கடவுள் அறிதல்
தேர்வில் மதிப்பெண் வர
பிள்ளையார் முன்
தேங்காய் உடைத்ததுண்டு.
படக்கதைகள் படித்து
சக்தி மிக்கவர்
விஷ்ணுவா விநாயகரா ஒப்பிட்டதுண்டு.
கல்விக்கண் திறந்ததால்
கடவுளர் பலரல்ல ஒன்றெண்டு தேர்ந்ததுண்டு.
கர்த்தர் முன் மண்டியிட்டு
கண் மூடிக்கதறியதுண்டு.
கால் முட்டி தேய்ந்ததுண்டு.
நீயே கடவுள் உன்னை உணர்
ஆன்மாவை அனுபவி அத்தனையும் தெளிவாகும்
குண்டலினி துளைத்தால் மண்டைக்குள் ஏதோ மலரும்.
யாராரோ சொல்லியதை எனதென்று ஏற்றதுண்டு.
கடவுள் உலகம் எல்லாம் கற்பனை
இருப்பது சூன்யம் ஒன்று மட்டுமே
என்றான் புத்தன் திகைத்தேன்
சூன்யம் பார்க்கிற ஆள் யாரப்பா?
சூன்யம் மறைந்தால் அவனும் மறைவானோ?
பிள்ளையார் முன்
தேங்காய் உடைத்ததுண்டு.
படக்கதைகள் படித்து
சக்தி மிக்கவர்
விஷ்ணுவா விநாயகரா ஒப்பிட்டதுண்டு.
கல்விக்கண் திறந்ததால்
கடவுளர் பலரல்ல ஒன்றெண்டு தேர்ந்ததுண்டு.
கர்த்தர் முன் மண்டியிட்டு
கண் மூடிக்கதறியதுண்டு.
கால் முட்டி தேய்ந்ததுண்டு.
நீயே கடவுள் உன்னை உணர்
ஆன்மாவை அனுபவி அத்தனையும் தெளிவாகும்
குண்டலினி துளைத்தால் மண்டைக்குள் ஏதோ மலரும்.
யாராரோ சொல்லியதை எனதென்று ஏற்றதுண்டு.
கடவுள் உலகம் எல்லாம் கற்பனை
இருப்பது சூன்யம் ஒன்று மட்டுமே
என்றான் புத்தன் திகைத்தேன்
சூன்யம் பார்க்கிற ஆள் யாரப்பா?
சூன்யம் மறைந்தால் அவனும் மறைவானோ?
Comments
Post a Comment