புத்தாண்டு வாழ்த்துக்கள்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு பிறக்கையில் நிறைவேற வேண்டும் என்று நான் நினைக்கிற சில நப்பாசைகள்.
வரும் 2012 ஆண்டு வளங்களையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.
உலகில் வன்முறையும், வறுமையும் சூதும், நம்பிக்கைத் துரோகமும், ஏமாற்றும் இல்லாதொழியட்டும்.
தெருக்களிலும், பேருந்து, ரயில் வண்டிகளிலும் பிச்சையெடுக்கிற, தெருக்களில் வித்தைகாட்டிப் பிழைக்கும் குழந்தைகளுக்கும், ஓட்டல்களில் தேநீர் பரிமாறும், எச்சில் இலையெடுக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்.
நாட்டில் வாங்குகிற காசுக்கு சுத்தமான கழிப்பறைகள் அமைக்கப்படட்டும். என் சகோதர இந்தியன் சாலையோரம் எச்சில் துப்பாமலும், சிறுநீர் கழிக்காமலும் இருக்கட்டும்.
நதி நீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டையிடும் தமிழன், தன் மாநிலத்துள் பயணிக்கும் நதிகளில் கழிவு நீரைக் கலக்கி நாசம் செய்யாமலிருக்கட்டும்.
விவசாய நிலங்களும், விவசாயமும், விவசாய நிலங்களும் சிதைக்கப்பட்டு விடாமல் காப்பாற்றப்படட்டும்.
பெண்ணுக்கு அவள் வாழ்வை வாழும் சுதந்திரம் கிடைக்கட்டும்.
இன்னும் பல விருப்பங்கள். அனைத்தும் நிறைவேற மஹாவிஷ்ணு இன்னோர் அவதாரம் எடுக்க வேண்டும் போல.
மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை