வாசகர் அனுபவம் - நீங்களும் பங்களிக்கலாமே!

பாஸ்கர், ராஜா, சம்முவம். மூவரும் வாசகர் அனுபவம் என்ற தளத்தில் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் அற்புதமான சேவையைச் செய்து வருகிறார்கள். சமீபத்தில் என்னையும் அதில் இணைத்துக் கொண்டது எனக்குப் பெருமை. அதோடு அவர்கள் நட்பும் கிடைத்தது நெகிழ்வு. நானும் சில நூல்களை அதில் பரிந்துரைத்திருக்கிறேன். வாசிப்பு ஆர்வம் கொண்ட அனைவரையும் வாசகர் அனுபவம் வரவேற்கிறது. தாங்கள் வாசித்த நூல்களை அதில் நீங்கள் பரிந்துரைக்கலாம். தங்கள் தளத்தில் ஏற்கனவே வெளியிட்டிருந்தாலும் சரி. நல்ல புத்தகங்கள் பரவலான வாககரிடத்துச் சென்றடைய வேண்டும் என்பதே இத்தளத்தின் குறிக்கோள்.
தள முகவரி
தொடர்பு மின்னஞ்சல்
நண்பர்களின் கடிதங்கள்
அன்புள்ள பாஸ்கர், ராஜா, கரிகாலன்
புத்தக பரிந்துரை தவிர்த்து வேறு விஷயங்களையும் என் தளத்தில் எழுத முயன்று வருகிறேன். நேரங்கிடைக்கும்போது நீங்கள் வாசித்துக் கருத்துரைத்தால் மகிழ்வேன்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்.

அன்புள்ள ஜெகதீஷ்,
உங்கள் தளத்தில் ஜாக்கி வாசுதேவ் ஆசிரம அனுபவங்களைப் படித்தேன், ரசித்தேன். தமிழ் உங்களுக்கு லாவகமாய் வருகிறதுமெல்லிய நகையுணர்வோடு உங்கள் அனுபவங்களை தொகுத்தது சுவராசியமான பதிவாக  இருந்தது
அன்புடன்.
சம்முவம்.


அன்புள்ள ஜெகதீஷ்:
உங்கள் வலைதளத்தில் உள்ள பதிவுகளை நான் அடிக்கடி படித்து வருகிறேன்அண்மையில் நீங்கள் எழுதி இருந்த பதிவுகளில், ஜக்கி வாசுதேவ் - ஈஷா, பயிற்ச்சியில் உங்களுடைய அனுபவங்களைப் பற்றி எழுதி இருந்ததை விரும்பிப் படித்தேன்.   உங்களுக்கு மிகவும் சரளமான நடை இருக்கிறதுபடிக்க எளிதாகவும் இருக்கிறது.
எனக்கும் அத்வைதத்தில் கொஞ்சம் ஈடுபாடு உண்டுஎன் புரிதல் மிகவும் மேலானது; அந்தப் புரிதல் வெறும் தர்க்கத்தின் தளத்தில் மட்டுமே உள்ளது, என்று எனக்குத் தெரியும்.   அதைப் பற்றிப் புரிந்து கொள்ளத் தேவையான தியானம், அகத்தாய்வு செய்யும் மனக் கட்டுப்பாடு எனக்கு இதுவரை இல்லை

நீங்கள் எழுதியிருந்ததில் பல கருத்துக்கள் என் மன நிலையை ஒத்தவையேநீங்கள் கூறியிருந்தது போலவே நானும் எந்த குருவும் ஒரு வழிகாட்டியே, என்று தான் நினைக்கிறேன்  ஆற்றைக் கடக்க தோணி தேவை தான்கடந்த பின்னும் தோணியைச்   சுமந்து கொண்டிருப்பது மூடத் தனம் என்று எண்ணுகிறேன்

உங்களைப் போலவே என்னாலும் அவ்வளவு சுலபமாக பல பேர் முன்னால், என் உள்ளத்தில் உள்ளவற்றை வெளிப்படையாகச் சொல்ல முடிவதில்லைஇது ஏன் என்றும் எனக்குத் தெரியவில்லைவெறும் நல்ல பிள்ளை வேஷம் போடும் முயற்சியா என்று என்னை நானே கேட்டுக் கொண்டால் - இல்லை என்று தான் படுகிறதுஇருந்தாலும், நீங்கள் எழுதியதைப் படித்த போது, "அட, நம்மைப் போலவே இவரும் நினைகிறாரே", என்று நினைத்தேன்.  

தொடர்ந்து எழுதுங்கள்ஆன்மீகத் தேடல் ஒரு சிலருக்கு இயல்பிலேயே அமைந்து விடுகிறது.  உங்களுக்கு அப்படித் தான் என்று நினைக்கிறேன்நீங்கள் தொடர்ந்து அந்த பயிற்சிகளைச் செய்து வருகிறீர்களா?

அன்புடன்,
ராஜா


   
அன்புள்ள ராஜா,
என் பதிவுகளைப் படித்துக் கருத்துச் சொன்னதற்கு மிக்க நன்றி.
ஆன்மிகம் தொடர்பான பதிவுகளை என் புரிதலை மறுபரிசீலனை செய்து கொள்வதற்காகவே நான் எழுதி வந்தாலும், நம் அலைவரிசையை ஒத்த யாரேனும் அதை வாசித்து வருகிறார்கள் என்று அறியும் போது சற்று தெம்பும், உற்சாகமும் கிடைக்கிறது.
நம் போன்று பணிகாரணமாக எங்கெங்கோ சிதறிக்கிடப்பவர்களுக்கு ஒரே குரு என்பது சாத்தியமில்லையென்றே படுகிறது
நான் கடந்த ஒரு வருடமாக வேதாந்தம் பயின்று வருகிறேன். விட்டு விட்டுத்தான். ஸ்வாமி குருபரானந்தர் மற்றும் ஸ்வாமி ஓம்காரனந்தா  ஆகியோரது வகுப்புகளை ஒலி வடிவில் கேட்டு வருகிறேன். என் நண்பன் ஜெயச்சந்திரனின் வழிகாட்டுதலின் பேரில் தான் இவர்கள் அறிமுகமானார்கள். இருவருமே எளிய மனிதர்கள். விளம்பரம் விரும்பாதவர்கள். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்கிறவர்கள். குருபரானந்தரின் உரைகள் 
தமிழில் www.poornalayam.org ல் இலவசமாகவே கிடைக்கின்றன. வேதாந்தம், உபநிஷத், பகவத் கீதை இன்னும் பிற ஆன்மிகத் தலைப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புகள்.  மேலும் நானே முயற்சி செய்து ஒரு முறை பகவத் கீதையைப் படித்தேன். சுவாரஸ்யமாக இருந்தது. நான் பிராணயாமா செய்தது என் மூச்சுக் கோளாறு காரணமாகத்தான். ஆனால் நிரந்தரத் தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.  உடம்பு இளைக்கும் என்று ஆசைப்பட்டு யோகா செய்து பார்த்தேன். அடிக்கடி முதுகு பிடித்துக் கொள்கிறது. மூச்சுப் பிரச்னைக்கு ஜெயச்சந்திரனே வழி சொன்னான். அக்கு பஞ்சர். மூக்கிற்கு இருபுறமும் நான்கு புள்ளிகளில் ஊசி குத்தி பத்து நாள் சிகிச்சை எடுத்ததில் 90% பிரச்னை குறைந்து விட்டது. பிராணயாமா, யோகா  போன்றவற்றின் ஆன்மிக முக்கியத்துவத்தை ரமணர் போன்றவர்களே ஆதரித்தாலும் எனக்கு அந்த மாதிரி அனுபவம் இதுவரை ஏற்படவில்லை. பயிற்சிகள் என்று எதுவும் நான் இப்போது செய்வதில்லை. ஆன்மிகப் படிப்போடு சரி. அதில் முக்கால் வாசி நேரம் இப்போது இலக்கியத்திற்குப் போய் விடுகிறது. சரி அதுவும் ஒருவகை ஆன்மிகத் தேடல்தானே. எனக்கு உங்கள் மூவரின் எழுத்தும் மிகவும் பிடிக்கும். சுருக்கமாக எழுதினாலும், சுருக்கென்று எழுதுகிறீர்கள். வாசகர் அனுபவம் மட்டுமல்ல. எப்போது புதிய பதிவு வந்தாலும் நான் உடனே செல்லும் தளம் பாஸ்கரின் வடிவேலு கோலோச்சும் வரலாறு முக்கியம்.
நம் இந்த உரையாடலை நீங்கள் சம்மதித்தால் என் தளத்தில் பதிவாகப் போட விரும்புகிறேன்.
மீண்டும் நன்றி உங்கள் எதிர்வினைக்கு.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்


அன்புள்ள ஜெகதீஷ்:

பூர்ணலயம் வலை தளத்திற்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றிநானும் கேட்க முயற்சி செய்கிறேன்நீங்கள் நம் பகிர்தல்களை தாராளமாக இணையத்தில் போடுங்கள்உங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நீங்கள் சொன்னது போல், ஒரு குருவை துணை கொள்ளும் வாய்ப்பு நம்மைப் போன்றவர்களுக்கு மிகவும் குறைவு தான்.

தொடர்ந்து உரையாடலாம்உங்கள் தொலை பேசி எண  என்ன?

அன்புடன்,

ராஜா
அன்புள்ள ராஜா,
என் தொலைபேசி எண் 00960 7731390.
gtalk லிருந்து அழைப்பு அனுப்புகிறேன் ஏற்றுக்கொள்ளவும்.
அன்புடன்
ஜெகதீஷ் குமார்

Comments

  1. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
    நானும் பரிந்துரை செய்யலாமா?
    ஆம் என்றால், சமீபத்தில் மனதை பாதித்த இந்த சிறுகதை, ஆயிஷா

    கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை

    தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

    பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

    இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.

    தமிழ்: http://www.eranatarasan.com/download/AYEESHA_tamil.pdf

    ஆங்கிலம்: http://www.eranatarasan.com/download/AYEESHA_english.pdf

    Undoubtedly this has to be read once by every teacher and parent.

    ReplyDelete
  2. நன்றி, anonymous.

    நன்றி,தமிழ் டிஜிட்டல் சினிமா

    நன்றி, விருட்சம்

    உங்கள் பரிந்துரைகளை kbaski@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அது அத்தளத்திலேயே வெளியாகும்.

    ReplyDelete
  3. அன்புள்ள ஜெகதீஷ்,
    நம் முயற்சியைப் பரவலாக எடுத்துச் செல்வதற்கு நன்றிகள். மாலத்தீவுகளின் அழகை நீங்கள் ருசிப்பதைப் பார்த்துப் பொறாமையாக இருக்கிறது. அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியா வரும்போது அந்தப் பக்கம் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசையும் யோசனையும் இருக்கிறது, பார்ப்போம். இங்கு டெக்சாசில், அடித்தால் மொட்டை, வைத்தால் குடுமி மாதிரி கோடையில் 102 -டிகிரி, குளிர்காலத்தில் 30 -டிகிரி. பாண்டிச்சேரி கடற்கரையில் யவ்வனத்தைக் கழித்த நாட்களுக்காக மனம் ஏங்குகிறது.
    -- பாஸ்கர்

    ReplyDelete
  4. மிக்க நன்றி clayhorse!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை