சு. வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்


காவல் கோட்டம் நாவலுக்காக சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது.
சமீபமாக தமிழில் பொருத்தமான இலக்கியவாதிகளுக்கு இவ்விருது சென்றடைவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
விருதுப்பணம் ஒரு லட்சம் என்பது மிகக்குறைவு. பத்து லட்சமாவது கொடுக்கலாம். செம்மொழித் தகுதி பெற்ற மொழியில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளனை இன்னும் நன்முறையில் அங்கீகரிக்க வேண்டும்.
காவல் கோட்டம் இன்னு வாசிக்கவில்லை. வாங்கவும் இல்லை. வாங்க வேண்டும் என்று மனதோரம் இருக்கிற ஒரு பட்டியலில் காவல் கோட்டம், கொற்கை, ஆழிசூழ் உலகு மூன்றும் இருக்கின்றன.
சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் எஸ்.ரா வின் கடுமையான நிராகரிப்புக்கிடையிலும் இலக்கிய உலகில் ஒரு முக்கிய இடத்தை ஏற்கனவே பிடித்து விட்டது. இப்போது சாகித்ய அகாதமி அந்த இடத்தை அங்கீகரித்திருக்கிறது.
தமிழில் இது போன்ற படைப்புகளை தொடர்ந்து சாகித்ய அகாதமி கவனிப்பதன் மூலம், தமிழ்ப் படைப்பாளிகள் பிற இந்திய மொழிகளைச் சென்றடையும்  வாய்ப்பு அதிகரிக்கிறது,
சு. வெங்கடேசன் மேலும் அரிய படைப்புகளைத் தமிழுக்குத் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை