சாதன சதுஷ்டயம் - 4


திதிக்ஷா
திதிக்ஷா என்ற சொல்லுக்குப் பொருத்துக் கொள்ளுதல், சகித்துக் கொள்ளுதல் என்றுபொருள். த்வந்த்வ ஸ்ஹிஷ்னுத்துவம் அதாவது, குளிர், வெப்பம், மானம், அவமானம் போன்ற எதிரெதிர் அனுபவங்களான இருமைகளை சகித்துக் கொள்ளுதல்.
அசிந்தயா சஹனம் – acceptance. மனதளவில் குறை சொல்லாமல் எதையும் செய்தல்.
துன்பம் வரும்போது அதை நீக்க முழு முயற்சி செய்ய வேண்டும். அதை நீக்கும் போதும் அதன் பின்னரும் பொறுமையாக இருக்க வேண்டும்.

திதிக்ஷாவை அடைவதற்கான உபாயம் என்ன?
பொறுமையைப் பழகியே பொறுமையாக இருக்க வேண்டும்.
எதை மாற்ற முடியாது என்று தெரிகிறதோ அதைப் பொறுத்துக் கொள்ளும் அறிவைப் பழக வேண்டும். மாற்ற முடியுமெனில் அதை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
மாற்ற முடியாத துன்பங்களை தவமாகப் பாவித்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நம் பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். கஷ்டத்தை தாங்கும் சக்தியுடையவனே பலமுள்ளவன். நாயமாத்மா பலஹீனேன லப்யதே – இந்த ஆத்மா பலவீனர்களால் அடையப்படுவதில்லை என்று கீதையில் பகவான் கூறுகிறார்.
முமுக்ஷுத்வம் – மோக்ஷத்தை அடையும் விருப்பத்தை அதிகப்படுத்திக் கொள்ளுதல்.
உபேக்ஷா – indifference கஷ்டத்தைக் கொள்ளாமல் இருத்தல்.
வரும் துன்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பரிகாரம் செய்தல் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அந்தப் பரிகாரங்களையே பரிகாரம் செய்ய வேண்டும்.

திதிக்ஷாவை அடைவதன் பலன் என்ன?
பொறுமையே ஒரு பலன்தான்.
மற்ற சாதனைகளை பொறுமை இருந்தால்தான் செய்ய வேண்டும் - சாதனாந்தர நிஷ்டா
சாதனைகளைப் பின்பற்றுவதற்குண்டான தடைகளை நீக்கும்.
அஹிம்சையைப் பின்பற்ற முடியும்.

ஸ்ரத்தா:
ஸ்ரத்தா என்பதற்கு நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று பொருள்.
எதில் நம்பிக்கை?
குரு வேதாந்த வாக்யேஷூ விஸ்வாஸ: ஸ்ரத்தா
குரு மற்றும் வேதாந்த வாக்யங்களில் நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கையின் அவசியம்
ஏற்கனவே தெரிந்த ஒன்றை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. தெரியாத ஒன்றை அடையும் வரை அதன் மீது நம்பிக்கை வேண்டும்.
ஸ்ரத்தையே ஞானத்தின் முதல் படி.
அறிவு வந்துவிட்டல் ஸ்ரத்தையின் தேவை இல்லை.
ஸ்ரத்தையே ஞானமாகப் பரிமாணம் அடைகிறது. ஸ்ரத்தாவான் லபதே ஞானம் என்கிறது
கீதை. உபநிஷத் விஷயத்தில் ஞானம் ஏற்படும் வரை ஸ்ரத்தை தேவை.
கீதை மூன்று வித ஸ்ரத்தைகளைப் பற்றிக் கூறுகிறது. சாத்விகம், தாமஸம், ராஜஸம்.
இதில் சாத்விக ஸ்ரத்தையே நமக்குத் தேவை.


ஸ்ரத்தையை அடைவதற்கான உபாயம் என்ன?
உபநிஷத் இறைவனின் வார்த்தை என்கிற புத்தி.
குரு ஈஸ்வர வாக்யத்தை எடுத்துச் சொல்கிறார் என்கிற புத்தி.
ஞானத்தின் பலனைப் பார்க்கும் பொழுது ஸ்ரத்தை வரும். எனவே ஞானம் யாரிடம்
உள்ளதோ அவரிடம், குருவிடம் சென்று சேவை செய்யும் போது ஸ்ரத்தை வளரும்.
வினயம் – பணிவு. உடல், சொல் மற்றும் அறிவு அளவில் பணிவைக் கைக்கொள்ள
வேண்டும். திறந்த மனத்துடன் இருக்க வேண்டும்.

ஸ்ரத்தையை அடைவதன் பலன் என்ன?
ஞானத்திற்கு நாம் ஒரு பாத்திரமகின்றோம். பாத்திரம் என்றாலே கீழே விழுவதிலிருந்து காப்பாற்றப் படுதல் என்று அர்த்தம். ஸ்ர்த்தை நிறைந்த மனிதனிடம் அளிக்கப்படும் ஞானம் கீழே விழுந்து வீணாகாது காப்பாற்றப் படுகிறது.
குரு ஒரு சிஷ்யனிடம் சோதனை செய்யும் விஷயம் – ஸ்ரத்தா.
சிஷ்யனிடம் உள்ள ஸ்ரத்தையே குருவைப் பேச வைக்கும்.
சாஸ்திர விசாரம் முடியும் வரை நம்மை ஞானயோகத்தில் ஈடுபடுத்துவதே
ஸ்ரத்தைதான்.
சாஸ்திரம் பலனைக் கொடுக்க வேண்டுமெனில் ஸ்ரத்தை அவசியம்.ப்ரமாண வியாபாரம்.
ஆன்மிக வாழ்விற்கு மட்டுமல்ல, சாதாரண வாழ்விற்கே நம்பிக்கை அவசியம்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை