதன் பலன் என்ன?
1. மனோ பலம் – மோஹம் (குழப்பம்) என்ற எதிரியிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்.
2. ஸ்ரவண நிஷ்டா – சாஸ்திரத்தை முழுமையாகக் கூர்ந்து கேட்போம்.



முமுக்ஷுத்வம்

மோக்ஷம் வேண்டும் என்கிற தீவிர ஆசை. தீவிர இச்சா. இச்சை என்றாலே நம்மைச்
செயலில் தூண்டும் அளவுக்கு வளர்ந்த ஆசை என்று அர்த்தம்.
ஜானாதி – ஆசைப்படுதல் – செயல்படுதல்
அறிதல் – இச்சதி – யததே.
முமுக்ஷுத்வத்தின் இருபடிகள்
1. மோக்ஷத்தை அடையும் ஆசை.
2. மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொள்ளல்.
மோக்ஷத்தைஅடையும் பாதையைக் கண்டு கொண்டவனுக்கு ஜிக்ஞாஸு என்று பெயர்.
ஜிக்ஞாஸு என்றால் ஞாதும் இச்சும் – கண்டு கொண்டதை அறிய வேண்டும் என்பதில் உள்ள ஆவல்.
முமுக்ஷுத்வத்தை அடைவதற்கான உபாயம் என்ன?
1. விவேகம் – அநித்யத்தின் மீது வைராக்யமும், நித்யத்தின் மீது ஆசையும் வளர்த்தல்.
2. கர்ம யோகம் – மேலான பொருள் மீது ஆசை வர சித்த சுத்தி வேண்டும். அதற்குக் கர்ம யோகம் பழக வேண்டும்.

முமுக்ஷுத்வத்தை அடைவதன் பலன் என்ன?
1. ஸ்ரவண சித்தி:
2. தடைகள் நீங்கி முன்னேறும் சக்தி கிடைக்கும்.
3. பிற அனைத்து சாதனைகளையும் பின்பற்றுவது எளிதாகும்.

ஓம் பூர்ணமதப் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவஷிஷ்யதே

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை