சற்குணம் என்ற அசல் கலைஞன்

             சமீபத்தில் மூன்று  தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன். எங்கேயும் எப்போதும், தெய்வத் திருமகள் மற்றும் வாகை சூட வா. ஆச்சரியமூட்டும் வகையில் அதில் இரண்டு படங்கள் நல்ல கருத்துக்களைச் சொல்லும் லேசான பிரசார தொனி கொண்ட கதைகளைச் சொல்பவை. எங்கேயும் எப்போதும் பேருந்து விபத்து ஒன்றை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. பேருந்தில் பயணம் செய்பவர்களையும் அவர்களது பின்புலத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களோடு நமக்கு உணர்வு பூர்வமானதொரு உறவை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர். பிரதான கதை மாந்தர்கள் மட்டுமின்றி விபத்துக்குள்ளாகும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுமே மனதில் நன்கு பதிந்து விடுகின்றனர். ஜெய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த போலித் தோரணைகளுமின்றி இயல்பாக நடிக்கக் கூடியவர். ஒரு சராசரி குறு நகரத்து இளைஞனை நினைவு படுத்தும் தோற்றம் கொண்டவர். அவரது உரையாடல் வெளிப்பாடு தனித்துவமும், எளிமையும் கொண்டது. அஞ்சலியும் அப்படியே. தமிழ்த் திரைக்கதாநாயகிகளில் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி. இன்னொரு ஜோடியாக வரும் ஆனந்யாவும், ஸ்ரவனும் (தெலுங்கு)  அருமையாக நடித்துள்ளனர். படம் முடியும் போது இதயம் கனமாகிறது. படம் குறித்தும், சாலைப் பாதுகாப்பில் நம் பொறுப்பற்ற தன்மை குறித்தும் நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது. லோன்லி பிளானெட் என்கிற பயண வழிகாட்டி நூலில் இந்தியா செல்லும் போது பேருந்துப் பயணங்களைத் தவிர்த்து ரயில் பயணங்களையே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது
                     வாகை சூட வாவின் இயக்குனர் சற்குணம் முதல் படத்திலயே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான இயக்குநராகி விட்டார். களவாணியையை இன்ச் இஞ்சாக ரசித்துப் பார்த்தேன்.விமலும் அவரது சகாக்களும் அடிக்கும் கூத்துக்கள் எனக்கு என் பிளஸ் டூ நாட்களை நினைவு படுத்தியது. புதுக்கோட்டை தஞ்சாவூர் அரியலூர் மாவட்டங்களின் மக்கள் வாழ்க்கையையும், மொழியையும் அற்புதமாகப் பதிவு செய்கிறவராக இருக்கிறார் சற்குணம். களவாணி திரைப்படம் வெறும் பொழுதுபோக்குப் படமாக  மட்டுமே வகைப்படுத்தப் பட்டதிலும், அந்தப் படம் அதிக கவனிக்கப்படாமல் போனதிலும் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்

                 வாகை சூடாவாவிலும் தன அழுததமான முத்திரையைப் பதித்துள்ளார்.  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் நிகழும் கதை. செங்கல் சூளையில்  கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. கல்வி விழிப்புணர்வுப் பிரச்சார திரைப்படமாகவே இந்த திரைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

                     வாகை சூடாவாவிலும்  தன் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டையில் நிகழும் கதை. செங்கல் சூளையில் கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. விமல் இந்தப் படத்திலும் இயல்பாக நடித்திருக்கிறார்கதாநாயகி கேரளத்து அழகி. ஆனால் தமிழ் முகம். கிராமத்துக் களை. டூ நாலெட்டு, நொண்டி மணி, வைத்தியர், குருவி சாமியார் என்று கதா பாத்திரங்கள் உண்மையின் பிரதிகளாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன

         டூ நாலெட்டு போடும் எளிய புதிர்க் கணக்குக்கு விடை தெரியாமல் விழிக்கிறார் விமல். இந்தக் கணக்கையையே அவுக்கத் தெரியல நீ எங்க புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போற என்று கிண்டலடிகிறார்கள் கிராமத்தார்அந்தக் கிராமத்தில் மூன்று மாதம் வேலை செய்தால் கிடைக்கும் சான்றிதழின் மூலம் தனக்கு அரசு வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில்,கிராமத்தார் புறக்கணிப்பையும் , சிறுவர்களின் சதிவேலைகளையும் , தினமும் சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நாயகியின் காதல் பார்வையையும் சமாளித்துக் கொண்டு காத்திருக்கிறான் நாயகன். ஆண்டையால் அவ்வூர் மக்கள் சுரண்டப்படுவது அறிய வரும் போது தன் உண்மையான பணி என்ன என்பதை அறிகிறான்.

                செங்க மண்ணு தின்னும் பசங்கள், முட்ட வரும் ஆட்டை மறித்து நீ என்ன புலியா என்று கேட்டு புளி கொடுத்து ஆட்டை மடக்கும் சிறுவர்கள், குருவி சத்தம் கேட்குது என்று சொல்லித் திரியும், அவ்வூர் மக்களுக்குத் தெய்வமெனத் திகழும் அழுக்கு சாமியார், நான் பேச நினைப்பதெல்லாம் பாடல்  வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் அதனருகே மயங்கி நிற்கும் நாயகி எல்லாமே மனதின் அழியாத சித்திரங்கள்.
அறுபதுகளைக் கண் முன் காட்ட மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறார் சற்குணம். காபி கோட்டை அரைக்கும் எந்திரம், சைக்கிளின் முகப்பில் மாட்ட விடும் மண்ணெண்ணெய் விளக்கு, அதிகாரமும் பிலுக்களுமாய்ப் பேசும் போஸ்ட் உமன், முழங்கால் வரை தொங்கும் சிலிட் வைத்த முழுக்கை சட்டை, செங்கல் ஆர்டர் தருபவர் அணிந்திருக்கும் பாரதியார் பாணி உடை எல்லாமே இதற்கு ஆதாரங்கள். செங்கல் சூளை கிராமம் மட்டும் செட்  போட்டதைப் போல தெரிகிறது. ஆனால் நான் இதற்கு முன் இப்படிப் பட்ட இடங்களைப் பார்த்ததில்லை என்பதால் பெனபிட் ஆப் டவுட்டை சற்குணத்துக்கு வழங்குகிறேன்

                 இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்று கேள்விப்பட்டேன்.நல்ல திரைப்படங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு, தெய்வதிருமகள் போன்ற போலிகள் ஊதிப் பெரிதாக்கப்பட்டு மக்களால் கவனிக்கப்படும் நிலை தொடரும் வரை சற்குணம் போன்ற அசலான கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஹாலிவுட் படங்களின் கதைகளைத் திருடி, அதைத் தமிழ் சினிமாவுக்கேற்ற வகையில் சொதப்பலாக மாற்றி, தானே கதையை எழுதியதாக பெருமையடித்துக் கொள்ளும் விஜய் போன்ற அரைவேக்காட்டு மொக்கை இயக்குனர்கள் வன்மையாக நிராகரிக்கப் படவேண்டும்.

           தெய்வத் திருமகள் ஒரு ஆங்கிலப் படத்தின் பிரதி என்கிறார்கள். எனக்கு படம் பார்த்து முடித்தபின் எரிச்சலாக இருந்தது. விக்ரம் கமல்ஹாசன் போலாகி விட்டார். ராவணன் படத்தின் ஓவர் ஆக்டிங் இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறது.
  

Comments

  1. >தெய்வத்திருமகளும் நல்ல திரைபடம் தான். அறிவு பூர்வமாக - ஒரு விமர்சகனாக அல்லாமல், ஒரு ரசிகனாக என்னை போன்று உணர்வு பூர்வமாக படத்தை பார்திருந்தீர்கள் என்றால் எரிச்சலை தவிர்த்து சில கண்ணீர் துளிகளால் உங்களது கண்களையும் கன்னங்களையும் கழுவும் பாக்கியம் பெற்றிருந்திருக்கலாம்.

    > காஞ்சனா திரைபடம் பார்த்தீர்களா? படம் SUPERB.
    very very entertaining. விழுந்து விழுந்து வயிறு குலுங்க சிரித்த படம். நான் 3 மூறை தியேட்டரில் பார்த்து ரசித்த படம். படத்தின் நல்ல message திருநங்கைகளின் உணர்வுகளை சொல்லி இருப்பது. இந்த படத்தை பற்றிய உங்களது விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. காஞ்சனா இன்னும் பார்க்கவில்லை.

    தெய்வத்திருமகள் i am sam என்ற ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான, ஆனால் படுமோசமான காப்பி.

    விக்ரம் நடிப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

    படத்தில் எனக்குப் பிடித்தது அனுஷ்கா, சந்தானம் காமெடி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை