8 நவம்பர், 2025

வானப்ரஸ்தம் -என் புதிய சிறுகதை தினமணி தீபாவளி மலரில்




என்னுடைய புதிய சிறுகதை தினமணி தீபாவளி மலரில் வெளிவந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இதழின் ஆசிரியர் பாவைசந்திரன் தொடர்பு கொண்டு மலருக்கு ஒரு சிறுகதை வேண்டும் என்று கேட்டார். மூன்றே நாட்கள்தான் அவகாசம். நான் சிறுகதை எழுத குறைந்தது பதினைந்து நாட்களாவது எடுத்துக் கொள்வேன். வந்த வாய்ப்பை விட முடியுமா? எழுத ஆரம்பித்து இரண்டு நாட்களில் கதையை முடித்து விட்டேன். ஒரு நாள் முழுக்க திருத்தங்கள் செய்தேன். அனு வாசித்து விட்டு நன்றாக வந்திருப்பதாகச் சொன்னாள். அது போதுமெனக்கு. தலைப்பு வைப்பதில் எனக்கு எப்போதுமே தடுமாற்றம்தான். அதற்கு எப்போதுமே அனுவிடம்தான் சரணடைவேன். அவள் தந்த தலைப்புதான் “வானப்ரஸ்தம்.” முதலில் எனக்கு இந்தத் தலைப்பு வைக்க தயக்கமிருந்தது. அந்தத் தலைப்பின் பொருத்தம் குறித்து அனு விளக்கியபின் சமாதானமானேன். 

கதை ஓவியர் மணியம் செல்வனின் அற்புதமான ஓவியங்களுடன் வெளிவந்திருக்கிறது. சிறுவயதில் என் ஹீரோ அவர். அவர் மாதிரி ஓவியம் வரைய முயன்றிருக்கிறேன். அவர் என் கதைக்கு ஓவியம் வரைந்ததை ஓர் ஆசியாகவே கொள்கிறேன்.

தீபாவளிமலர் ஈரோடு, பவானி, கோயம்புத்தூர் என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பாவைசந்திரனைத் தொடர்பு கொண்டபோது ஏஜண்டுகளிடம் முன்பதிவு செய்து மட்டுமே வாங்கமுடியும் என்று சொன்னார். அவரே என் வீட்டுக்கு ஒரு மலரை அனுப்பி வைப்பதாகச் சொன்னார். கதையின் ஒளிப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்.

சிறுகதையின் தத்துவத்தைக் கையாள்வது சற்று கடினம். ஏற்கனவே ஒன்றிரண்டு கதைகளில் முயன்றிருக்கிறேன். இக்கதையிலும்.

மேலும் வாசிக்க